சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah No edit summary |
imported>Mahirbot தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் வார்ப்புரு சேர்ப்பு using AWB |
||
வரிசை 4:
locator_position = right |
state_name = [[தமிழ்நாடு]]|
district = [[
நகரத்தின் பெயர் = சீர்காழி |
latd = | longd = |
வரிசை 22:
}}
== அமைவிடம் ==
'''சீர்காழி (Sirkazhi)''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிறு நகரம்.
பல தலைமுறைகளாய் இங்கு கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளது. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]], [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]] ,[[வஸ்தராஜபுரம்
ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே மருவி, "சீகாழி' என்றானது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்கின்றனர். ஆயின் விவரமறிந்த சைவப் பெரியோர்கள். "காழி நகரம்' என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.
வரிசை 35:
இதைக் கண்ட இறைவன், ""கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க'' என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.
வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், ""பால் கொடுத்தது யார்?'' என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் "தோடுடைய செவியன்' என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார்.
அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார்.
இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது.
== புராண வரலாறு ==
வரி 55 ⟶ 52:
== ஆலய அமைப்பு ==
சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன் பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர் பலிபீடமும் அமைந்துள்ளது.
மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.
வரி 61 ⟶ 57:
== இறைவன் ==
இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார்.
இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர்.
விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, "சட்டை நாதர்' என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர்விளங்குகிறார்.
உண்மையில் "காக்கும் கடவுளான' மாலவனுக்கு ஆணவ மலம் ஏது? நாமெல்லாம் கர்வமின்றி இருக்க வேண்டுமென்பதை உணர்த்துவதற்காகப் பரம்பொருளே இரண்டு வடிவமேற்று நிகழ்த்திய திருவிளையாடல் இது.
வரி 80 ⟶ 74:
சீகாழியால் உலகெங்கும் சிவ மணம் பரவியது! இன்றும் அது பரவிக் கொண்டிருக்கிறது! வருங்காலத்திலும் அது தொடரும் என்பது நிச்சயம்.
[[பகுப்பு:தமிழ் நாட்டுக் கோயில்கள்
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]
[[bpy:সিরকালি]]
[[en:Sirkazhi]]▼
[[it:Sirkali]]
[[pt:Sirkali]]
[[vi:Sirkali]]
▲[[en:Sirkazhi]]
{{தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்}}
| |||