பாண்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
No edit summary |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 26:
|s2 = விஜயநகரப் பேரரசு
|flag_s2 =
|image_flag = Twin fish flag of Pandyas.svg
|flag_type =
|image_coat =
வரிசை 36:
<br /><br /> '''தென்காசிப் பாண்டியர்கள்''': [[தென்காசி]], [[திருநெல்வேலி]], [[கரிவலம்வந்தநல்லூர்|கருவை]]
|common_languages = [[தமிழ் மொழி|தமிழ்]]
|religion = [[சமணம்]], [[பௌத்தம்]], [[வைணவம்]], [[சைவம்]]
|government_type = முடியாட்சி
|leader1 = [[கடுங்கோன்]]
வரிசை 55:
{{தமிழ்நாடு வரலாறு}}
'''பாண்டியர்கள்''' என்பவர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட [[மூவேந்தர்|வேந்தர்]]களுள்
== சொல்லிலக்கணம் ==
வரிசை 61:
== இடம் ==
'''
தனிப்பாடல்களின் திரட்டு நூலான [[பெருந்தொகை]]யில் பாண்டிய நாட்டின் எல்லைகள் பற்றிய பாடல் ஒன்று உள்ளது.
வரிசை 73:
இந்தப் பாடலை 12<sup>ஆம்</sup> நூற்றாண்டில் சோழநாட்டை ஆண்ட [[மூன்றாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில் அவைக்களப் புலவராய் இருந்த கம்பர் பாடியது என்று பாவாணர் சொல்லுகிறார். இப்பாடல் படி, வடக்கில் [[வெள்ளாறு]]ம் மேற்கில் பெருவழியும் தெற்கில் [[கன்னியாகுமரி]]யும் கிழக்கில் [[வங்காள விரிகுடா]] கடலும் எல்லைகளாக இருந்துள்ளன.
பாண்டியர் தங்கள் பெயரில் [[மாறன்]], [[வழுதி]], [[சடையவர்மன்]], [[மாறவர்மன்]], [[வர்மன்]], [[செழியன்]], [[முது குடுமி]] என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர். இவர்களின் குலப்பெயர் பரவலாகப் பாண்டியர் என அறியப்படினும் இவர்கள் [[சந்திர குலம்]], [[தென்னர்]] குலம், [[கவுரியர்]] குலம், [[பஞ்சவர்]] குலம் என்றும் பாடல்களில் போற்றப்படுகின்றனர்.
வரிசை 85:
;புராணங்களில்
பல இந்து மதப் புராணங்களும், தமிழ்
இப்புராணங்கள் படி மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி, இவளது திருமணம் மதுரையில் [[சிவன்|சிவனுடன்]] நடந்தது<ref>திருவிளையாடல் புராணம், திருமணப் படலம்</ref>. சோமசுந்தரப் பெருமானாக மதுரை [[தமிழ்ச் சங்கம்|தமிழ்ச் சங்கத்தில்]] இருந்து [[தமிழ்]] வளர்த்தார் இவர்<ref>{{cite web|url=http://books.google.co.in/books?id=MxraAAAAMAAJ&q=irayanar+kumaravel+tamil+sangam&dq=irayanar+kumaravel+tamil+sangam&hl=en&ei=CDepTtSxGoWsrAeD-J2cDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDEQ6AEwAA|title=Indian Folklore Research Journal|publisher=|accessdate=31 December 2015}}</ref>.[[மதுரை மீனாட்சி]] பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள். அதன் வழிவந்த வழிமுறையினரே [[மௌரியர்]]கள் என்று கருதப்படுகிறது. அந்த வழியில் [[சித்திராங்கதன்]] வந்தான் என்பதும் அவன் மகளே [[சித்திராங்கதை]] என்பதும் குறிப்பிடத்தக்கது.
== வரலாற்றுச் சான்றுகள் ==
[[படிமம்:Map of the Periplus of the Erythraean Sea.jpg|வலது|180px|thumb|முதல் இரண்டு நூற்றாண்டுகளில் [[தமிழர்]] [[யவனர்]]களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர். - [[செங்கடல் செலவு]] ]]
*சுமார் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] '''300''' - [[மெகஸ்தெனஸ்|மெகசிதெனசு]] இந்தியா வருகை. பண்டையா என்னும் அரசு பாண்டியர் நாட்டை ஆண்டதாக குறிப்பு.<ref>Keay, John (2000) [2001]. India: A history. India: Grove Press. {{ISBN|0-8021-3797-0}}.</ref> மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. எரெக்ளீசு (Heracles) என்ற மன்னனுக்கு 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான். அதில் 350 ஊர்கள் இருந்தன. நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=http://books.google.co.in/books?id=YoAwor58utYC&pg=PA44&lpg=PA44&dq=is+mauryas+are+the+descendants+of+pandyas?&source=bl&ots=MNDLOwBLud&sig=_HQaWrfr-K_I4NpLUfaCAkuxIJE&hl=en#v=onepage&q&f=false|title=Age of the Nandas and Mauryas|publisher=|accessdate=31 December 2015}}</ref>
*சுமார் பொ.ஊ.மு. '''60''' – [[நிகோலசு தமாசுகசு]]
*சுமார் [[பொது ஊழி|பொ.ஊ.]] '''1 – 140''' - பிளைனி மற்றும் [[தாலமி]]<ref name="ReferenceA" /> மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர்.<ref>Pliny (77 AD) and Ptolemy (140 AD) wrote of "Madura</ref>
*சுமார் பொ.ஊ. '''1 – 200''' - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் [[தமிழர்]] [[யவனர்]]களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர்.[[செங்கடல் செலவு]] என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் [[:பகுப்பு:தமிழ்நாட்டுத் துறைமுகங்கள்|மூவேந்தர் துறைமுகங்களான]] [[நறவு]], [[தொண்டி (சேரர் துறைமுகம்)|தொண்டி]], [[முசிறித் துறைமுகம்|முசிறி]], [[நீலகண்ட நகரம்]], [[கொற்கை]], [[அழகன்குளம்]], காலப்பட்டினம், [[பாண்டிச்சேரி]], [[எயிற்பட்டினம்]] போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.
வரிசை 100:
* சுமார் பொ.ஊ. '''1268'''-'''1310''' – [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியனின்]] ஆட்சியில் [[மதுரை]] உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக [[மார்க்கோ போலோ]] குறிப்பு.<ref>{{cite web|url=http://ww1.findthedata.org/|title=findthedata.org - findthedata Resources and Information.|work=ww1.findthedata.org|access-date=2020-02-04|archive-date=2020-11-07|archive-url=https://web.archive.org/web/20201107002907/http://ww1.findthedata.org/|url-status=dead}}</ref> பாண்டியர்களுக்கும் [[ஏமன்]] நாட்டவர்க்கும் 1289ஆம் ஆண்டில் சிறந்த குதிரை வணிகம் நடந்ததாக [[இபின் பட்டுடா]] குறிப்பு.<ref name="வெளி">{{cite book | title=தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாடினர் குறிப்புகள் | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் | author=கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி | authorlink=அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா | year=1976 | location=சென்னை | pages=215 – 217, (265, 294), (265-282, 294-296)}}</ref>
மகத நாட்டு அரசர்கள் [[மௌரியர்]]கள். மௌரிய அரசன் [[பேரரசர் அசோகர்]] கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.
[[படிமம்:Koneswaram incription Pandyan era.jpeg|[[திரிகோணமலை]]யில் பாண்டியர் ஆட்சி|150px|thumb]]
[[இலங்கை]]யை ஆண்ட [[விசயன் (இலங்கை அரசன்)|விசயன்]] தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான். அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று [[மகாவம்சம்]] கூறுகின்றது.
பாண்டியர்கள் [[சந்திர குலம்|சந்திர குலத்தைச்]] சார்ந்தவர்கள் எனவும். [[வேம்பு|வேப்பம் பூ]] மாலை அணிந்தவர்கள் எனவும் [[பாண்டியர் கொடி|மீன்கொடி]]யினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், [[கல்வெட்டு]]க்கள், சாசனங்கள் மற்றும் [[மெய்க்கீர்த்திகள்|மெய்க்கீர்த்திகளும்]] வரலாற்று மூலங்களாக உள்ளன.
== பாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி ==
[[படிமம்:Pallava kingdom in kalapirar period.jpg|180px|thumb|வலது|களப்பிரருக்கு கீழடங்கிய பாண்டியர் (அடர் பச்சை நிறம்), [[இராசராட்டிரப் பாண்டியர்]] - பொ.ஊ. 436 – 463 (நீலம்)]]
[[வட நாடு|வடநாட்டில்]] [[பல்லவர்]]களால் அடித்துவிரட்டப்பட்ட [[களப்பிரர்]] பொ.ஊ. 300-600 [[கன்னட நாடு]] வழியாக [[கொங்கு நாடு|கொங்கு நாட்டிலும்]], [[சேரர்|சேர]], [[சோழர்|சோழ]], பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர். களப்பிரர்களைத் தொடர்ந்து வந்த [[பல்லவர்]] ஆட்சிக்காலமான பொ.ஊ. 350 – 550 வரையிலும் பாண்டியப் [[பேரரசு]] பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.ஆனாலும் [[கடுங்கோன்]] ஆட்சிக் காலத்தில் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.பல்லவர்களின் தாக்கமும் களப்பிரர்களை வீழ்த்தியது. இதன்பின்னர் இடைக்காலப் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.
பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் பொ.ஊ. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. [[இராஜராஜ சோழன்|இராசராசன்]] மகனான [[இராஜேந்திர சோழன்|இராசேந்திர சோழனின்]] மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன், [[பராக்கிரம பாண்டியன்]] மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டிய நாட்டிற்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்கு முரண்பட்ட பாண்டியர்களை [[திறை]] செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
[[கில்ஜி வம்சம்|கில்சி பேரரசின்]] மன்னன் [[மாலிக்காபூர்|மாலிக்காபூரிடம்]] பாண்டிய மன்னனான [[சுந்தரபாண்டியன்|சுந்தரபாண்டியனால்]] தன் தம்பியான [[இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்|இரண்டாம் வீரபாண்டியனை]] வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. [[சயாவுடீன் பார்னி]] , [[அமீர்குசுரு]], [[வாசப்]] போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த [[பொன்]], [[பொருள்]]களைக் கொள்ளையிட்டு [[சிற்பம்|சிற்பங்கள்]] பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான்<ref>தமிழர் நாகரிகமும் பண்பாடும், டாக்டர் அ.தட்சிணாமூர்த்தி, பக்கம்-448, மறுபதிப்பு, சூலை 2008, ''தமிழ் பண்பாட்டில் இசுலாம் சமயம்''</ref>. மேலும் கொள்ளையிட்ட பொருள்களை [[தில்லி|தில்லிக்குக்]] கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் மற்றும் [[இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்|இரண்டாம் வீரபாண்டியன்]] போன்றோரிடமிருந்து மாலிக்காபூர் 612 [[யானை]]கள், 20,000 [[குதிரை]]கள், 96,000 மணங்கு [[பொன்]], [[முத்து]] மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என [[பார்னி]] என்பவன் குறித்துள்ளான்<ref>Keay, J. India, 2001, Grove Press; {{ISBN|0-8021-3797-0}}</ref>. 1320களில் மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றி 1378ஆம் ஆண்டு வரை ஆண்டான். அவன் வழி வந்தவர்கள் நாயக்கர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள்.<ref>அ.கி. பரந்தாமனார், மதுரை நாயக்கர் வரலாறு</ref> 1330 ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டில் முகமதியர் ஆட்சி நுழைந்தது. தில்லி [[துக்ளக்]]கின் அதிகாரியாகத் திகழ்ந்த '[[ஜலாலுடீன் அசன்சா|செலாலுதீன் அசன்சா]]' [[மதுரை]]யினைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் [[அல்லாவுடீன் உடான்றி]], [[குட்புதீன்]], [[நாசிருடீன்]], [[முகமது அடில் ஷா|அடில்சா]], [[பஃருடீன் முபாரக் ஷா|பஃருடீன் முபாரக் சா]], [[அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா|அல்லாவுதீன் சிக்கந்தர்சா]] போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் [[நாணயம்|நாணயங்கள்]] வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் [[புதுக்கோட்டை]]யில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. [[இபின்படூடா]] என்பவரின் குறிப்பின் படி இம்மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள், கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு, விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் துன்புற்றனர் என அவர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வரிசை 144:
இம்மன்னர்களது கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் போசள மன்னனான [[மூன்றாம் வீர வல்லாளன்|மூன்றாம் வீரவல்லாள தேவனும்]] போர்க்களத்தில் இறந்தான் இச்செய்தியை விசயநகர அரசனொருவன் அறிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாண்டியர் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சமயம் [[வாணாதிராயர்]]கள் பலர் இருந்தனர். புதுக்கோட்டை [[கோனாடு]] இருந்த பொழுது [[பிள்ளை குலசேகர வாணாதிராயன்]] ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்தில்]] [[கேரள சிங்கவள நாடு]] இருந்தது அங்கு [[வாணாதிராயன்]] என்பவன் ஆட்சி செய்தான். இவர்களின் பின்னர் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது.
சிரீவல்லிபுத்தூரில் 1453 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டில் "மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் [[மதுராபுரி நாயகன்]], [[பாண்டிய குலாந்தகன்]] எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொ.ஊ. 1483 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டொன்றின்படி மாவலிவாணாதிராயர் பாண்டியருக்குத் திறை செலுத்தினர் எனக்குறிப்பிடும். பாண்டியர் வலிமை குன்றிய வேளை ராயர்கள் [[மதுரை]]யினை ஆட்சி செய்துள்ளனர். [[புதுக்கோட்டை]] [[குடுமியான் மலைக் கல்வெட்டு|குடுமியான் மலைக் கல்வெட்டில்]] பாண்டியர் ராயரிடம் போரில் தோற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்தது பாண்டியர்களின் ஆட்சி இக்காலத்தில் இல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பொ.ஊ. 1310 முதல் 1748 ஆம் ஆண்டு வரை தமிழகத்தினை [[விஜயநகரப் பேரரசு|விசயநகரப் பேரரசு]] ஆண்டது. [[நாயக்கர்|நாயக்க மன்னர்கள்]] அரசியல் அதிகாரிகளாக ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள் ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கோயில்கள், மண்டபங்கள், சிற்பக் கூடங்கள், உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் போன்றனவை சிறப்பம்சமாக விளங்கின.[[சேரர்|சேர]], [[சோழர்|சோழ]], பாண்டியர் போன்ற பேரரசுகள் விசய நகரப் பேரரசு காலத்தில் வீழ்ச்சியுற்றிருந்தன. பல பாண்டிய மன்னர்கள் குறுநில மன்னர்களாக இருந்து விசய நகரப் பேரரசிடம் திறை செலுத்தியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வரிசை 168:
== பாண்டியர் ஆட்சி இயல் ==
[[தமிழகம்|தமிழகத்தின்]] தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது. மேற்கே சேர நாடும், மலை நாடும்; கிழக்கே கடல், வடக்கே சோழ நாடும், கொங்கு நாடும்; தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன. இன்றைய [[மதுரை]], [[திருநெல்வேலி]], [[இராமநாதபுரம்]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]], [[புதுக்கோட்டை]] வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம். சங்க காலத்தில் [[ஊர்]], [[கூற்றம்]], [[மண்டலம்]], [[நாடு]] என்ற பிரிவில் அமைந்திருந்தன.
{{cquote|
வரிசை 257:
== பாண்டியநாடு பிரிவுகள்{{cn}} ==
* [[
* [[பொங்கலூர்கா நாடு]], [[வைகாவூர் நாடு]] பழனி வட்டம்,
* [[
* [[
* [[
* [[பூம்பாறை நாடு]] கொடைக்கானல் வட்டம்,
* [[
* [[
*[[கானாடு
* [[கோனாடு]]
* [[மிழலை நாடு]] ஆவுடையார்கோவில் வட்டாரம்
* [[
*
வரிசை 274:
பாண்டியர்களின் இயற்பெயரும், சிறப்புப் பெயரும் வளநாடு பெயராக அமைந்தன.
[[அரசன்]], [[அரசி]], [[இளவரசன்]], [[பட்டத்தரசி]] என்ற முறையில் குடும்பம் அமைந்தது. பாண்டிய அரசன், வேந்தன் எனப்பட்டான். பட்டத்தரசி, பாண்டிமாதேவி எனப்பட்டாள். சில பாண்டிய அரசர்கள், பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர். புராணங்களின் படி பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு [[போர்|போரும்]] செய்திருக்கின்றனர். அரசனின் மூத்த மகனே இளவரசு பட்டம் பெற இயலும். இதனால், மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு. [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்]] மகன்கள் [[வீரபாண்டியன்]], [[சுந்தர பாண்டியன்]] ஆகிய பாண்டிய வேந்தர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
[[ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்]], தன் ஊழ்வினையால், [[கண்ணகி]] நீதி கேட்டதால் இறந்தான். அந்நேரம், இளவரசனாக [[கொற்கை]]யில் இருந்த [[வெற்றுவேற்செழியன்]], மதுரைக்கு வந்து முடிசூடினான். ஐந்து பேர் ஒரே காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது. ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி, தந்தை மகன் கருத்து வேறுபாடுகள் வந்தபோது, ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற ஒரு நிகழ்வு பிற்காலப் பாண்டியரின் வரலாற்றில் இருந்தது.<ref>[[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்]] அவன் மகனால் கொல்லப்பட்டான் என கருதப்படுகிறது.</ref>
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் [[அமைச்சர்]]கள். அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள், படைத் தலைவர்கள் இருந்தனர். அரையர், நாடுவகை செய்வோர். வரியிலார், புரவுவரித் திணைக்களத்தார், திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.
வரிசை 298:
|பேரரையன்
|விசையரையன்
|தென்னவன்
|தென்வன் தமிழவேள்
|காவிரி
வரிசை 318:
காவிரி, ஏனாதி பட்டம் பெற்றவர்களுக்கு [[பொற்பூ]], [[மோதிரம்]], [[இறையிலி நிலம்]] அளித்துக் கௌரவிப்பது பாண்டியர்களின் வழக்கமாகும்.
பாண்டியர் காலத்தில் வரியை [[இறை]] என்றழைத்தனர். இறை பெறுதல் முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது. குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர். விளைநெல், [[காசு]], [[பொன்]] வரியாகக் கொடுத்தனர். ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர். தளியிறை, செக்கிறை, தட்டார்ப் பட்டம், இடைவரி சான்று வரி, பாடிகாவல், மனையிறை, உல்கு முதலான வரி முறைகள் இருந்தன. இறை, பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன. தட்டார்ப்
ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது. பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது. நாடு வகை செய்வோர் அளந்தனர்.நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது.
24 அடி கொண்ட [[தடி]]யாகும் இக்கோல். குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது. நிலங்களை குழி, மா, வேலி என்று பெயரிட்டு அளந்தனர். அளந்த நிலத்திற்கு [[எல்லைக் கல்]] நாட்டனர். இக்கற்களே புள்ளடிக் கற்களாகும். சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு '''திரிசூலக்கல்''' நடப்பட்டது. திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு '''திருவாழிக்கல்''' நடப்பட்டது. நீர் நிலம் நன்செய் எனவும் மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது. நத்தம், தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை '''இறையிலி''' என அழைக்கப்பட்டது. சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி '''தேவதானம்''' என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு '''திருவிடையாட்டம்''' என்று பெயர். [[சமணம்|சைன]], [[பௌத்தம்|பௌத்த]] கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை '''பள்ளிச்சந்தம்''' என அழைக்கப்பட்டது.[[அந்தணர்]]களுக்கு
வழங்கப்பட்டது '''
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக் காலங்களில் புழக்கத்தில் இருந்து
வந்திருக்கின்றன. எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். [[பொன்]], [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]], [[கழஞ்சு]], [[காணம்]] ஆகிய நிறை கற்களால் நிறுத்தனர், [[வெல்லம்|சர்க்கரை]], [[காய்கறிகள்]], [[புளி]] ஆகியவற்றை துலாம், பலம் என்பவற்றால் நிறுத்தனர். [[சேர்]], மற்றும் மணங்காலும் நிறுக்கப்பட்டன. [[நெல்]], [[அரிசி]], [[உப்பு]], [[நெய்]], [[பால் (உயிரியல்)|பால்]], [[தயிர்]], [[மிளகு]], [[சீரகம்]], [[கடுகு]] ஆகியன [[செவிடு]], [[ஆழாக்கு]], [[உழக்கு]], [[உரி]], [[நாழி]], [[குறுணி]] போன்ற முகறும் கருவிகளால் அளக்கப்பட்டன்.
வரிசை 345:
* 16 குறுணி - ஒரு கலம்
இவ்வாறான அளவு முறைகள் பாண்டிய நாட்டில் இருந்தன, [[சங்க காலம்]] முதல் 13
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் [[நாணயம்|நாணயங்கள்]] வெளியிடப்பட்டன. [[பொன்]], [[செம்பு|செம்பால்]] செய்யபட்ட [[காசு]]கள் புழக்கத்தில் இருந்தன. மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள். பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டென மதிக்கப்படும் [[தமிழர் முத்திரை காசுகள்|முத்திரை காசுகள்]], பொ.ஊ.மு.
▲பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் [[நாணயம்|நாணயங்கள்]] வெளியிடப்பட்டன. [[பொன்]], [[செம்பு|செம்பால்]] செய்யபட்ட [[காசு]]கள் புழக்கத்தில் இருந்தன. மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள். பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டென மதிக்கப்படும் [[தமிழர் முத்திரை காசுகள்|முத்திரை காசுகள்]], பொ.ஊ.மு. 3–2ஆம் நூற்றாண்டென மதிக்கப்பெறும் [[பெருவழுதி நாணயம்]] போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான். இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான். 1253
பாண்டியர் ஆட்சியில் ஊர் தோறும் ஊரவை இருந்துவந்தது. ஊராட்சியினை இது செயல்பட வைத்தது. குடவோலை முறையில் ஊர்த் தலைவரை தேர்ந்தெடுத்தனர். சிற்றூர் பல சேர்ந்து கிராம சபை அமைத்தனர். நிலமும், கல்வியும், மனையும், அறநெறியும் உடையவர்கள் மட்டுமே ஊரவை உறுப்பினர்களாக முடுயும்.ஊர்களிற்குப் பொது மன்றங்கள் இருந்தன. அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் ஊரவை நடைபெற்றது.நீதி விசாரணைக்கு ஊரவையில் உட்கழகங்கள் இருந்தன. வாரியங்கள் என்ற பெயரில் இவை அமைந்தன.
அவை பின்வருமாறு:-
வரி 372 ⟶ 371:
என்று (அகம்-77) அகப்பாட்டில் கூறியுள்ளார். இவ்வரிகளில் கூறியபடி பாண்டியர் காலத்தில் [[குடவோலை]] முறை இருந்தது என்பதனை அறியலாம். [[நெல்லை]]யில் மானூரில் கல்வெட்டு ஊரவை உறுப்பினரின் தகுதி பற்றி குறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு அலுவலகம் பாண்டியர் காலத்தில் '''ஆவணக்களரி''' என்றழைக்கப்பட்டது. ஒவ்வோர் [[ஊர்|ஊரிலும்]] எழுதப்பட்ட ஆவணங்களைக் காப்பிட ஆவணக்களரி இருந்தது. இதனை ஆவணக்களம் என்றழைத்து வந்திருக்கின்றனர். இப்பகுதிக்குப் பொதுவாக நிலம் விற்போர் வாங்குவோர் சென்று தம் நிலத்திற்கு உரிய விலை, பரப்பு, நான்கெல்லை குறிக்கப்படும். விற்போர் உடன்பட்டு உறுதிமொழியில் கையொப்பம் இடவேண்டும், ஆவணங்களை கோவில் சுவரில் பொறித்து வைப்பதும் உண்டு. ஆவணக்களரி மக்களின் உரிமைக்கும், சொத்துக்கும் பாதுகாப்புத் தருவதாக அமைந்திருந்தன. மக்கள் பயன்கருதி பாண்டியர் ஆட்சி நடைபெற்ற அனைத்து ஊர்களிலும் இது செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=http://tamilarhistory.weebly.com/page2.html|title=பாண்டியன் தமிழ் பேரரசன் - Tamilar History (தமிழர் வரலாறு)|publisher=|accessdate=31 December 2015}}</ref>
[[யானைப்படை]], [[குதிரைப்படை]], [[காலாட்படை]], [[தேர்ப்படை]] போன்ற நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பாண்டியர். [[கொற்கை]], [[தொண்டி (பாண்டிநாட்டுத் துறைமுகம்)|தொண்டி]] துறைமுகங்களில் வெளிநாட்டுக் [[குதிரை]]கள் ஆண்டுதோறும் வந்திறங்கியது. ஆண்டுக்கு பதினாராயிரம் குதிரைகள் வந்தன என '[[வாசப்]]' கூறியுள்ளான்,[[மார்க்கோபோலோ]] "குதிரைகள் வாங்க மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர்" என்று பாண்டியர்களைப் பற்றிக் குறித்துள்ளார். வாட்போர்வல்ல பெரிய காலாட்படை இருந்தது பாண்டியர் ஆட்சிக்காலத்தில். "'''பெரும் படையோம்'''"எனக் கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில் இருந்தது. ''''முனையெதிர் மோகர்'''' ''''தென்னவன் ஆபத்துதவிகள்'''' போன்ற படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வரி 384 ⟶ 383:
"''முத்தமிழரசரிடமும் யானைப்படை மிகுதியாயிருந்தது. சோழவேந்தனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததாக ஒரு சீன வழிப்போக்கன் கூறியிருப்பதால், யானை இயல்பாகக் கூட்டங் கூட்டமாய் வாழும் குடமலைத் தொடரையுடைய சேரனிடத்தும் பாண்டியனிடத்தும், அவை எத்துணைப் பெருந்தொகையினவாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகித்துணர்ந்து கொள்ளலாம்.''"}} - [[பாவாணர்]]<ref>பழந்தமிழாட்சி, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பக்கம் - 42</ref>
;ஆதாரக் கட்டுரை - [[பாண்டியர் துறைமுகங்கள்]]
[[படிமம்:Portsofpandyantrade.jpg|thumb|270px|பாண்டியர்த் துறைமுகங்கள் பொ.ஊ.மு. 500 - பொ.ஊ. 1400]]
வரி 402 ⟶ 401:
இவ்விரு [[அகநானூறு|அகநானூற்றுப்]] பாடல்களும் [[கொற்கை முத்து]] பற்றிக் கூறுகின்றன. மேலும் [[மதுரைக்காஞ்சி]], [[சிறுபாணாற்றுப்படை]], [[சிலப்பதிகாரம்]] ஆகிய நூல்களிலும் இவ்வகைச்செய்திகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல், சங்கறுத்தல், வளையல் செய்தல், உப்பு விளைவித்தல், நூல் நூற்றல், ஆடை நெய்தல், வேளாண்மை செய்தல், ஆடு,மாடு மேய்த்தல் போன்ற பல தொழில்களும் செய்து வந்தனர். மதுரையில் நுண்ணிய பருத்தி நூலினாலும், எலி மயிரினாலும், பட்டு நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன எனச் சிலப்பதிகாரப் பாடல்வரிகளான இவ்வரி விளக்கும்.
{{cquote|
வரி 413 ⟶ 412:
[[முத்து]], [[பவளம்]], [[மிளகு]], பலவகை பட்டாடைகள் மேனாடுகளுக்கு அனுப்பப்பட்டன. மேனாடுகளிருந்து குதிரைகளும், [[மது]] வகைகளும், கண்ணாடிப் பொருள்களும் கொற்கைத் துறைமுகத்திற்கு வந்திறங்கின. சுங்க வரியினால் ஆண்டுதோறும் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது. கப்பல்கள் திசைமாறாமல் இருக்க துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டு வணிகர்களும் யவனர்களும் (கிரேக்கர்களும், உரோமர்களும்), சோனகரும் (அரேபியர்கள்), பாண்டிய நாட்டு மக்களுன் அன்புடன் பழகினர் என்பது குறிப்பிடத்தக்கது. வணிகத்திலும், கைத்தொழிலிலும் சிறந்து விளங்கிற்று பாண்டிய நாடு. பண்டைக் காலத்தில் தமிழகத்தின் பாண்டி நாட்டில் தான் வணிகமும், வெளிநாட்டார் தொடர்பும் சிறப்புற்று இருந்தது.
பாண்டிய நாடு சங்கம் வைத்து [[தமிழ்]] வளர்த்த பெருமையைப் பெற்றிருந்தது. புலமை நலம் சான்ற முடிமன்னர்களும் இருந்தனர். [[ஆண் (மனிதர்)|ஆண்]], [[பெண்]] இருபாலரும் கல்வி கற்றனர். கல்வியின் சிறப்பை [[நெடுஞ்செழியன்]] போல் யாரும் பாண்டியராட்சியில் கூறியதில்லை எனலாம் அதற்கு எடுத்துக்காட்டாக
{{cquote|
வரி 479 ⟶ 478:
செந்தமிழ்நாடு என்று பாண்டிய நாட்டை மட்டுமே [[இளங்கோவடிகள்]], [[சேக்கிழார்]], [[கம்பர்]] ஆகியோர் கூறியுள்ளனர்.[[தொல்காப்பியம்]], [[திருக்குறள்]] அரங்கேற்றப்பட்டது இங்கென்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தொண்டெனில் அது பாண்டி மண்டலந்தானாகவிருந்தது. பாலாசிருயர், கணக்காயர் தமிழ் கற்பித்தனர். ஆசிரியர் புலவராகவும் இருந்தனர். [[குரு|குருவே]] தெய்வம் என்றனர். பாண்டிய நாட்டில் குலவேறுபாடு இன்றி கல்வி கற்றனர். கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பாண்டிய நாட்டில் நிலவியது.
