தாரமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>தமிழ்க்குரிசில் உரை திருத்தம் |
imported>Ashokslm |
||
வரிசை 5:
:சேலத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த வரலாற்று பழமை வாய்ந்த தாரமங்கலம். இங்கு ஊரினுடைய மிக சிறப்பான விஷயம் இவ்வூரில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில்.சிவகாமி அம்மனை சிவ பெருமானுக்கு தாரை வார்த்து கொடுப்பதாக இப்பெயர் அமைந்துள்ளது.இவ்விடத்தில் தாருகா மரங்கள் நிறைய அமைந்திருந்ததால் இப்பெயர் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.
:பொதுவாக சிவன் கோவில் அதன் அழகுக்கும் கலைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்திருக்கும். தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலும் அதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு ஆகும். இக்கோவிலின் சில பகுதிகள் பத்தாம்
கோவிலின் நுழைவாயிலை தொடர்ந்து மிக அழகான வேலைப்படுகளையுடய ஆறு தூண்கள் உள்ளன.இளவரசி குதிரையில் அமர்ந்து புலியை வேட்டையாடுவது போலவும் உடன் வீரர்கள் இருப்பது போலவும் மிக தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.இங்கு தூணில் கற்களால் செதுக்கப்பட்ட யாழி சிற்ப கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். யாழி என்பது சிங்கமும் யானையும் கலந்த ஒரு கற்பனை உருவம். இதில் சிங்கத்தின் வாயில் கல்லால் செதுக்கப்பட்ட உருண்டை சிற்ப கலைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இந்த கல் உருண்டையை சிங்கத்தின் வாயினுள் உருட்ட முடியும். அதே சமயம் சிங்கத்தின் வாயை விட்டு வெளியில் எடுக்க முடியாது.இக்கோயிலின் முற்றத்தில் இருக்கும் கதவுகள் மரத்தால் செய்யப்பட்டவை. அக்கதவுகள் மிக அருமையாக செதுக்கப்பட்டவகைகள் ஆகும். பெரும்பாலான சிற்பங்கள் இங்கு சிவனையும் சாமான்ய மக்களும் அவற்களின் வாழ்க்கை முறைகளையும் அடிப்படையாக கொண்டே அமைந்துள்ளது.
| |||