பொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m சிNo edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 33:
வெப்பமண்டலப் பொழில்கள் பொதுவாக நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் அந்தந்த அடுக்குகளுக்கு இசைவாக்கம் பெற்ற விலங்குகளும், தாவரங்களும் காணப்படுகின்றன. இந்நான்கு அடுக்குகள் வெளிப்படு அடுக்கு, மரக்கவிகை அடுக்கு, மரக்கீழ் அடுக்கு, காட்டுத்தரை என்பன.
வெளிப்படு அடுக்கில் குறைந்த எண்ணிக்கையிலான மிகப் பெரிய மரங்கள் இருக்கும். இவை பொதுவான மரக் கவிகைக்கு மேலாக வளர்ந்து 45-55 [[மீட்டர்]] உயரத்தை எட்டுகின்றன. சில வேளைகளில் சில மரங்கள் 70-80 மீட்டர் உயரத்துக்கு வளர்வதும் உண்டு.<ref>{{cite book |last= Bourgeron |first= Patrick S.|editor= Frank B. Golley |title=Tropical Rain Forest Ecosystems. Structure and Function |year= 1983 |edition= 14A|series= Ecosystems of the World |publisher= Elsevier Scientific |isbn= 0-444-41986-1 |pages= 29–47 |chapter= Spatial Aspects of Vegetation Structure}}</ref><ref>{{cite web | url = http://www.nativetreesociety.org/worldtrees/sea_ei/malaysia/sabah2005.htm | title = Sabah | publisher = [[Eastern Native Tree Society]] | accessdate= 2007-11-14}}</ref> மரக்கவிகைகளுக்கு மேல் இருக்கக்கூடிய உயர்ந்த வெப்பநிலைகளையும், கடுங் காற்றையும் தாக்குப்பிடிக்க வேண்டிய நிலை இவற்றுக்கு உண்டு. [[கழுகு]]கள், [[வண்ணத்துப் பூச்சி]]கள், [[வௌவால்]]கள், சிலவகைக் [[குரங்கு]]கள் போன்றவை இந்த அடுக்கில் வாழுகின்றன.
.[[படிமம்:FRIM canopy.JPG|thumb|250px|மலேசியக் காட்டு ஆய்வு நிறுவனத்தில் காணப்படும் மரக்கவிகை]]
30 மீட்டர் (98 அடி) முதல் 45 மீட்டர் (148 அடி) வரை வளரக்கூடிய மிகப்பெரிய மரங்களிற் பெரும்பாலானவை மரக்கவிகை அடுக்கிலேயே காணப்படுகின்றன. மரங்களின் மேற்பகுதிகள் ஏறத்தாழத் தொடர்ச்சியாகக் காணப்படுவதால், [[உயிரிப்பல்வகைமை]]யின் அடர்த்தி கூடிய பகுதிகள் இந்த அடுக்கிலேயே உள்ளன. சில மதிப்பீடுகளின்படி உலகின் 50% அளவான தாவர வகைகளின் வாழிடம் மரக்கவிகை அடுக்கே எனத் தெரியவருகிறது. இதிலிருந்து, உலகின் மொத்த உயிரினங்களில் அரைப்பங்கு இந்த அடுக்கிலேயே வாழக்கூடும் என்பதும் சாத்தியமே. [[மழை]]யில் இருந்தும், தாங்கும் மரத்தில் சேரும் சிதைபொருட்களில் இருந்தும் நீரையும், [[கனிமம்|கனிமங்களையும்]] பெறும் [[மேலொட்டித் தாவரம்|மேலொட்டித் தாவரங்கள்]] அடிமரங்களிலும் மரக்கிளைகளிலும் பற்றிக்கொண்டு வாழுகின்றன. வெளிப்படு அடுக்கில் உள்ளது போன்ற விலங்குகளே இங்கும் வாழ்ந்தாலும், இங்கு கூடிய [[பல்வகைமை]] காணப்படுகின்றது. இந்த அடுக்கு ஒரு வளம்மிக்க வாழிடம் என அறிவியலாளர்கள் நீண்டகாலமாகவே கருதி வந்தாலும், நடைமுறையில் இதை ஆராய்வதற்கான வழிமுறைகள் அண்மையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. 1917 ஆம் ஆண்டிலேயே [[வில்லியம் பீபே]] என்னும் இயறை ஆய்வாளர், உயிர்கள் வாழும் இன்னொரு கண்டம் கண்டுபிடிக்கப்பட வேண்டி இருப்பதாகவும், அது புவியில் அன்றி, அதிலிருந்து 100 தொடக்கம் 200 அடிகளுக்கு மேல் பல ஆயிரம் [[சதுர மைல்]]களுக்குப் பரந்துள்ளது என்றும் கூறியிருந்தார். இந்த வாழிடம் தொடர்பான உண்மையான ஆய்வுகள் 1980களிலேயே தொடங்கின. கயிறுகளை அம்புகள் மூலம் மரக்கவிகைகளுக்கு எய்து அவற்றை எட்டுவது போன்ற வழிமுறைகளை அறிவியலாளர்கள் உருவாக்கிய பின்னரே இது சாத்தியம் ஆயிற்று.
[[படிமம்:Forest in the bluemountains.jpg|thumb|250px|ஆசுத்திரேலியாவின் நீல மலைகளில் உள்ள பொழில்கள்]] மரக்கீழ் அடுக்கு, மரக்கவிகை அடுக்குக்கும், காட்டுத்தரைக்கும் இடையில் அமைந்துள்ளது. மரக்கீழ் அடுக்கு [[பறவை]]கள், [[பாம்பு]]கள், [[பல்லி]]வகைகள் ஆகியவற்றுடன், [[சிறுத்தை]] முதலிய [[கொன்றுண்ணி]]களுக்கும் வாழிடமாக உள்ளது. இந்த அடுக்கில் இலைகள் பெரிதாக இருக்கும். பூச்சி வகைகளும் பெருமளவில் காணப்படுகின்றன. மரக்கவிகை அடுக்குக்கு வளரவுள்ள மரக்கன்றுகள் பலவும் இந்த அடுக்கில் காணப்படும். இந்த அடுக்கைச் செடி அடுக்கு என்றும் சொல்லலாம். செடி அடுக்கை இன்னொரு அடுக்காகவும் கொள்வது உண்டு.
எல்லா அடுக்குகளுக்கும் கீழாக அமைந்திருப்பது காட்டுத்தரை. இது 2% ஆன [[சூரிய ஒளி]]யையே பெறுகிறது. குறைவான சூரிய ஒளிக்கு இயைபு பெற்ற தாவரங்கள் மட்டுமே இந்த அடுக்கில் வளர முடியும். அடர்த்தியான நிலமட்டத்திலான தாவர வளர்ச்சிகளைக் கொண்ட ஆற்றங்கரைகள், சதுப்பு நிலங்கள், மரங்கள் வெட்டி அழிக்கப்பட்ட பகுதிகளுக்கு அப்பால், காட்டுத்தரை வளர்ச்சிகள் அற்ற வெளியாகவே இருக்கக் காணலாம். குறைவான சூரிய ஒளி கிடைப்பதே இதற்குக் காரணம். இந்த அடுக்கு சிதைவடைந்து கொண்டிருக்கும் தாவரப் பொருட்களையும் விலங்குப் பொருட்களையும் கொண்டிருக்கும். இளஞ்சூடான, ஈரப்பற்றுக்கொண்ட சூழலில் இவை விரைவாகவே சிதைந்து விடுவதால் விரைவாகவே மறைந்து விடுகின்றன.
| |||