கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Muthu.iisc
imported>Sodabottle
சி Sodabottleஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 19:
}}
'''கடையநல்லூர்''' ([[ஆங்கிலம்]]:Kadayanallur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
நுழைவு வாயில்
அழகிய இயற்கை சூழலில்,மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் பொதிகை மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள கிராமிய நகர மணம் கமழும் நல்லூரே கடையநல்லூர்.பசுமையான நெற்பயிர் முதிர்ந்து தொங்கும் வயல்களும்,உயர்ந்து வழர்ந்தோங்கிய மரச்சோலைகளும்,இனிய குற்றால காற்றும் சூழ,குறுஞ்சியும்,மருதமும் விரவி கொஞ்சிடும் எழில்மிகு செழிப்பான ஊரே கடையநல்லூர்.தென்காசி-மதுரை.(N.H.208)தேசிய நெடுஞ்சாலையில்.தென்காசியிலிருந்து வடக்கே 16 கீ.மீ தொலைவிலும்,புளியங்குடியிலிருந்து தெற்கே 10 கீ.மீ தொலைவிலும் அமைந்துள்ள நன்னகரே கடையநல்லூர்.சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட திருவனந்தபுரம் – சென்னை இருப்புப்பாதையில் தென்காசிக்கும், சங்கரன் கோவிலுக்கும் இடையே இவ்வூர் அமைந்துள்ளது.
 
தோரண வாயில்
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால்,மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரங்களில் குறுநில மன்னர்களுக்கு பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட படைவீரர்களின் முகாம்கள் மற்றும் குதிரைகள் பராமரிப்பு லாயங்கள் போன்றவை அமைந்திருந்தன.கால மாற்றத்தாலும் வனவிலங்குகளின் தொந்தரவினாலும் அங்கிருந்த மக்கள் தற்போது அமைந்துள்ள கடையநல்லூர் பேட்டை பகுதியில் குடி ஏரலாயினர்.அவர்களை படையாளிகள் என்ற பெயரோடு அழைக்கப்படுவதை காணலாம்.இந்த பகுதி மதிலூர் என்றும் பின்னர் புதூர் என்றும்,பின்னர் கடைகாளிஷ்வரன் கோவிலை காரணமாக கொண்டு கடையநல்லூர் என்று பெயர் பெற்றது.அக்கால காவல் நிலையம்,பேருந்து நிலையம்,தலைமை அஞ்சலகம் போன்றவை இப்பகுதியிலேயே இயங்கி வந்தன. இப்பகுதியின் மேற்கே மதீனா நகரும், பேட்டையும், வடமேற்கே ரஹ்மானியபுரமும்,வடக்கே கிஷ்ணபுரமும், வடகிழக்கே முத்துகிரிஷ்ணபுரமும், கிழக்கே மாவடிக்காலும்,தென்கிழக்கே இபுராகிம் நகர்,இக்பால் நகர்களும், தெற்க்கே மெகராஜ் நகர்,இந்திரா நகரும் தென்மேற்கே மேலக்கடையநல்லூர் சூழ அமைந்துள்ளன.
 
நடுவாயில்
1962-63 களில் தமிழக அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்த மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் காலம் சென்ற S.M.அப்துல் மஜீத் சாஹிப் அவர்கள் கடையநல்லூர் பஞ்சாயத்து போர்டை நகராட்சியாக தரம் உயர்த்தினார்கள்.தற்பொழுது கடையநல்லூரில் சுமார் 85,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இதில் 55% மக்கள் பல்வேறு சாதிகளை சார்ந்த இந்து சமையத்தவர்களாகவும்.42% மக்கள் இஸ்லாமிய சமையத்தவர்களாகவும் மீதமுள்ள 3% மக்கள் கிருஸ்துவர்களாகவும் வாழ்கின்றனர்.மக்களிடையே சமய வேறுபாடுகள் காணப்படுவதில்லை.சித்தப்பா,மகன்,மாமா,அண்ணன்,தம்பி போன்ற உறவு முறைகளை கூறி வாழ்ந்து வருகின்றனர்.கைத்தறி மற்றும் விவசாயத் தொழிலை மேற்கொண்டு வந்தனர்.ஆனால் தற்பொழுது அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு பெருகுவதினால் எந்த வேலைக்கும் தயாராய் இவ்வூர் மக்கள் கடல் கடந்து சென்று சம்பாத்தியம் செய்ததினால் நெசவுத் தொழிலில் முற்றிலும் இவ்வூரிலிருந்து அகன்றது விவசாயத்தொழிலும் குறைந்தது.விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறின.மக்களிடையே பொருளாதாரம் தாராளமயின.உழைப்பு குறைந்ததால் நோயும் பெருகியது.மக்கள் சாதாரண நோய்க்காக வாகனங்களை அமர்த்தி தென்காசி, திருநெல்வேலி, மதுரை போன்ற ஊர்களுக்கு சென்று மருத்துவம் பார்க்கலாயினர்.
 
உள்வாயில்
கடையநல்லூர் மக்களிடையே கல்வியில் விழ்ப்புணர்வு ஏற்படலாயிற்று கல்லாமை இல்லமையாகி அனைத்து சமையத்தவர்களும் உயர் கல்வி பெறலாயினர்.தமிழகத்தில் தொழில் நுட்பக் கல்வியில் ஏற்பட்ட மறுமலச்சியால் எண்ணற்ற தொழில் நுட்ப பட்டதாரிகள் உருவாயினர்.பொருளாதாரம் வளம் பெருகியதால் மருத்துவ படிப்பிலும் பலர் சேர்ந்து மறுத்துவர்களாயினர்.பல அரசுத்துறை சார்ந்த அலுவலகங்கள் கடையநல்லூரில் தோன்றி கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டன.அனைத்து சமய மாணவ, மாணவியரும் +2 தேர்வுக்கு பின்னர் பல்வேறு உயர் கல்வித் துறையில் பட்டங்கள் பெற்றுள்ளனர்.
 
 
புறவாயில்
பல்வேறு சிறப்புகளை கடையநல்லூர் பெற்றிருந்தாலும் கூட இது கிராமிய மணம் கமழும் நகராகவே அமைந்துள்ளது. நமதூரில் பல வணிக வளாகங்களை உருவாக்க வேண்டும்.விவசாய உற்பத்தியில் புதிய யுக்திகளை கையாளும் தொழில் நுட்பத்தை உருவாக்க வேண்டும்.பல தொழில் சாலைகளை ஏற்படுத்தவேண்டும்.கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகள் உருவாக வேண்டும்.மருத்துவ தொழில் நுட்ப சிறப்பு வாய்ந்த சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ மனைகள் உருவாக வேண்டும். ஒழுக்கத்தை நிலைநாட்ட பல் வேறு நன்நெறி வழி நடத்தும் பயிற்ச்சிப் பட்டறைகள் உருவாக வேண்டும். அவ்வாறு உருவாகினால்தான் உலகின் சிறந்த நன்னகராக கடையநல்லூர் திகழும்.
 
 
 
 
 
==மக்கள் வகைப்பாடு==
"https://tamilar.wiki/w/கடையநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது