புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>Rasnaboy படத்தைச் சேர்த்தல் |
||
வரிசை 1:
{{multiple image
| direction = vertical
| width = 260
| footer = புராண ஓலைச்சுவடி ஏடுகள் ([[பொது ஊழி|பொ.ஊ.]] 15-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரை)
| image1 = Page of Text, Folio from a Bhagavata Purana (Ancient Stories of the Lord) LACMA M.82.62.1 (1 of 2).jpg
| image2 = Bhagavata Purana (Ancient Stories of the Lord) Manuscript LACMA M.88.134.4 (2 of 2).jpg
| image3 = Vishnu Discoursing (recto), Prince Worshipping and Discoursing (verso); Folio from a Vaishnava manuscript LACMA M.72.53.27a-b (2 of 2).jpg
}}
{{இந்து புனிதநூல்கள்}}
[[File:Ashta-Matrika.jpg|thumb|250px|அஷ்ட மாதாக்கள்]]
'''புராணங்கள்''' என்பவை [[வேதம்|வேதங்களில்]] உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும்.<ref>{{cite book|editor1-last=|title=புராணம் ஓர் அறிமுகம்!|publisher=தினமலர் நாளிதழ் |year=24 மே 2012|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=10854}}</ref> புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் [[வேதவியாசர்]] என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் [[மகாபுராணங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன. இவையல்லாத [[உபபுராணங்கள்]] பதினெட்டும் புராணங்களாகக் கொள்ளப்படுகின்றன.
இப்புராணங்களில் வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளின் சாரங்கள் கதைகளின் வடிவில் ஸ்லோகங்களாக இயற்றப்பட்டுள்ளன. அவை [[பேரண்டம்|பேரண்டங்களின்]] தோற்றம், அவற்றின் [[பிரளயம்]], [[
== சொல்லிலக்கணம் ==
'''புராணம்''' என்கிற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] சொல்லானது ''புரா-நவ'' என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் '''பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது''' என்பர். புராதனம் என்ற சொல் ''புராணம்'' என்று வந்ததெனவும் கூறுவர். புராணத்திற்கு இணையாக [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ''Myth'' என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற [[கிரேக்க மொழி|கிரேக்கச்]] சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.
===தமிழ் மொழியில்===
'''புராணம்''' என்ற சொல் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியத்தில்]] [[மணிமேகலை]]யில் முதன்முதலில் வருகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, ''காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், [[தமிழ் மொழி]]யில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. "புராணவித், புராணி" போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன. திருவாசகத்திலே [[மாணிக்கவாசகர்]] முதலில் பாடியது [[சிவபுராணம்]]. அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள். ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது பொருள்.<ref>கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:181</ref> [[சேக்கிழார்|சேக்கிழாரின்]] [[பெரியபுராணம்]] புகழ்பெற்றது.
== மகாபுராணங்கள் ==
மகாபுராணங்கள் கடவுள்களாலும், தேவர்களாலும், முனிவர்களாலும் முதன் முதலாக கூறப்பட்டுள்ளன. அவைகள் மற்றவர்களுக்கு கூறப்பட்டு இறுதியாக [[வியாசர்|வேதவியாசரை]] அடைந்து எழுத்துவடிவம் பெற்றுள்ளன.
# சிவ புராணம் - பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது.
வரி 34 ⟶ 43:
| [[பிரம்ம புராணம்]]
| [[உக்கிரசிரவஸ்|சூதமுனிவர்]]
| [[சௌனகர்|சௌகனாதி முனிவர்கள்]]
|-
| [[பத்ம புராணம்]]
வரி 109 ⟶ 118:
<!--
சைவப் புராணங்களில் புராணக்கதைகளை முதலில் கூறியது சிவபெருமான் அல்லது முருகப் பெருமான் என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது. பார்வதிதேவியோ அல்லது நந்தியோ அக்கதைகளைக் கேட்டு கைலாயத்திலிருக்கும் [[சனகாதி முனிவர்கள்|சனகாதி முனிவர்களுக்கு]]க் கூறுகின்றனர். அவர்கள் அக்கதைகளை [[வியாசர்|வேதவியாசருக்கு]] எடுத்து விரித்துக் கூறுகின்றனர். வேத [[வியாசர்]] புராணக்கதைகளை தமது மகன் [[சுகர்]] மற்றும் [[வைசம்பாயனர்|வைசம்பாயனருக்கு]] கூறுகிறார். வைசம்யானர் அவைகளை [[அத்தினாபுரம்]] மன்னர் [[ஜனமேஜயன்|ஜனமேஜயனுக்கு]] கூறும் போது, அருகிலிருந்து கேட்ட [[உக்கிரசிரவஸ்]] எனும் சூதமுனிவர் அவற்றை [நைமிசாரண்யம்|நைமிசாரண்யத்தில்]] உள்ள [[சௌனகர்|சவுனக முனிவர்களுக்குக்]] கூறுகிறார்.
=== ஏழு சிரஞ்சீவிகள் ===
மகாபுராணங்கள் அனைத்தையும் இயற்றியவர் வேதவியாசர் . வேதவியாசர் சிரஞ்சீவிகளுள் ஒருவர் ஆவார். ஜீவித்தல் என்பதற்கு, உயிர்வாழ்தல் என்று பொருள். சிரஞ்சீவிகள் என்றால் எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்று பொருள்படும். "அஸ்வத்தாமர், [[வேதவியாசர்]], [[பரசுராமர்]], [[விபீசணர்]], [[அனுமார்]], [[மகாபலி]], [[மார்க்கண்டேயர்]] ஆகிய ஏழுபேரும் சிரஞ்சீவிகள் ஆவர்". அழிவின்றி வாழ்பவர்கள் பட்டியிலில் இரண்டாவதாக வேதவியாசர் குறிப்பிடப்படுகிறார்.
வரி 121 ⟶ 130:
:ஞானவானதனைக்கேட்டுநந்திபானவின்றான்மன்னோ" (பாடல் 688) என்ற பாடலிலே,
உமையாள் கேட்டுக்கொண்டதற்கு இசைய சிவபெருமான் புராணத்தைக் கூறியருளுகிறார். அதனைக் கேட்ட ஆறுமுகங்கொண்ட முருகப் பெருமான் நந்திக்கு எடுத்துரைக்கிறார்.
:".... கந்தனிசைத்திடவந்நந்தி
:தன்றனிச் சொல்சற்குமரன் கொடே
:வென்றிவேதவியாதற்குரைக்கவளஃ
:தன்றெனக்கவன் சொன்னதறைகுவேன்" (பாடல் 98)
என்று சூதமுனிவர் கூறியதாகக் கூறப்பெற்றுள்ளது. -->
வரி 134 ⟶ 143:
[[File:Sage Suta Pauranika teach epic Mahabharata to other sages in naimisaranya.jpg|thumb|right|250px|[[நைமிசாரண்யம்]] காட்டில் குலபதி [[சௌனகர்]] தலைமையில் கூடியிருந்த ரிஷிகளுக்கு, சூத புராணிகரான [[உக்கிரசிரவஸ்]] என்ற சௌதி, புராணங்கள் மற்றும் [[மகாபாரதம்|மகாபாரதத்தை]] எடுத்துரைக்கிறார்]]
[[வேதவியாசர்|வேதவியாசரின்]] மகன் [[சுகர்|சுகரிடமிருந்து]] கற்ற புராணங்கள் மற்றும் இதிகாசங்களை [[வைசம்பாயனர்]], அத்தினாபுரத்து மன்னன் [[பரிட்சித்து|பரிட்சித்திற்கு]] எடுத்துக் கூறும் போது அங்கிருந்த சூத பௌராணிகரான [[உக்கிரசிரவஸ்]] அவைகளை நன்கு கேட்டார்.
அப்புராண இதிகாசங்களை, [[கோமதி ஆறு|கோமதி ஆற்றாங்கரையில்]] அமைந்திருந்த [[நைமிசாரண்யம்]] எனப்படும் இடத்தில் உள்ள குலபதி [[சௌனகர்]] முதலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என [[மகாபாரதம்|மகாபாரத்தில்]] குறிப்படப்பட்டுள்ளது. இந்த நைமிசாரண்யம் [[திருமங்கையாழ்வார்|திருமங்கையாழ்வாரால்]] மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பட்ட 108 வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.
வரி 141 ⟶ 150:
புராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துல்லியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன.
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தை]] எழுதிய புலவரும், [[திருக்குறள்|திருக்குறளை]] இயற்றிய புலவரும் தங்களது பெயர், ஊர், வாழ்ந்த காலம், நூலை இயற்றிய ஆண்டு, ஆட்சி செய்த மன்னர் இவை எதையுமே குறிப்பிடவில்லை.
