கைபி ஆசுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot சி →எழுத்துகளில்: clean up, replaced: எழுத்துக்களில் → எழுத்துகளில் using AWB |
||
வரிசை 13:
| website = [http://www.azmikaifi.com/ Kaifi Azmi] Website
}}
'''கைபி ஆசுமி''' (Kaifi Azmi) என்று அழைக்கப்படும் சையித் அதர் உசைன் ரிசுவி (1919 ஜனவரி 14 - 2002 மே 10) இவர் ஒரு இந்திய [[உருது]] [[கவிஞர்|கவிஞராவார்]]. இந்திய இயக்கப் படங்களுக்கு உருது இலக்கியத்தை கொண்டு வந்தவர் என இவர் நினைவு கூறப்படுகிறார். பிர்சாதா காசிம், ஜான் எலியா மற்றும் பிறருடன் சேர்ந்து இவர் இருபதாம் நூற்றாண்டின் மறக்கமுடியாத உருது கவிதைகள் படிக்கப்படும் ஒரு மாலை சமூகக் கூட்டங்களான முசைராக்களில் பங்கேற்றார்.
== ஆரம்ப கால வாழ்க்கை ==
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் [[ஆசம்கர் மாவட்டம்|ஆசம்கர் மாவட்டத்தில்]] உள்ள மிஸ்வா (என்) கிராமத்தில் [[சியா இசுலாம்]] குடும்பத்தில் ஆசுமி பிறந்தார்.
== குடும்பம் ==
இவர், சௌகத் என்பவரை மணந்தார். இவர்களுக்கு [[சபனா ஆசுமி]] (திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் நாடகத்தின் இந்திய நடிகை) என்ற ஒரு மகளும் மற்றும் பாபா ஆசுமி (இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்) என்ற ஒரு மகனும் உள்ளனர். ஆசுமியின் மருமகள் தன்வி ஆசுமியும் (பாபா ஆசுமியின் மனைவி) பிரபல தொலைக்காட்சி நடிகராவார்.
=== எழுத்துகளில் ===
பதினொரு வயதில், இவர் தனது முதல் [[கசல் (இசை
1942 ஆம் ஆண்டில் [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு]] போராட்டங்களின் போது ஆசுமி பாரசீக மற்றும் உருது பற்றிய தனது ஆய்வைக் கைவிட்டார். அதன்பிறகு 1943 ஆம் ஆண்டில் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்)]] உறுப்பினராக முழுநேர [[மார்க்சியம்|மார்க்சியவாதியானார்]].
தனது இருபத்தி நான்கு வயதில், [[கான்பூர்|கான்பூரின்]] துணி ஆலைப் பகுதிகளில் நடவடிக்கைகளைத் தொடங்கினார். இவர் ஒரு [[ஜமீந்தார்|ஜமீந்தாரின்]] மகன் என்றாலும், தனது வசைதியான வாழ்க்கையை விட்டுவிட்டு, ஒரு முழுநேர ஊழியராக மாறினார். இவர் தனது தளத்தை [[மும்பை|மும்பைக்கு]] மாற்றவும், தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றவும், மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கட்சிப் பணிகளைத் தொடங்கவும், அதே நேரத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முசைராக்களில் கலந்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டார். மும்பையில், [[அலி சர்தார் சாப்ரி|அலி சர்தார் சாப்ரியுடன்]] கட்சியின் இதழான கௌமி சங் என்பதற்காக எழுத ஆரம்பித்தார். 1947 இல், இவர் ஒரு முசைராவில் பங்கேற்க [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்துக்கு (இந்தியா)]] வருகை புரிந்தார். அங்கு இவர் சௌகத் என்பவரைச் சந்திர்த்து, காதலித்து திருமணம் செய்து கொண்டார். சௌகத் பின்னர், நாடகத்திலும் படங்களிலும் புகழ்பெற்ற நடிகையானார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்தியத் திரைப்படத்தின் புகழ்பெற்ற நடிகை [[சபனா ஆசுமி]] (பிறப்பு. 1950) மற்றும் பிரபல ஒளிப்பதிவாளர் பாபா ஆசுமி ஆகியோர்.
== விருதுகள் ==
இவர், இந்தியாவின் மிக உயர்ந்த நான்காவது குடிமகன் விருதான [[பத்மசிறீ]] விருதைப் பெற்றுள்ளார். [[மகாராட்டிரம்|மகாராட்டிரா]] உருது அகாதமியின் சிறப்பு விருது, சோவியத் நாட்டின் நேரு விருது, ஆப்பிரிக்க - ஆசிய எழுத்தாளர்கள் சங்கத்தின் தாமரை விருது, மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக்கான குடியரசுத்தலைவர் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், ''ஆவாரா சச்தே'' என்ற இவரது படைப்பிற்காக இவருக்கு [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] [[உருது]] அகாதமி விருது மற்றும் உருதுக்கான [[சாகித்திய அகாதமி]] விருது ஆகியவையும் வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் மகாராட்டிர அரசு இவருக்கு 'ஞானேசுவரா' விருதை வழங்கியது. வாழ்நாள் சாதனையாளர்களுக்காக மதிப்புமிக்க சாகித்திய அகாதமி சக கூட்டாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டில், [[தில்லி அரசு]] மற்றும் தில்லி உருது அகாதமியால் இவருக்கு முதல் நூற்றாண்டு விருது வழங்கப்பட்டது. இவர் [[சாந்திநிகேதன்]] [[விஸ்வபாரதி பல்கலைக்கழகம்|விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில்]] முனைவர் பட்டம் பெற்றுள்ளார். <sup>[http://www.milligazette.com/Archives/01062002/0106200231.htm]</sup>
=== அஞ்சலி ===
[[புது தில்லி|புது தில்லியில்]] உள்ள இராமகிருட்டிணாபுரம் மற்றும் [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தில்]] ஒரு சாலைக்கு அரசாங்கம் இவரது பெயரை வைத்துள்ளது.
இவரது சொந்த ஊரான அசாம்காரில் இருந்து பழைய தில்லிக்கு செல்லும் "கைபியாத்" என்ற அதிவேக இரயிலையும் அரசாங்கம் திறந்து வைத்துள்ளது.
== குறிப்புகள் ==
| |||