கில்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: முக்கிய பங்கு → முக்கியப் பங்கு using AWB |
No edit summary |
||
வரிசை 14:
[[படிமம்:Shah-Husain-Hotak.jpg|thumb|கோடக் வம்சத்தின் கடைசி ஆட்சியாளர், சா உசேன் கோடக் (1725-1738).]]
கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டின் புவியியலாளர்கள் இபின் கோர்தாத்பே மற்றும் இசுதாக்ரி உட்பட இடைக்கால முஸ்லிம் அறிஞர்கள், [[நடு ஆசியா|நடு ஆசியாவில்]] இருந்து [[ஆமூ தாரியா|ஆமு தாரியாவைக்]] கடந்து இன்றைய ஆப்கானித்தானின் சில பகுதிகளில், குறிப்பாக [[கசுனி மாகாணம்|கசுனி]], [[கலாட்|கலாட்டியில்]] குடியேறிய ஆரம்பகால பழங்குடியினரில் கலஜ்களும் ஒருவர் என்று விவரித்தனர். குறிப்பாக கசுனி, [[கலாட்]] கில்ஜி (கலாட்டி கல்ஜி என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் சபுலிசுதான் பகுதிகளில் 10 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி புத்தகமான ''ஹுதுத் அல்-ஆலம்,'' கலஜ்களை கஜினி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் [[மேய்ச்சல் வாழ்க்கை முறை|ஆடு மேய்க்கும்]] [[நாடோடி|நாடோடிகள்]] என்று விவரிக்கிறது. அவர்கள் மேய்ச்சல் நிலங்களில் அலைந்து திரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கல்ஜி அல்லது கில்ஜி {{Efn|name=different_names}} வம்சம் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தை]] ஆட்சி செய்தது. 1290 மற்றும் 1320 க்கும் இடையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தின்]] பெரும் பகுதிகளின் தனது அதிகாரத்தை அது கொண்டிருந்தது.<ref name="gazet">[https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V02_403.gif Dynastic Chart] The Imperial Gazetteer of India, v. 2, ''p. 368.''</ref> [[ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி|ஜலாலுதீன் பைருசு கில்ஜியால்]] கில்ஜி வம்சம் இந்தியாவின் தில்லி சுல்தானகத்தை ஆட்சி செய்த இரண்டாவது வம்சமாக நிறுவப்பட்டது. இது ஒரு புரட்சியின் மூலம் அதிகாரத்திற்கு வந்தது. இது துருக்கிய பிரபுக்களின் ஏகபோகத்திலிருந்து ஒரு பன்முகத்தன்மை கொண்ட இந்திய-முஸ்லிம் பிரபுக்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதைக் குறித்தது.<ref>{{Cite journal|last=Mohammad Aziz Ahmad|date=1939|title=The Foundation of Muslim Rule in India. (1206-1290 A.d.)|journal=Proceedings of the Indian History Congress|publisher=Indian History Congress|volume=3|pages=832–841|jstor=44252438}}</ref> அதன் ஆட்சி இன்றைய தென்னிந்தியாவில் வெற்றி பெறுவதற்கும் தொடர்ச்சியான [[மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகள்|மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகளை]] வெற்றிகரமாக தடுப்பதற்கும் அறியப்படுகிறது.
1506 நடைபெற்ற கலாட் கில்ஜி போருக்கு ஒரு வருடம் கழித்து, [[தைமூர் வம்சம்|தைமூர்]] ஆட்சியாளர் [[பாபுர்]] கில்ஜி பஷ்தூன்களை நசுக்கும் நோக்கத்துடன் [[காபுல்|காபுலை]] விட்டு வெளியேறினார். வழியில், தைமூர் இராணுவம் சர்தே பந்த் என்னுமிடத்தில் முகமந்த் பஷ்தூன்களைக் கைப்பற்றியது. பின்னர் குவாஜா இசுமாயிலின் மலைகளில் கில்ஜி பஷ்தூன்களைத் தாக்கி கொன்று, "ஆப்கானிய தலைகளின் தூண்" என்று பாபர் தனது [[பாபர் நாமா|பாபர் நாமாவில்]] எழுதினார். தாக்குதலின் போது ஏராளமான ஆடுகளும் கைப்பற்றப்பட்டன. [[மான்|மான்களும்]] [[ஆசியக் காட்டுக் கழுதை|ஆசியக் காட்டுக் கழுதைகளும்]] அதிகம் இருந்த கதாவாசு சமவெளியில் அடுத்த நாள் வேட்டையாடிய பிறகு, பாபுர் காபூலுக்கு அணிவகுத்துச் சென்றார்.<ref>{{Cite book|last1=Verma|first1=Som Prakash|title=The Illustrated Baburnama|date=2016|publisher=Routledge|isbn=978-1317338635|edition=illustrated|url=https://books.google.com/books?id=ioGPCwAAQBAJ|page=24}}</ref><ref name="babur">{{Cite book|last1=Beveridge|first1=Annette Susannah|date=7 January 2014|title=The Bābur-nāma in English, Memoirs of Bābur|url=https://www.gutenberg.org/files/44608/44608-h/44608-h.htm|publisher=Project Gutenberg}}</ref>
ஏப்ரல் 1709 இல், கில்ஜிகளின் கோடக் பழங்குடியினரின் உறுப்பினராக இருந்த மிர்வைசு கோடக், [[சபாவித்து வம்சம்|சபாவித்துகளுக்கு]] எதிராக ஒரு வெற்றிகரமான புரட்சியை வழிநடத்தினார். மேலும், [[காந்தாரம்|காந்தகாரைத்]] தளமாகக் கொண்ட கோடக் வம்சத்தை நிறுவினார். அவரது மகன் மக்மூத் கோடக் 1722 இல் [[ஈரான்|ஈரானைக்]] கைப்பற்றினார். மேலும் ஈரானிய நகரமான [[இசுபகான்]] ஆறு ஆண்டுகள் வம்சத்தின் தலைநகராக இருந்தது. 1738 இல் அதன் கடைசி ஆட்சியாளரான உசேன் கோடக், காந்தகார் போரில் [[நாதிர் ஷா|நாதிர் சா அப்சரால்]] தோற்கடிக்கப்பட்டபோது வம்சம் முடிவுக்கு வந்தது.
1747 இல் நாதர் சா அப்சரின் மரணத்திற்குப் பிறகு மேற்கு ஈரானில் நடந்த அதிகாரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த ஆசாத் கான் ஆப்கானித்தான், கில்ஜிகளின் அந்தார் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். உள்ளூர் [[குர்து மக்கள்|குர்து]] மற்றும் துருக்கியத் தலைவர்களுடனான தொடர் கூட்டணி மற்றும் [[ஜார்ஜியர்கள்|ஜார்ஜிய]] ஆட்சியாளர் இரண்டாம் எரெக்லேவுடனான சமரசக் கொள்கையின் மூலம் - அவரது மகளை அவர் திருமணம் செய்து கொண்டார் - ஆசாத் 1752 மற்றும் 1757 க்கு இடையில் அதிகாரத்திற்கு உயர்ந்தார். வடமேற்கில் உள்ள [[ஊர்மியா]] நகரம் வரை அசர்பைசான் பகுதியின் ஒரு பகுதி உட்பட வடக்கு [[ஈரான்|பெர்சியா]], மற்றும் தென்மேற்கு [[துருக்மெனிஸ்தான்|துர்க்மெனிஸ்தான்]] மற்றும் கிழக்கு [[குர்திசுத்தான்|குர்திஸ்தானின்]] சில பகுதிகளைக் கட்டுப்படுத்தினார்.<ref name="iranica">Perry, J. R. (1987), "Āzād Khan Afḡān", in: ''Encyclopædia Iranica'', Vol. III, Fasc. 2, pp. 173-174. [http://www.iranicaonline.org/articles/azad-khan-afgan-d Online] (Accessed February 20, 2012).</ref>
[[முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்|முதல் ஆங்கிலேய-ஆப்கான் போரின்]] போது (1839-1842), பிரித்தானிய [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|கிழக்கிந்திய நிறுவனத்திற்கு]] எதிரான ஆப்கானிய வெற்றியில் கில்ஜி பழங்குடியினர் முக்கியப் பங்கு வகித்தனர். 1842 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி, காபூலில் இருந்து 16,000 வீரர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் பெண்கள் அடங்கிய பிரித்தானிய இந்திய படைப்பிரிவு பின்வாங்கியபோது, கில்ஜி படை [[இந்து குஃசு]] மலைப்பகுதி வழியாக அவர்களைத் தாக்கியது. ஜனவரி 12 அன்று, பிரித்தன் படைப்பிரிவு காண்டமாக் அருகே ஒரு மலையை அடைந்தபோது, அவர்கள் கில்ஜி படையால் கொல்லப்பட்டனர் அல்லது சிறைபிடிக்கப்பட்டனர். இராணுவத்தில் பணியாற்றிய ஓர் [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] உதவி மருத்துவரான [[வில்லியம் பிரைடன்]] என்ற ஒரே ஒரு பிரித்தானியர் மட்டுமே உயிர் பிழைத்தார்.<ref>Dalrymple, William Return of a King, London: Bloomsbury, 2012, pages 385.</ref> இந்த போர் கில்ஜிகளின் வாய்வழி வரலாறு மற்றும் பாரம்பரியத்தில் எதிரொலிக்கும் நிகழ்வாக மாறியது. இது பழங்குடியினரின் துணிச்சலைப் பற்றி தனது மக்களிடம் கூறுவதற்காக பிரைடனை வேண்டுமென்றே தப்பிக்க விடப்பட்டதாக விவரிக்கிறது.
கில்ஜிக்கள் 1886 இல் ஆப்கானித்தானின் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அதன் பிறகு அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பராக்சாய் எமிர் அப்துர் ரகுமான் கானால் வடக்கு ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.<ref>[https://books.google.com/books?id=zz9_Ve29eL0C&dq=abdur+rahman+khan+ghilzai++exiled&pg=PA42 Title The Wars of Afghanistan: Messianic Terrorism, Tribal Conflicts, and the Failures of Great Powers] Peter Tomsen, PublicAffairs, 2011</ref>
நாடு கடத்தப்பட்டவர்களில் கரோட்டி கில்ஜி பழங்குடியினரின் தலைவரான சேர் கான் நசீர் 1930 களில் கட்டகான்-படக்சன் மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். தொழில்மயமாக்கல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு பிரச்சாரத்தைத் தொடங்கி, அவர் இசுபின்சார் காட்டன் நிறுவனத்தை நிறுவினார். மேலும், [[குந்தூசு|குந்தூசை]] பணக்கார ஆப்கானிய நகரங்களில் ஒன்றாக மாற்ற உதவினார்.<ref>Wörmer, Nils (2012). "The Networks of Kunduz: A History of Conflict and Their Actors, from 1992 to 2001" (PDF). Stiftung Wissenschaft und Politik. Afghanistan Analysts Network. p. 8</ref><ref>Grötzbach, Erwin: Afghanistan, eine geographische Landeskunde, Darmstadt 1990, p. 263</ref> சேர் கான், [[தஜிகிஸ்தான்|தஜிகிஸ்தானின்]] எல்லையில் உள்ள [[பாஞ்ச் ஆறு|பாஞ்ச் ஆற்றின்]] மீது கீசல் காலா துறைமுகத்தையும் செயல்படுத்தினார். இது பின்னர் அவரது நினைவாக சேர்கான் பந்தர் என்று பெயரிடப்பட்டது.
[[படிமம்:Mohammad_Najibullah_1986.jpg|thumb| கில்ஜி பழங்குடியினத்தைச் சேர்ந்த [[முகமது நஜிபுல்லா]] 1987 முதல் 1992 வரை ஆப்கானித்தானின் அதிபராக இருந்தார்.]]
[[படிமம்:160712-D-SK590-361_(28233988146).jpg|வலது|thumb|2014 முதல் 2021 வரை ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்த [[அசரஃப் கனி அகமத்சய்]] கில்ஜி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.]]
| |||