கமுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 20:
'''கமுதி''' ([[ஆங்கிலம்]]:Kamuthi), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கமுதி வட்டம்|கமுதி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது கவின்மிகு முல்லை திருநகர் என்றும் அழைக்கப்படுகிறது.{{cn}} உலகில் மிகப்பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இங்குச் செயல்பட்டு வருகிறது.<ref>[https://www.bbc.com/news/av/technology-39963455/kamuthi-the-world-s-largest-solar-power-project Kamuthi: The world's largest solar power project]</ref><ref>[https://en.wikipedia.org/wiki/Kamuthi_Solar_Power_Project Kamuthi Solar Power Project]</ref>
 
கமுதி பேரூராட்சி [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்திலிருந்து]] 85 கி.மீ தொலைவிலும், [[மானாமதுரை]]யிலிருந்து 39 கி.மீ தொலைவில் உள்ளது. [[பரமக்குடி]], [[மதுரை]], [[அருப்புக்கோட்டை]], இராமநாதபுரத்திலிருந்து கமுதிக்குப் பேருந்து வசதிகள் உள்ளது. கமுதி நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== மக்கட் தொகை ==
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,379 வீடுகளும், 14,754 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803808-kamuthi-tamil-nadu.html கமுதி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
இது 5.10 சகிமீசகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும்,101 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது, [[முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kamuthi கமுதி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== கமுதி சந்தை ==
வரிசை 34:
 
== ஆலயங்கள் ==
கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள ‌‌‌பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் முசுலீம் மக்கள், இந்து சேர்த்து வழிபடக் கூடிய காதரியம்மன் தர்கா ஒன்று உள்ளது கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் இங்குக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் பதுவை புனிதர் அந்தோணியாரின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஜூன் மாதம் முதலாம் திங்கள் கொடியேற்றபட்டுத் திருவிழா நடைபெறும். கிறிஸ்தவர்கள் மட்டும் அல்லாது மற்ற சமய மக்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். இந்த ஆலயத்தின் உள்ளே 1856 ஆண்டு இறந்த வெளிநாட்டுக் கிறிஸ்தவ மதபோதகர் கல்லறையும் உள்ளது. அவரின் பெயர் தந்தை சர்டூரியா. கர்த்தநாதர் சுவாமி என்று இவரை அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் இங்குள்ள மக்களின் காலரா நோயைப் போக்க அரும்பாடுபட்டதாகவும், இறுதியில் அவரையே காலரா நோய் தாக்க அவர் இறந்தார். அவரின் உடல் இங்கே கமுதி ஆலயத்தினுள் உள்ளது.
 
== பிரசித்தி பெற்ற விழாக்கள் ==
வரிசை 40:
 
== வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ==
கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது. இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது.
 
[[கமுதிக்கோட்டை]]'
மருதுசகோதரர்கள்
 
கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்டது. பிறகு ஆங்கிலேயர்களால் இக்கோட்டை கைப்பற்றபட்டது...இரண்டாம் பாளையக்காரர் போரில் ஆங்கிலேயர்களிடமிருந்து மருதுபாண்டியர்கள் இக்கோட்டையை கைபற்றி, இந்திய விடுதலைக்கு அரும்பாடுபடட பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையை, சிலகாலம் இக்கோட்டையில்! ஆங்கிலேயர்களிடம் இருந்து பாதுகாக்க தங்க வைத்திருந்தார்...
 
இக்கோட்டையின் அருகே கட்டபொம்மனின் குல தெய்வம் ஜக்கம்மா தேவி ஆலயம் உள்ளது இது ஊமைத்துரை கொண்டு வந்ததாகும்...பிறகு 1801ம் ஆண்டு மே29 ல் கமுதிகோட்டையில் ஆங்கிலேயர்களுக்கும் மருதுபாண்டியர்களுக்கும் நடைபெற்ற கடும் போரில் இக்கோட்டை ஆங்கிலேயர் வசம் சென்றது... இதில் ஏராளமான சேர்வைக்காரர்கள் உயிரிழந்ததாகவும் இருள் சூழ்ந்த நேரத்தில் மருதுவின் வீரர்கள் கோட்டையிலிருந்து தப்பிச் சென்றதாகவும்,
 
இக்கோட்டையானது, இரண்டு அடுக்குகளைக் கொண்ட முழுச் சுவர்களான இக்கோட்டை, ஒன்று மற்றொன்றை விட சிறியதாக அமைந்திருந்தது என்பதுடன் இந்த கோட்டையின் அடுக்குகள் ஒவ்வொன்றிலும் 7அடுக்குகளை கொண்ட கொத்தளங்கள் இருந்ததாகவும், இடையே கற்களால் கட்டப்பட்ட ஒரு நல்ல குளமும் மேற்கு பக்கத்தில் தானியக்கிடங்கும் மருந்து கிடங்கும் இருந்தன என்றும் ஆங்கிலேய தளபதி கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ் தனது இராணுவ நினைவுகள் புத்தகத்தில் கூறியுள்ளார்...தற்போது இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது...
 
சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் [[முத்துராமலிங்கத் தேவர்]] நினைவகம் கமுதிக்கு அருகே உள்ள பசும்பொன் என்ற கிராமத்தில் உள்ளது
"https://tamilar.wiki/w/கமுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது