அலிபிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan |
No edit summary |
||
வரிசை 11:
[[படிமம்:Alipiri_Padala_mandapam-Gopuram_Tirupati.jpg|இடது|thumb| அலிபிரி பாதலா மண்டபம்-கோபுரம், திருப்பதி]]
ஸ்ரீவாரி பாதால மண்டபம் என்பது அலிபிரியில் உள்ள [[வெங்கடாசலபதி|வெங்கடேஸ்வரருக்கு]] அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். மூலஸ்தான தெய்வம் பாதாள வெங்கடேசுவர சுவாமி என்று குறிப்பிடப்படுகிறது.<ref name=ttd /> புராணத்தின் படி, திருமலையில் ஏகாந்த சேவைக்குப் பிறகு, [[திருச்சானூர்|திருச்சானூரில்]] உள்ள தனது மனைவியான பதமாவதியைத் தரிசித்து, அலிபிரி படிகள் வழியாக வெங்கடேசுவரர் வந்து, தனது பாதணிகளை இந்த இடத்தில் விட்டுச் செல்வார், எனவே "பாதால மண்டபம்" ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]]) என்று பெயர். ''பாதலு'' என்பது பாதத்தைக் குறிக்கிறது.<ref name="ttd" /> திருப்பதியில் இருந்து திருமலை புனிதப்பயணம் செல்லும் பக்தர்கள் இங்கு முதலில் "ஸ்ரீவாரி படுகலுவை" (வேங்கடேசுவரர் அணிந்த பாதணிகள் என்று நம்பப்படுகிறது) தலையில் சுமந்து கொண்டு பிரார்த்தனை செய்வார்கள்.<ref name="ttd" /> ஸ்ரீகோவிந்தராஜசுவாமி கோயில் கீழ்வரும் இக்கோயில் [[திருமலை திருப்பதி தேவஸ்தானம்|திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால்]] நிர்வகிக்கப்படுகிறது.
பாதால மண்டபத்திற்குக் கிழக்கே அமைந்துள்ள அலிபிரி பாதால மண்டபம் கோயில் வளாகத்தில் லட்சுமி நாராயணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட துணை கோயில் உள்ளது. இக்கோயிலின் நுழைவாயில் மற்றும் தெய்வம் மேற்கு நோக்கி உள்ளது. இது [[ஆண்டாள்|ஆண்டாளுக்காக]] அர்ப்பணிக்கப்பட்ட உபகோயில் உள்ளது.<ref name=ttd />
திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் 2வது மலைச் [[திருமலை மலைச் சாலைகள்|சாலையில்]] அமைந்துள்ள அலிபிரி பாதால் மண்டப கோயில் வளாகத்தில் [[பிள்ளையார்|விநாயகப் பெருமானுக்கு]] அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. திருமலை யாத்திரை தொடங்கும் முன் சாலை வழியாகச் செல்லும் பக்தர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்வார்கள்.<ref name=ttd />
வரிசை 27:
பாதால மண்டபம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி உள்ளிட்ட அனைத்து வைணவ திருவிழாக்களும் கொண்டாடப்படும்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருமலைக்குச் செல்லும் அலிபிரி பாதச்சுவடுகளுக்கு நடைபெறும் திருவிழாவே மெட்லோத்ஸவம் எனப்படும். இது [[திருமலை திருப்பதி தேவஸ்தானம்|திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்]] கீழ் உள்ள தாச சாகித்திய திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருவிழாவின் போது பக்தர்கள் குழு ஆன்மிகப் பாடல்களைப் பாடி திருமலைக்கு மலையேறுவது அடங்கும்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/news/national/andhra-pradesh/metlotsavam-ends-on-a-grand-note/article7517506.ece|title=Tirupati to Tirumala on Foot|website=Metlotsavam ends on a grand note|access-date=2015-08-26}}</ref>
| |||