சுரதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = சுரதா சுப்புரத்தினதாசன் | birth_name = ராசகோபாலன் | caption = | image = Suratha.jpg | birth_date = {{birth date|df=yes|1921|11|23}} | birth_place = பழையனூர், சங்கமங்கலம் ஊராட்சி, தஞ்சாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
 
வரிசை 10: வரிசை 10:
| occupation = [[கவிஞர்]]
| occupation = [[கவிஞர்]]
}}
}}

'''''சுரதா''''' (''Suratha''; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் [[பாரதிதாசன்|பாரதிதாசனிடம்]] கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை '''சுப்புரத்னதாசன்''' என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக ''சுரதா'' என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை '''உவமைக் கவிஞர்''' என்று சிறப்பித்துக் கூறுவர்.
'''''சுரதா''''' (''Suratha''; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) (இயற்பெயர்: இராசகோபாலன்) என்பவர் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் [[பாரதிதாசன்|பாரதிதாசனிடம்]] கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை '''சுப்புரத்னதாசன்''' என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக ''சுரதா'' என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை '''உவமைக் கவிஞர்''' என்று சிறப்பித்துக் கூறுவர்.


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரிசை 72: வரிசை 73:
# பாரதிதாசன் பரம்பரை(தொ.ஆ), 1991
# பாரதிதாசன் பரம்பரை(தொ.ஆ), 1991
# வினாக்களும் சுரதாவின் விடைகளும்
# வினாக்களும் சுரதாவின் விடைகளும்
# தொடாத வாலிபம்
# நெய்தல் நீர்
# உதட்டில் உதடு
# எச்சில் இரவு
# எச்சில் இரவு
# உதட்டில் உதடு
# எப்போதும் இருப்பவர்கள்
# நெய்தல் நீர்
# கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
# [[சாவின் முத்தம் ( நூல்)|சாவின் முத்தம்]]
# [[சாவின் முத்தம் ( நூல்)|சாவின் முத்தம்]]
# பாவேந்தரின் காளமேகம்
# சிறந்த சொற்பொழிவுகள்
# சிறந்த சொற்பொழிவுகள்
# கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
# சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
# சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
# சொன்னார்கள்
# தமிழ்ச் சொல்லாக்கம்
# தமிழ்ச் சொல்லாக்கம்
# தொடாத வாலிபம்
# நெஞ்சில் நிறுத்துங்கள்
# நெஞ்சில் நிறுத்துங்கள்
# எப்போதும் இருப்பவர்கள்
# சொன்னார்கள்
# புகழ் மாலை
# பட்டத்தரசி,(பாவியம்) 1957; முத்துநூலகம். 8 ஜி, பைகிராப்ட்ஸ் சாலை. சென்னை-5
# பட்டத்தரசி,(பாவியம்) 1957; முத்துநூலகம். 8 ஜி, பைகிராப்ட்ஸ் சாலை. சென்னை-5
# பாவேந்தரின் காளமேகம்
# புகழ்மாலை
# மங்கையர்க்கரசி
# மங்கையர்க்கரசி
# முன்னும் பின்னும்
# [[வார்த்தை வாசல் (நூல்)|வார்த்தை வாசல்]]
# வெட்ட வெளிச்சம்
# வெட்ட வெளிச்சம்
# [[வார்த்தை வாசல் (நூல்)|வார்த்தை வாசல்]]
# முன்னும் பின்னும்
# முன்னுரை ஊர்வலம்; மணிவாசகர் பதிப்பகம்
# முன்னுரை ஊர்வலம்; மணிவாசகர் பதிப்பகம்


வரிசை 97: வரிசை 98:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{விக்கிமூலம்|ஆசிரியர்:உவமைக்கவிஞர் சுரதா}}
{{Wikiquote|சுரதா}}
{{Wikiquote|சுரதா}}
*
*

[[பகுப்பு:1921 பிறப்புகள்]]
[[பகுப்பு:1921 பிறப்புகள்]]
[[பகுப்பு:2006 இறப்புகள்]]
[[பகுப்பு:2006 இறப்புகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]

14:04, 16 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்

சுரதா சுப்புரத்தினதாசன்
பிறப்புராசகோபாலன்
(1921-11-23)23 நவம்பர் 1921
பழையனூர், சங்கமங்கலம் ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் (இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில்), தமிழ்நாடு
இறப்பு20 June 2006(2006-06-20) (aged 84)
பணிகவிஞர்

சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006) (இயற்பெயர்: இராசகோபாலன்) என்பவர் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-செண்பகம் அம்மையார் ஆவர். பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

பாரதிதாசனுடன் தொடர்பு

1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.

கவிதை இயற்றல்

சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்ரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.

பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.

நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்க காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளி வந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்ற இவரது வரிகள் மிகவும் புகழ்பெற்றது.

திரைப்படத் துறையில்

சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

எழுத்துப்பணி

சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.

1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).

பாரதிதாசனின் தலை மாணாக்கராகக் கருதத் தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.

தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.

பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

பெற்ற சிறப்புகள்

  • 1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
  • 1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • 1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).
  • 1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.
  • 1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
  • 1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
  • 1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
  • 1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
  • சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச் சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.

மறைவு

இவர் தன்னுடைய 84ம் வயதில் 2006 சூன் 20 செவ்வாய்க்கிழமை அன்று, சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.[1]

குடும்ப உறுப்பினர்கள்

சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற மகனும் உள்ளனர். இவரின் மருமகள் பெயர் ராஜேஸ்வரி கல்லாடன். பேரன்கள் இளங்கோவன் மற்றும் இளஞ்செழியன் என இருவர். கொள்ளு பேரன் சுகிர்தன்.

சுரதாவின் படைப்புகள்

  1. தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)
  2. துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
  3. சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
  4. சிக்கனம்
  5. சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
  6. அமுதும் தேனும், 1983
  7. பாரதிதாசன் பரம்பரை(தொ.ஆ), 1991
  8. வினாக்களும் சுரதாவின் விடைகளும்
  9. தொடாத வாலிபம்
  10. எச்சில் இரவு
  11. உதட்டில் உதடு
  12. நெய்தல் நீர்
  13. சாவின் முத்தம்
  14. பாவேந்தரின் காளமேகம்
  15. சிறந்த சொற்பொழிவுகள்
  16. கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
  17. சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
  18. தமிழ்ச் சொல்லாக்கம்
  19. நெஞ்சில் நிறுத்துங்கள்
  20. எப்போதும் இருப்பவர்கள்
  21. சொன்னார்கள்
  22. புகழ் மாலை
  23. பட்டத்தரசி,(பாவியம்) 1957; முத்துநூலகம். 8 ஜி, பைகிராப்ட்ஸ் சாலை. சென்னை-5
  24. மங்கையர்க்கரசி
  25. வெட்ட வெளிச்சம்
  26. வார்த்தை வாசல்
  27. முன்னும் பின்னும்
  28. முன்னுரை ஊர்வலம்; மணிவாசகர் பதிப்பகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

-

"https://tamilar.wiki/w/index.php?title=சுரதா&oldid=365499" இலிருந்து மீள்விக்கப்பட்டது