ஓ மை கடவுளே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{விக்கியாக்கம்}} {{Infobox film | name = ஓ மை கடவுளே | image = Oh My Kadavule poster.jpg | caption = சுவரிதழ் | director = அஷ்வத் மாரிமுத்து | producer = ஜி. தில்லிபாபு<br />{{small|'''வழங்கியவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Thamizhpparithi Maari
சி top
 
வரிசை 21:
| based on =
}}
'''ஓ மை கடவுளே''' (''Oh My Kadavule'') என்பது 2020 ஆம்2020ஆம் ஆண்டு வெளியான இந்தியத் [[தமிழ்|தமிழ் மொழி]] கற்பனை, [[காதல் திரைப்படம்|காதல்]], [[நகைச்சுவைத் திரைப்படம்|நகைச்சுவைத்]] திரைப்படம் ஆகும். இப்படத்தை அஷ்வத் மரிமுத்து இயக்கியுள்ளார். இப்படத்தில் [[அசோக் செல்வன்]], [[ரித்திகா சிங்]] மற்றும் [[வாணி போஜன்]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷா ரா மற்றும் [[எம். எசு. பாசுகர்]] ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=https://www.newsbugz.com/oh-my-kadavule-tamil-movie/|title=Oh My Kadavule Tamil Movie (2019) {{!}} Cast {{!}} Songs {{!}} Teaser {{!}} Release Date|last=|date=|website=News Bugz|access-date=2020-01-13}}</ref> இந்த படமானது திரையரங்குகளில் 14 பிப்ரவரி 2020 அன்று [[வேலன்டைன் நாள்|காதலர் தினத்தன்று]] வெளியானது.<ref>{{Cite web|url=https://www.pinkvilla.com/entertainment/south/ashok-selvan-s-film-oh-my-kadavule-be-release-day-find-out-497679|title=Ashok Selvan's film Oh My Kadavule to be release on THIS day? Find Out|website=PINKVILLA|language=en|access-date=2020-01-13|archive-date=2020-01-13|archive-url=https://web.archive.org/web/20200113044756/https://www.pinkvilla.com/entertainment/south/ashok-selvan-s-film-oh-my-kadavule-be-release-day-find-out-497679|url-status=}}</ref>
 
== கதை ==
அர்ஜுன் எஞ்சியிருந்த தனது கல்லூரித் தேர்வுகளை முடித்ததைக் கொண்டாடும் விதமாக அர்ஜுன் ([[அசோக் செல்வன்]]), அனு ([[ரித்திகா சிங்]]), மணி (ஷா ரா) ஆகிய மூன்று நண்பர்களுடன் ஒரு பப்பில் விருந்துவைத்து கொண்டாடுவதாக படம் தொடங்குகிறது. அனு அர்ஜுனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்கிறாள். இதற்கிடையில் அர்ஜுன் தன்னை பள்ளிப் பருவத்தில் ஈர்த்த மீராவை ([[வாணி போஜன்]]) பார்க்கிறான். அவர்கள் இனிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வீட்டிற்கு திரும்பும் வழியில், அர்ஜுன் அனுவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறான். ஏனெனில் அவள் தன் சிறந்த தோழி என்பதாலும், அவளை மறுக்க எந்த காரணமும் இல்லை என்பதாலும் ஆகும். ஒரு ஆண்டு கழித்து, அனுவுக்கும் அர்ஜுனுக்கும் ஒத்துப் போகாத காரணத்தால் நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர். நீதிமன்றத்தில் அர்ஜுனுக்குப் பின்னால் அமர்ந்துள்ள ஒரு மனிதன் ([[ரமேஷ் திலக்]]) இன்று விவாகரத்து கிடைக்காது என்று கணித்து, அடுத்த 15 நிமிடங்களில் என்ன நடக்கும் என்று கூறுகிறார். அதைக் கேட்டு அர்ஜுன் அவரை கேலி செய்கிறான், ஆனால் அவர் தனது அறிமுக அட்டையைக் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். அந்த மனிதன் கணித்து சொன்ன அனைத்து நிகழ்வுகளும் சரியாக நடக்கின்றன. அதாவது நீதிபதியிடம் விவாகரத்துக்கு இறுதி ஒப்புதல் கொடுக்கும் போது, அனு மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறாள். இதனால் இவர்களது வழக்கு அன்று மாலைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் அர்ஜுன் அதிர்ச்சியடைகிறான் தனக்கு விவாகரத்து கிடைக்காதோ என்று ஐயப்படுகிறான். இதன் பிறகு தன்னிடமுள்ள அறிமுக அட்டையில் உள்ள முகவரிக்கு விரைந்து செல்கிறான்.
 
