தன்மையணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sodabottle தன்மை நவிற்சி அணி-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது |
imported>Lingam "'''தன்மை நவிற்சி அணி''' என்பது எவ்வகைப் பொருளையும் அல்லது எச்செயலையும் உண்மையான முறையில் உள்ளதை உள்ளதாக விளக்கும் சொற்களைக் கொண்டு பாடப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
'''தன்மை நவிற்சி அணி''' என்பது எவ்வகைப் பொருளையும் அல்லது எச்செயலையும் உண்மையான முறையில் உள்ளதை உள்ளதாக விளக்கும் சொற்களைக் கொண்டு பாடப்படுவது ஆகும். இதற்கு இயல்பு நவிற்சி அணி, தன்மையணி என வேறு பெயர்களும் உண்டு.
==எடுத்துக்காட்டு==
"உள்ளம் குளிர்ப்ப ரோமம் சிலிர்க்க உரை <br>
தள்ள விழி நீர் அரும்ப" <br>
தன்னையே மறந்து நின்றாள் -
என்னும் பாடல் பகுதியில்<br>
- நெஞ்சம் குளிர - ரோமம் சிலிர்க்க- வார்த்தை வராமல் தடுமாற- விழிநீர் சிந்த- தன்னை மறந்து நின்றாள் என்று எந்த உவமானமோ உவமேயமோ அன்றி மிகைப்படுத்தலோ இல்லாததைக் காண முடிகிறது. இவ்வாறு கூறுவது தன்மை அணி.
== தன்மை நவிற்சி அணியின் தன்மைகள் ==
* உள்ளதை உள்ளபடி இயல்பாகக் கூறும்
* மிகைப்படுத்தல் இருக்காது
* உதாரணம் இருக்காது
* உருவகப் படுத்தல் இருக்காது
* சொல்வதில் அணிக்கேயுரிய அழகு காணப்படும்<br />
===எ.கா.1===
இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி<br />
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்தி <br />
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால் <br />
சாடினாள் ஓடோடத் தான்<br />
இருந்து <br />முகந் திருத்தி<br />
ஈரோடு பேன் வாங்கி<br />
விருந்து வந்ததென்று விளம்ப<br />
வருந்தி ஆடினாள் <br />பாடினாள்<br />
ஆடிப் பழமுறத்தால் சாடினாள்<br /> ஓடோடத்தான்<br />
மேலே உள்ள கவிதை வரிகளில் கீழே காட்டப்பட்டுள்ளவாறு உருவக அணியோ உவமை அணியோ இல்லாததைக் காண முடிகிறது.
<br /><br />
===எ.கா.2===
மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும் <br>
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும்
மெய்யில் பொடியும் = உடம்பு முழுக்கத் தூசியும்<br />
விரித்த கருங்குழலும் = விரித்த தலைமயிரும்<br />
கையில் தனிச் சிலம்பும் = கையிலே தனிச்சிலம்பும்<br />
கண்ணீரும் = அழுகையும்<br>
கண்ணகியின் கோலத்தை விளக்கும் கவிதையில் உள்ள இந்த வரிகளில் ஒவ்வொன்றும் இயல்பாகவும், மிகைப்படுத்தல் இன்றியும் அதே நேரம் அழகு குன்றாமலும் இருப்பதைக் காணமுடிகிறது.
===எ.கா.3===
'உள்ளம் குளிர உரோமம் சிலிர்த்துரையும்<br>
தள்ளவிழி நீரரும்பத் தன்மறந்தாள் - புள்ளலைக்கும்<br>
தேந்தா மரைவயல்சூழ் தில்லைத் திருநடஞ்செய்<br>
பூந்தா மரைதொழுத பொன்'
தில்லையில் நடராசப் பெருமானின் பாதங்களைத் தொழுத பெண்ணொருத்தியின் நிலை உள்ளது உள்ளவாறே கூறப்பட்டுள்ளமை காண்க.
{{அணி இலக்கணம்}}
[[பகுப்பு:அணி இலக்கணம்]]
| |||