[[உமையாள்]] [[மதுரை மீனாட்சியம்மன் கோவில்|மதுரை மீனாட்சியாக]] வந்து பாண்டியன் மகளாகப் பிறந்தாள் என்றும் பின்னர் [[சிவன்|சோமசுந்தரப் பெருமானை]] மணந்தாள் என்றும் பாண்டி நாட்டை சோமசுந்தரர் ஆண்டார் என்று [[புராணம்|புராணங்கள்]] கூறும். பாண்டிய [[வரலாறு|வரலாற்றினைக்]] கூறும் இலக்கிய நூற்களிலும் இவ்வாறு ஆட்சி செய்தார்கள் எனச் சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாண்டியர் ஆட்சியில் [[சைவ சமயம்|சைவ சமயமே]] தழைத்தோங்கியிருந்தது. ஆனாலும் [[வைணவம்]], [[சமணம்]], [[புத்த மதம்]] போன்ற பிற [[மதம்|மதங்களும்]] இருந்தன.சிவன் கோயிலில் [[விண்ணகரங்கள்]], [[அருகன் கோட்டங்கள்]], [[புத்த பள்ளிகள்]] போன்றனவையும் அடங்கியிருந்தன. அனைத்து மதத்திற்கும் மதிப்பளிக்கப்பட்டிருந்தன. கோயில்களுக்கு '''நிபந்தங்கள்''', '''இறையிலிகள்''' விடப்பட்டன. பாண்டிய அரசர்கள், [[அமைச்சர்]], அதிகாரிகள், மேற்பார்வையில் கோயில்கள் கட்டப்பெற்றன. [[சங்க காலம்|சங்க காலத்தில்]] சமயப் பூசல்கள் தோற்றம் பெறவில்லை. 17 ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில் [[சமயப் பூசல்கள்]] தோற்றம் பெற்றன. மன்னர்களும், அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் [[பிறந்த நாள்|பிறந்த நாளில்]] [[கோயில்]]களில் [[விழா]] எடுத்து மகிழ்ந்தனர். அதற்கென [[நிலம்]] அளிக்கப்பட்டன. [[தேவாரம்]], [[திருவாய் மொழிகள்]] போன்றன ஓதப்பட்டன.[[இயல்]], [[இசை]], [[நடனம்]], [[கூத்து]] முதலியன நடைபெற்றன. [[செங்கற் கோயில்கள்]], [[கற்றளி]]கள், [[செப்புத் திருமேனிகள்]] [[கல்படிமங்கள்]], அமைக்கப்பட்டு [[அணிகலன்கள்|அணிகலன்களை]] வழிபாடு செய்யத் [[தானம்]] செய்தனர். கோயில் வழிபாட்டுத் தலமாக அன்றி [[பொருள்]], [[பணம்]] சேர்த்து வைக்கும் இடமாகவும் விளங்கியது. கோயிலின் [[பொதுப்பணம்]] மக்களுக்குக் [[கடன்|கடனாகக்]] கொடுக்கப்பட்டது. தினமும் கோயில்களில் [[அன்னதானம்]] வழங்கப்பட்டது. [[புத்தகசாலை]]கள் கோயில்களில் அமைக்கப்பெற்றிருந்தன. கோயில் காரியங்களை ஊர் அவையோரும் அதிகாரிகளும் செய்தனர். கோயில் மற்றும் அறநிலையங்கள் திட்டப்படி நடக்கின்றனவா என கவனிக்கப்பட்டன. [[தவறு]]கள் இழைப்போர் [[தண்டனை]]யும் பெற்றனர். கோயிலில் அமைந்த [[கல்வெட்டு]]க்கள் வரலாற்று ஏடுகளாக அமைந்திருந்தன. கோயில் புதுப்பிக்கும் சமயம் படியெடுத்துவைத்துப் புதுப்பித்தனர். மீண்டும் அவை பொறிக்கப்பட்டன.
வரி 520 ⟶ 519:
|}
== மேலும்
* [[பாண்டிய அரசர் காலநிரல்]]
* [[உச்சங்கிப் பாண்டியர்]]
வரி 529 ⟶ 528:
* [[தமிழ் மன்னர்களின் பட்டியல்]]
* [[இந்திய-உரோம வர்த்தக உறவுகள்]]
* [[கேரள வரலாறு]]
* [[தமிழக வரலாறு]]
== மேற்கோள்கள் ==
வரி 539 ⟶ 540:
== வெளி இணைப்பு ==
* [http://www.newindianews.com/view.php?22oMC303lOI4e2DmKcb240Wdd204Kbc2mDDe43Old023gAS3 1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளம் கண்டுபிடிப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20150620234410/http://www.newindianews.com/view.php?22oMC303lOI4e2DmKcb240Wdd204Kbc2mDDe43Old023gAS3 |date=2015-06-20 }}
* {{commons category-inline|Pandyan Dynasty|பாண்டியர் வம்சம்}}
{{பாண்டிய மன்னர்கள்}}
[[பகுப்பு:பாண்டியர்]]
| |||