சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Naaradhar சிNo edit summary |
imported>Naaradhar சிNo edit summary |
||
வரிசை 6:
ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே மருவி, "சீகாழி' என்றானது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்கின்றனர். ஆயின் விவரமறிந்த சைவப் பெரியோர்கள். "காழி நகரம்' என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.
▲ இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் சம்பந்தர் ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம்... தன் தந்தையார் நீராடச் சென்றபோது, தானும் உடன் வரவேண்டுமென்று அடம் பிடித்தார்.
▲வேறு வழியில்லாத சிவபாத இருதயர், குழந்தையை அழைத்துச் சென்று குளக்கரையில் அமர்த்தினார்; குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார்.
இதைக் கண்ட இறைவன், ""கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க'' என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.
| |||