லுக்குட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →உழவாரன் பறவைக்கூடு: clean up, replaced: நம்புகிறார்கள் → நம்புகின்றனர் using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 60:
1860-ஆம் ஆண்டுகளில் லுக்குட் பகுதிகளில் பல காபி, மிளகு, மரவள்ளிக் கிழங்கு தோட்டங்கள் திறக்கப் பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆயிரக் கணக்கான தமிழர்கள் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] இருந்து அழைத்து வரப் பட்டார்கள்.
18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், லுக்குட் பகுதிகளில், மலாக்காவைச் சேர்ந்த சீனச் சுரங்கத் தொழிலாளர்கள், ஈயச் சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
வரிசை 67:
லுக்குட் ஈயச் சுரங்கங்களில் இருந்து கிடைத்த ஈயம், சிலாங்கூர் சுல்தானகத்திற்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. அதனால் சிலாங்கூர் சுல்தான் இப்ராகிம், பினாங்கைத் தளமாகக் கொண்ட கிழக்கிந்திய நிறுவனத்துடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தையும் செய்து கொண்டார்.
இது நேரடியாக மக்கள் தொகை எண்ணிக்கையை உயர்த்தியது. குறிப்பாக [[ஹெய்நான்|ஹைனானீஸ்]] சீன சமூகத்தில் இருந்து அதிகமான மக்கள் லுக்குட் பகுதிகளுக்குக் குடியேறினார்கள். அதனால் சீன மக்களின் பிரதிநிதியாக [[காப்பித்தான் சீனா|காப்பித்தான்]] (Kapitan) எனும் ஒரு தலைவரைச் சிலாங்கூர் சுல்தான் நியமித்தார்.
வரிசை 73:
காப்பித்தான் என்பது தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த சீனச் சமூகத்தவரின் தலைவரை அல்லது சீனச் சமூகத்தின் பிரதிநிதியைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். முதன்முதலில் மலாக்கா சுல்தான்கள்தான் காபித்தான் முறைமை உருவாக்கினார்கள்.
லுக்குட் பகுதியை முறையாக நிர்வாகம் செய்ய வேண்டிய அவசியம், சிலாங்கூர் சுல்தானுக்கு ஏற்பட்டது. லுக்குட்டில் அதிகமான அளவிற்கு மக்கள் குடியேறத் தொடங்கி விட்டார்கள்.
வரிசை 81:
ராஜா அசான் தன்னுடைய லுக்குட் நிலப் பகுதிக்கு நிறைய மலாய்க்காரர்களை அழைத்து வந்தார். சில பொருளாதாரச் சீர்திருத்தச் சட்டங்களையும் அறிமுகப் படுத்தினார். தன்னுடைய அனுமதி இல்லாமல், லுக்குட்டில் எவரும் தொழில் புரியக் கூடாது எனும் கடுமையான சட்டத்தையும் கொண்டு வந்தார்.
1824-ஆம் ஆண்டில் லுக்குட் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்தது. இதன் விளைவாக, சீனச் சுரங்கத் தொழிலாளர்களுக்குச் சேவை செய்வதற்காக வணிகச் சேவைகள் உருவாக்கப் பட்டன. அதாவது அபின் விடுதிகள்; விலைமாதர் விடுதிகள் போன்றவை.
வரிசை 89:
ஒருநாள் ராஜா அசானின் மாளிகைக்கு முன்னால் 400 சீனர்கள் கூடினார்கள். பேச்சு வார்த்தை நடத்த அழைத்தார்கள். ராஜா அசான் மாளிகையில் இருந்து வெளியே வர மறுத்து விட்டார்.<ref name=":0">{{Cite journal|last=Gammans|first=L.D|date=December 1924|title=The State of Lukut|url=https://www.jstor.org/stable/41559593?seq=1#metadata_info_tab_contents|journal=Journal of the Malayan Branch of the Royal Asiatic Society|volume=2|issue=3|pages=291-295}}</ref>
கோபம் அடைந்த சீனர்கள் அவருடைய மாளிகையைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அதோடு அவரையும் அவரின் குடும்பத்தாரையும் கொலை செய்தார்கள்.
வரிசை 97:
எஞ்சிய சீனர்கள் லுக்கிட்டில் இருந்து வேறு இடங்களுக்குத் தப்பித்துச் சென்றனர். அதன் விளைவாக லுக்குட் கைவிடப்பட்டது. லுக்குட் வரலாற்றில் அது ஒரு சோகமான நிகழ்ச்சி.
பின்னர் 1835-ஆம் ஆண்டில் ரியாவ் தீவைச் சேர்ந்த ராஜா ஜாபார் ராஜா அலி (Raja Jaafar Raja Ali) என்பவர் லுக்குட்டைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். லுக்குட் நிலப் பகுதி, சிலாங்கூர் ஆளுமையின் கீழ் வந்தது. பழையபடி சுரங்கத் தொழில் தொடங்கியது.
வரிசை 104:
==பொருளியல்==
லுக்குட் அதன் [[உழவாரன்]] பறவைக்கூடு (Swiftlet Nest) தொழிலுக்குப் பிரபலமானது. ஒரு சிறிய பறவையான உழவாரன் குருவி, தன் கூட்டைத் தன் சொந்த உமிழ்நீரில் இருந்து உருவாக்குகிறது.
| |||