புதினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>EditorGowtham25 |
||
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''புதினம்''' அல்லது '''நாவல்''' என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஓர் [[இலக்கியம்|இலக்கிய]] வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக [[உரைநடை]]யில் எழுதப்படுகின்றது. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், [[புனைகதை]]யாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது. இது பொதுவாக நூல் வடிவில் வெளியிடப்படுகின்றது. எனினும் புதினங்கள் வார, மாத [[சஞ்சிகை]]களில் தொடராக வெளிவருவதும் உண்டு. நாவல் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இலக்கிய வடிவம் உரைநடையில் அமைந்த நீள்கதை. இது புத்திலக்கிய வகையாக ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. ஆனால் பத்தாம் நூற்றண்டிலேயே சீனாவில் நாவல்கள் இருந்துள்ளன. இது சீனப் பெருநாவல் மரபு எனப்படுகிறது. நாவல் என்பது தமிழில் திசைச்சொல்லாக அப்படியே கையாளப்படுகிறது. புதினம் என்றும் சொல்லப்படுகிறது.
வரி 4 ⟶ 5:
== வரலாறு ==
நாவல் என்னும் சொல் புதுமை என்ற பொருளைத் தரவல்லது. இச்சொல் 'Novela' என்னும்
▲நாவல் என்னும் சொல் புதுமை என்ற பொருளைத் தரவல்லது. இச்சொல் 'Novela' என்னும் இத்தாலியச் மொழியிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து நாவல் என்னும் சொல் ஆங்கில மொழியில் வழக்காட்சியுற்று நிலைபெற்று வந்துள்ளது. கொலம்பியக் கலைக்களஞ்சிய நூல் (The Colombia Encyclopedia), இதற்கு 'உரைநடையால் அமைந்த நெடிய கதை' என விளக்கம் அளிக்கிறது. வெப்ஸ்டரின் அகரமுதலியானது (Webster's New 20th Century Dictionary), நாவல் என்பதற்கு, மனித உணர்ச்சிகள், எண்ணங்கள் அவர்தம் செயல்கள் ஆகியவற்றை விளக்கி எடுத்துரைக்கின்ற, உரைநடையில் அமைந்த நீண்ட கதை என்று விரிவாக விளக்கமளித்துள்ளது. இத்தாலி நாட்டில் தோன்றிய நாவல் இலக்கியம் தொடக்கத்தில் காதல் நிகழ்வுகளைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தது. பின், இயற்கையாக நடக்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை உள்ளவாறு சித்திரிப்பதால் புனைகதை என்னும் பொருளில் கையாளப்பட்டது. தமிழில் நாவலை புதினம் என்று வழங்கிவரும் போக்கு நிலவுகிறது.
== தமிழின் முதல் புதினம் ==
1875-இல் வித்துவான் சேஷய்யங்கார் என்பவரால் எழுதப்பட்ட [[ஆதியூர் அவதானி சரித்திரம்]] என்ற நூலை [[சிட்டி]], [[சிவபாத சுந்தரம்]] போன்றோர் தமிழின் முதல் புதினமாகக் காட்ட முற்பட்டனர். இந்நூல் [[கதைப்பாடல்]] வடிவில் அமைந்த ஒன்றாகும். உரைநடை வடிவில், நீதியை எடுத்துக்கூறும் முறையில், மக்கள் விரும்பும் இலக்கியமாக மாயூரம் வேதநாயகம் பிள்ளை இயற்றிய பிரதாப முதலியார் சரித்திரம் அமைந்து தமிழின் முதல் புதினமாக விளங்கி வருகிறது. இதன் காரணமாக தமிழ்ப் புதினத்தின் தந்தை என வேதநாயகம் பிள்ளை போற்றப்படுகின்றார். இவருடைய மற்றொரு புதினத்தின் பெயர் சுகுண சுந்தரி சரித்திரம் ஆகும்.
===தமிழின் முன்னோடி புதினங்கள்===
1) பிரதாப முதலியார் சரித்திரம்-1876-[[மாயூரம் வேதநாயகம் பிள்ளை]]
2) கமலாம்பாள் சரித்திரம்-1896-[[இராஜமய்யர்]]
வரி 21 ⟶ 19:
சமூகம் குறித்தும் [[முத்துமீனாட்சி]](1903) [[கைம்மைக் கொடுமை]]யையும், வில்லியம் பொன்னுசாமியின் கமலாக்ஷி மற்றும் சிவகுமரன் சமுதாயப் பார்வையும் கொண்ட புதினங்களாக இருந்து வருகின்றன.
===புதினத்தின் வகைகள்: துப்பறியும் புதினங்கள்(1910)===
ஆங்கில மொழிப் புலமை கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தைத் தழுவி பல்வேறு துப்பறியும் புதினங்களைப் படைத்தனர். அவர்களுள் சிலர் பின்வருமாறு:
வரி 42 ⟶ 39:
== சமுதாயப் புதினங்கள் ==
இவை மனித சமுதாயத்தின் வாழ்வியல் சூழலையும் சமூகச் சிக்கல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் புதினங்கள் ஆகும்.
வரி 64 ⟶ 60:
ஜேசுதாசனின் புத்தம் வீடு, சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, பொன்னீலனின் [[புதிய தரிசனங்கள்]], மறுபக்கம்,
அசோகமித்திரனின் [[தண்ணீர்]], அப்பாவின் சிநேகிதர், தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி, எழுத்தாளர் கௌதமன் நீல்ராஜ் அவர்களின் [[புனிதம் தேடும் புதினம்]] உமா சந்திரனின் [[முள்ளும் மலரும்]], சா.கந்தசாமியின் விசாரணை கமிஷன், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்,
ஜெயமோகனின் ரப்பர், அன்வர் பாலசிங்கத்தின் செந்நீர்
== வரலாற்றுப் புதினங்கள் ==
பண்டைத் தமிழக வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுப் புதினங்கள் எழுதப்படுகின்றன. அந்த வகையில் கல்கி, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், [[பொன்னியின் செல்வன்]] ஆகியவற்றையும், அகிலன், [[மணிபல்லவம்]], கயல்விழி, வேங்கையின் மைந்தன்,
வெற்றித் திருநகர் ஆகிய புதினங்களை எழுதியுள்ளனர். சாண்டில்யனின் [[யவனர்|யவன]] ராணி, [[கடல் புறா]], ராஜபேரிகை போன்றவையும் கோவி. மணிசேகரனின் அக்கினிக் கோவம், பீலிவளை, [[செம்பியன் செல்வி]], அஜாத சத்ரு முதலானவையும் குறிப்பிடத்தகுந்தவை. இதுபோல், மு.மேத்தாவின் [[சோழநிலா]], கலைஞர் கருணாநிதியின் ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர், [[தென்பாண்டிச் சிங்கம்]], பூவண்ணனின் காந்தளூர்ச் சாலை, விக்கிரமனின் [[நந்திபுரத்து நாயகி]], ஜெகசிற்பியனின் மகரயாழ் மங்கை, ஆலவாய் அழகன், நாயகி நற்சோணை,[[நந்திவர்மன் காதலி]],திருச்சிற்றம்பலம் ஆகியவையும் அரு.ராமநாதனின் [[வீரபாண்டியன் மனைவி]] முதலானவை வரலாற்றுப் புதினங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
== வட்டார புதினங்கள் ==
வட்டார புதினம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியைக் களமாகக்கொண்டு,அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டும் குறிக்கோளுடன் எழுதப்படுவதாகும்.வட்டார புதினம் எழுதும் வழக்கை வேங்கடரமணி தோற்றுவித்தார். சில வட்டார புதினங்கள் கீழே தரப்பட்டுள்ளன.அவையாவன:
வரி 85 ⟶ 79:
== மொழிபெயர்ப்புப் புதினங்கள் ==
தமிழில் [[மாக்சிம் கார்க்கி]]யின் [[தாய்]], [[லியோ டால்ஸ்டாய்]]யின் [[போரும் அமைதியும்]], [[விக்டர் ஹியூகோ]]வின் [[ஏழைபடும் பாடு]], [[தகழி சிவசங்கரப் பிள்ளை]]யின் [[செம்மீன்]], தோட்டியின் மகன், காண்டேகர் மற்றும் தாகூர் புதினங்கள் பல மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.இப்பணியை [[கா. ஸ்ரீ. ஸ்ரீ]], [[த. நா. சேனாபதி]], [[சிற்பி பாலசுப்பிரமணியம்]], [[தமிழ்நாடன்]], [[சுந்தர ராமசாமி]] முதலானோர் ஈடுபட்டனர்.