இவர்களைப் போன்றே, புராணத்தை எழுதிய முனிகளும் தங்களது பெயர், வாழ்ந்த காலம், ஆட்சி செய்த மன்னன் இவைபற்றி எதையும் புராணங்களில் குறிப்பிடவில்லை. வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் [[பொது ஊழி|பொ.ஊ.]] 6 அல்லது [[பொது ஊழி|பொ.ஊ.]] 7-ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
=== இந்து சமயத்தின் பொற்காலம் ===
[[பொது ஊழி|பொ.ஊ.]] 300–600 காலகட்டங்களில் வட நாட்டை ஆண்ட [[குப்தப் பேரரசு|குப்தர்கள்]] [[வட மொழி]]யை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் '''குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம்''' என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் [[பொது ஊழி|பொ.ஊ.]] 300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும்.
=== கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் ===
[[திருப்பூவணம் புராணம்|திருப்பூவணப் புராணத்தில்]], சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம், சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம், மற்றும் நளன் கலிமோசனச் சருக்கம் ஆகிய சருக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதனால், திருப்பூவணப் புராணம் அடங்கிய பிரமகைவர்த்த புராணம் எழுதப்பட்ட காலம், சுச்சோதி மற்றும் நளன் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பது உறுதி.
திருப்பூவணப் புராணத்தில் நளன்கலிமோசனச் சருக்கத்திலே,
:"மேவுமந்தமிகுந்திரையாயுக
வரி 171 ⟶ 180:
|முதன்மைத் தெய்வம் || எண்ணிக்கை || புராணங்கள்
|-
| [[சிவன்]] || 10 || [[லிங்க புராணம்]], [[கந்த புராணம்]], [[ஆக்கினேய புராணம்]], [[பிரம்மாண்ட புராணம்]], [[மச்ச புராணம்]], <
|-
| [[விஷ்ணு]] || 04 || [[விஷ்ணு புராணம்]], [[பாகவத புராணம்]], [[நாரத புராணம்]], [[கருட புராணம்]]
வரி 181 ⟶ 190:
| [[அக்கினி]] || 01 || [[அக்கினி புராணம்]]
|}
மகா புராணங்கள் [[சத்துவ குணம்|சத்துவம்]], [[இராட்சத குணம்|ராஜசம்]], [[தாமச குணம்|தாமசம்]] என்ற அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றது. சைவர்கள் தமது பத்து புராணங்களுமே சத்துவ புராணங்கள் என்றும்,<ref>{{cite book | title=சைவ சமயம்: ஓர் அறிமுகம் | publisher=குமரன் புத்தக இல்லம் | author=அருணாச்சலம், ப. | year=2004 | location=கொழும்பு - சென்னை | pages=26 - 27 | isbn=9559429582}}</ref> வைணவர்கள் தமது புராணங்களே சத்துவ புராணங்கள் என்றும்<ref>{{cite book | url=https://books.google.lk/books?isbn=8178357186 | title=Faith & Philosophy of Hinduism | publisher=Gyan Publishing House | author=Rajeev Verma | year=2009 | pages=121 | isbn=9788178357188}}</ref> கூறிக்கொள்கிறார்கள். பதினெட்டுப் புராணங்களுக்கு மாறாக, உபபுராணங்கள் என்று சொல்லப்படும் பட்டியலில் அடங்குகின்ற புராணங்கள் வருமாறு:<
[[சூரிய புராணம்]], [[கணேச புராணம்]], [[காளிகா புராணம்]], [[கல்கி புராணம்]], [[சனத்குமார புராணம்]], [[நரசிங்க புராணம்]], [[துர்வாச புராணம்]], [[வசிட்ட புராணம்]], [[பார்க்கவ புராணம்]], [[கபில புராணம்]], [[பராசர புராணம்]], [[சாம்ப புராணம்]], [[நந்தி புராணம்]], [[பிருகத்தர்ம புராணம்]], [[பரான புராணம்]], [[பசுபதி புராணம்]], [[மானவ புராணம்]], [[முத்கலா புராணம்]] என்பனவாகும்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{
[[பகுப்பு:புராணங்கள்| ]]
[[பகுப்பு:பண்டைய
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
| |||