Test4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
File:Abraham_Thomas_Kovoor.jpg|''[[ஆபிரகாம் கோவூர்]]''
</gallery>
 
 
{{தகவற்சட்டம் நபர்
|name = ச. பொன்னுத்துரை
|image = Ponnuthurai.jpg
|caption =
|birth_name = சண்முகம் பொன்னுத்துரை
|birth_date = {{Birth date|1932|5|24|df=y}}
|birth_place = நல்லூர், யாழ்ப்பாணம்
|death_date = {{Death date and age|2014|11|26|1932|5|24}}
|death_place = [[சிட்னி]], [[ஆத்திரேலியா]]
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[அவுஸ்திரேலியா]]
|other_names =[[இலங்கைத் தமிழர்]]
|known_for = [[ஆசிரியர்]], எழுத்தாளர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
ச. பொன்னுத்துரை (ச.பொ) (மே 24, 1932 - நவம்பர் 26, 2014) ஈழ இலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவர். ச. பொன்னுத்துரை இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூரில் பண்டாரக்குளம் பகுதியில் மே 24, 1932-ல் பிறந்தார். தந்தை சண்முகம். தமிழ்நாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இதழாசிரியர், பதிப்பாசிரியர். ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் இலங்கையிலும், நைஜீரியாவிலும் பணியாற்றினார். புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தார். அவரது படைப்புகளில் நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல், வரலாறு ஆகியவை அடங்கும். ஆப்பிரிக்க நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் தனி ஆர்வம் கொண்டிருந்தார். ஈழத்தின் முற்போக்கு இலக்கியத்திற்கு எதிராக உணர்வுகளையும், அழகியலையும் முன்வைக்கும் நற்போக்கு இலக்கியத்தை ஆரம்பித்து புதிய படைப்பாளிகள் நடுவே அலைகளை உருவாக்கினார்.
== தனி வாழ்க்கை ==
 
ச. பொன்னுத்துரை ஈஸ்பரம் என்பவரை தன் இருபத்து நான்காம் வயதில் திருமணம் செய்துகொண்டார். ஈஸ்பரம் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்தார். இவர்களது பிள்ளைகள் மேகலா, அநுர, மித்ர, புத்ர, இந்ர. மகன் மித்ர (மித்திரா) அர்ச்சுனா என்ற பெயரில் கடற்புலிகள் இயக்கத்தில் இணைந்து ஈழப்போரில் பங்குபெற்றார், 1986-ல் மரணமடைந்தார். மகன் அநுர சிட்னியில் புகழ்பெற்ற மருத்துவர். புத்ர ஒரு விபத்தில் மரணமடைந்தார். பொன்னுத்துரை 1989-ல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் புலம் பெயர்ந்தார். ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றார்.
 
== ஆசிரியப்பணி ==
 
பொன்னுத்துரை 1956-ல் விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து இலங்கை மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தார். இங்கு ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் பணியாற்றினார். 1982-ல் ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் ஆசிரியராகவும், ஆங்கில மொழியியல் துறையின் தலைவராகவும், பணியாற்றி ஓய்வு பெற்றார்.
 
== இதழியல் ==
* கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ரஹ்மான நடத்திய 'இளம்பிறை' இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார் பொன்னுத்துரை.
* ஆஸ்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த 'அக்கினிக்குஞ்சு' என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார்.
 
== பதிப்பியல் ==
பொன்னுத்துரை சென்னையில் ’மித்ர’ பதிப்பகத்தின் மூலம் நூல்களை வெளியிட்டார்.
[[File:Ponnuthurai2.jpg| right| 365px|thumb|alt=சண்முகம் பொன்னுத்துரை|சண்முகம் பொன்னுத்துரை]]
 
== நாடக வாழ்க்கை ==
பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறின. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.
 
 
==எழுத்துலகில்==
 
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய ''இனி ஒரு விதி செய்வோம்'' என்ற நூலும் வெளிவந்துள்ளது. 1924 பக்கங்களில் ''வரலாற்றில் வாழ்தல்'' என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். [[சென்னை]]யில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டார்.
[[File:பிரபஞ்சன்1.jpg| right| 365px|thumb|alt=இலக்கிய சந்திப்பொன்றில் இ. தியாகலிங்கம், அமரர் ச. பொன்னுத்துரை|இலக்கிய சந்திப்பொன்றில் இ. தியாகலிங்கம், அமரர் ச. பொன்னுத்துரை]]
 
== நற்போக்கு ==
ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் ச.பொ. [[க. கைலாசபதி|கைலாசபதி]], [[கார்த்திகேசு சிவத்தம்பி|சிவத்தம்பி]] இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்திற்கு மாற்றாக 'நற்போக்கு' எழுத்தை புதிய படைப்பாளிகள், வாசகர்கள் நடுவே அறிமுகப்படுத்தினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960-களில் அதிலிருந்து விலகி 'நற்போக்கு'அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், வ.அ. இராசரத்தினம் போன்ற சிலரும் வெளியேறினர்.
 
== மொழிபெயர்ப்பு ==
ச. பொன்னுத்துரை ஆப்பிரிக்க நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் தனி ஆர்வம் கொண்டிருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய 'ஹால'(Xala) என்ற குறுநாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் கூகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் 'Weep Not Child' என்ற நாவலை தமிழில் 'தேம்பி அழாதே பாப்பா' என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
 
== இலக்கிய இடம் ==
 
‘ஈழத்து இலக்கியப் பிதாமகர் என்று அழைக்கப்படும் ச.பொவின் முதன்மையான ஆக்கம் என்பது மெல்லிய கேலியுடன் யாழ்ப்பாணத்து நடுத்தர வாழ்க்கையைப் பார்க்கும் 'சடங்கு' என்ற குறுநாவல்தான். தனிமனித வாதத்தைத் தன் படைப்பு மனத்தில் இருந்து மட்டுமே பெற்றுக்கொண்டு தன் படைப்பாணவத்தினால் மட்டுமே நிலைநிறுத்த முயன்ற படைப்பாளி.
 
 
==விருதுகள்==
இவருக்கு [[தமிழ் இலக்கியத் தோட்டம்|தமிழ் இலக்கியத் தோட்டத்தின்]] 2010 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் [[இயல் விருது]] வழங்கப்பட்டது.
 
== படைப்புகள் ==
* வீ (சிறுகதைகள்)
* ஆண்மை (சிறுகதைத் தொகுதி)
* தீ (நாவல்)
* சடங்கு (நாவல்)
* அப்பையா
* எஸ்.பொ கதைகள்
* கீதை நிழலில்
* அப்பாவும் மகனும்
* வலை + முள்
* பூ
* தேடல்
* முறுவல்
* இஸ்லாமும் தமிழும்
* பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்)
* மத்தாப்பு + சதுரங்கம்
* ?
* நனவிடை தோய்தல்
* நீலாவணன் நினைவுகள்
* இனி ஒரு விதி செய்வோம்
* வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை)
* ஈடு (நாடகம்)(அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)
* மாயினி
* மணிமகுடம்
* தீதும் நன்றும்
* காந்தீயக் கதைகள்
* காந்தி தரிசனம்
* மகாவம்ச (மொழிபெயர்ப்பு)
 
== மறைவு ==
எஸ். பொன்னுத்துரை 2014 நவம்பர் 26 அன்று [[சிட்னி]] கொன்கோர்ட் மருத்துவமனையில் காலமானார்<ref>{{cite web | url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37509| title=Es Po passes away in Australia| publisher= தமிழ்நெட் | date=26 நவம்பர் 2014 | accessdate=28 நவம்பர் 2014}}</ref>. இவரது ஒரு மகன் [[ஈழப்போர்|ஈழப்போரின்]] போது 1986 கடற்சமரில் இறந்த ஒரு மூத்த [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலி]]ப் போராளி ஆவார்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.viruba.com/atotalbooks.aspx?id=133&name=எஸ்.பொ எஸ்பொ'வின் நூல்கள்]
* [http://amuttu.net/viewArticle/getArticle/356 வார்த்தைச் சித்தர்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150117204124/http://amuttu.net/viewArticle/getArticle/356 |date=2015-01-17 }}, [[அ. முத்துலிங்கம்]]
* [http://arunmozhivarman.com/2015/04/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/ மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ]
 
[[பகுப்பு:1932 பிறப்புகள்]]
[[பகுப்பு:2014 இறப்புகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஆத்திரேலிய இலங்கைத் தமிழ் வம்சாவளி மக்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பதிப்பாளர்கள்]]
[[பகுப்பு:இயல் விருது பெற்றவர்கள்]]
"https://tamilar.wiki/w/Test4" இலிருந்து மீள்விக்கப்பட்டது