நீதிமன்றத்தில் தன்னை சந்தித்த நபர்சந்தித்தவர் கடவுளின் ([[விஜய் சேதுபதி]]) உதவியாளராக உள்ளார். அங்கே கடவுளையும் உதவியாளரையும் அர்ஜுன் சந்திக்கிறார். கடவுள் அவனது பிரச்சினையைப் பற்றி கேட்கிறார். திருமணமான பிறகு சில வாரங்களில் அவர்கள் எப்படி நண்பர்களாக மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பதை அர்ஜுன் விவரிக்கிறான். அதன்பிறகு அர்ஜுன் தன் மாமனாரின் வெள்ளைக்களிமண் பாண்டத் தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்குகிறான். அங்கு அர்ஜுனுக்குத் தரப்படும் வேலையான கழிப்பறை பொருளை சரிபார்ப்பார்க்கும் வேலை. அந்த வேலையை அவன் வெறுக்கிறான். அதேசமயம், அனுவுடன் கணவனாக வாழாமல் நண்பனாக / அறைத் தோழனாக மட்டுமே அர்ஜுன் வாழ்கிறான். ஒரு நாள் மீரா அர்ஜுனின் அலுவலகத்திற்கு உதவி கேட்டு வருகிறாள். இதன்பிறகு அவளுடனான நட்பை நன்கு வளர்த்துக் கொள்கிறான். திரையுலகில் உதவி இயக்குநராக இருக்கும் மீரா, அர்ஜுனின் நடிப்பு ஆசையை ஊக்குவிக்கிறாள். அவனது ஆர்வத்துக்கு உதவி செய்ய இயக்குனர்இயக்குநர் கௌதம் மேனன் எடுக்கவிருக்கும் திரைப்படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்த்துகொண்டுள்ளதால் அதில் அவனும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவள் வலியுறுத்துகிறாள். அர்ஜுன் இயக்குநரின் முன் நடித்து அவரைக் கவர்ந்துவிடுகிறான். மீராவும் அர்ஜுனும் ஒரு பப்பிற்கு வருகின்றனர். அங்கு அவள் தனது முதல் திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வி பற்றி அவனிடம் கூறுகிறாள். அர்ஜுன் மீராவை ஆறுதல்படுத்தி, புறப்படுவதற்கு முன்பு அவளை அணைத்துக்கொள்கிறான். அப்போது அவர்களை ஒன்றாகப் பார்க்கும் அனு கோபம் கொள்கிறாள். இதுகுறித்து அவர்களுக்கிடையில் கடும் சண்டை நடக்கிறது. முடிவில் அர்ஜுன் விவாகரத்தால் பிரிந்துவிடலாம் என கூறுகிறான்.
 
கடவுளிடம் அர்ஜுன் தனது சிறந்த தோழியை தனது மனைவியாக ஆக்கியது கடவுளின் தவறு என்று குற்றம் சாட்டுகிறான். எனவே கடவுள் அர்ஜுனுக்கு மூன்று நிபந்தனைகளுடன் தங்க சீட்டுடை அளித்து தவறை சரிசெய்ய இரண்டாவது வாய்ப்பையும் அளிக்கிறார் - சீட்டை எப்போதும் அர்ஜுன் தனவசம் வைத்திருக்க வேண்டும், இது குறித்து அவன் யாரிடமும் சொல்லக்கூடாது, மீறி உண்மையைச் சொன்னால் இறந்துவிடுவான் என்கிறார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட, அர்ஜுன் சீட்டை வாங்கிக்கொண்டு, அனுவின் திருமண யோசனையை ஏற்றுக்கொண்ட நேரத்துக்கு வந்தடைகிறான்.
வரிசை 75:
[[பகுப்பு:2020 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். எசு. பாசுகர் நடித்த திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/ஓ_மை_கடவுளே" இலிருந்து மீள்விக்கப்பட்டது