== அரசியல் புதினங்கள் ==
நிகழ்கால அரசியல் நடவடிக்கைகளை மையமாக வைத்து விருப்பு
வெறுப்பில்லாமல் அரசியல் புதினங்கள் எழுதப்பட்டு வருகின்றன.
நாரண.துரைக்கண்ணனின் சீமான் சுயநலம்,நா.பார்த்தசாரதியின் [[நெஞ்சக்கனல்]],வைரமுத்துவின் [[மூன்றாம் உலகப்போர்]],பெருமாள்முருகனின் [[மாதொருபாகன்]]
== தழுவல் புதினங்கள் ==
அயல்நாட்டுப் புதினக் கதையைத் தமிழ்நாட்டுச் சூழலுக்கேற்பத் தழுவி எழுதுவதாகும்.மறைமலையடிகளின் [[குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி]],எஸ்.எஸ்.மாரிசாமியின் [[அநாதை ஆனந்தன்]]போன்ற புதினங்கள் தழுவி எழுதப்பட்ட புதினங்கள் ஆகும்.
== உளவியல் புதினங்கள் ==
இருபாலரின் உளவியல் சிக்கல்கள் குறித்து இவை எடுத்துரைக்கின்றன. காட்டாக,▼
▲இருபாலரின் உளவியல் சிக்கல்கள் குறித்து இவை எடுத்துரைக்கின்றன.காட்டாக,
தி.ஜானகிராமனின் மோக முள், அம்மா வந்தாள், கோவி.மணிசேகரனின் தென்னங்கீற்று, ஜெயகாந்தனின் ரிஷிமூலம், முதலானவற்றைக் கூறவியலும்.
== நனவோடை புதினங்கள் ==
[[நனவோடை]] என்பது ஓர் உத்தியாகும். நனவோட்டத்தின் வழியே கதை கூறுதலாகும்.[[அசுர கணம்]](க.நா.சு),
ஜீவனாம்சம் (சி.சு.செல்லப்பா),
வரி 110 ⟶ 99:
== புதின அமைப்பு ==
கதை இலக்கியத்தில் புதினத்திற்குத் தனியிடம் உண்டு. நீண்ட வாசிப்பைத் தூண்ட வல்லது. புதினம் பல்வேறு கட்டமைப்புகளை உள்ளடக்கியது. அவையாவன:
வரி 151 ⟶ 139:
இத்தகுக் கதைப்பின்னல்களுடைய புதினங்களில் ஈர்ப்பு, எதிர்பார்ப்பு நிலை (Suspense), குறிப்பு முரண்(Irony) முதலியன அமைந்து அவற்றை முன்னோக்கி நகர்த்தும்.
== இவற்றையும் பார்க்க ==▼
== உசாத்துணை நூல்கள் ==▼
* [[குறும் புதினம்]]▼
== மேற்கோள்கள் ==▼
{{Reflist}}▼
சாகித்திய அக்காதெமி, புதுதில்லி, பதினான்காம் பதிப்பு-2000.▼
▲== உசாத்துணை நூல்கள் ==
▲# மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அக்காதெமி, புதுதில்லி, பதினான்காம் பதிப்பு-2000.
# முனைவர் மா.இராமலிங்கம், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, சென்னை-98, முதற்பதிப்பு: செப்டம்பர்-1999.
# முனைவர் பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, சென்னை-98, முதற்பதிப்பு:ஜூலை-2008.
▲4)தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையதளம்.
▲== இவற்றையும் பார்க்க ==
▲* [[குறும் புதினம்]]
== வெளி இணைப்புகள் ==
வரி 180 ⟶ 156:
{{இலக்கிய வடிவங்கள்}}
▲== மேற்கோள்கள் ==
▲{{Reflist}}
[[பகுப்பு:புதினங்கள்| ]]
[[பகுப்பு:புனைவு]]
| |||