அகத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox character | image = AgathiyarLopamudra.jpg | alt = அகத்தியன் | caption = அகத்தியன் & லோபாமுத்திரை | spouse = லோபாமுத்திரை }} thumb|அகத்திய மாமுனிவர் '''அகத்தியர்''' (''Agathiyar''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 52:
அகத்திய முனிவர் தமிழுக்கான முனிவர் என்றும், [[சித்த மருத்துவம்|சித்த மருத்துவமுறைகளை]] வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். இவரது பாடல்களில் பயின்றுவந்துள்ள சொற்கள் இவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன.
சித்தராய் விளங்கிய அகத்தியனைப் பற்றிய "அகத்தியன் காவியம் பன்னிரண்டாயிரம்" வாயிலாகச் சில கருத்துகளை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியன் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியன் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தவர் ஆவார்.
வரிசை 58:
புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’ என்ற இடத்தில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழைப் போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்குப் பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் அழைக்கின்றனர்.
[[File:WLA lacma 12th century Maharishi Agastya.jpg|thumb|right|அகத்தியர்]]
அகத்தியன் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன.
வரிசை 91:
ஆகிய 12 பேரும் அகத்தியனின் மாணவர்கள் ஆவர் இவர்கள் 12 பேரும் சேர்ந்து "பன்னிரு படலம்" என்னும் நூலை எழுதினார்கள் இந்தச் செய்தியைப் புறப்பொருள்வெண்பாமாலை குறிப்பிடுகிறது
அகத்தியன் சித்த வைத்தியத்திற்குச் செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியன் பெயரில் வெளியாகியுள்ள '''சமரச நிலை ஞானம்''' என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. '''அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள்''' என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப் பட்டிருக்கின்றன. அகத்தியன் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோசங்கள் பற்றிக் கூறியுள்ளார்.
[[File:Agathiar.jpg|right|thumb|250px|[[கல்லணை]]யில் அகத்தியன் சிலை]]
அகத்தியன் எழுதிய நூலகளின் பட்டியல் தனிக்கட்டுரை: [[அகத்திய நூல்கள்]]
வரிசை 129:
#அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
வரிசை 135:
பின் பின்வரும் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூற வேண்டும்
:ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
வரிசை 144:
பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளைச் சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
#தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
வரிசை 163:
#இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து, பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.
#இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
| |||