உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
== வரலாறு ==
17 ஆம் நூற்றாண்டின் போது, சிவகங்கையானது [[இராமநாதபுரம் சமஸ்தானம்]] இராச்சியத்தால் ஆளப்பட்டது, இதன் எல்லைகள் சிவகங்கை, [[புதுக்கோட்டை]] மற்றும் [[ராமநாதபுரம்]] முழுவதும் பரவியிருந்தது. இப்பேரரசின் ஏழாவது மன்னர் [[இரகுநாத கிழவன்]] சேதுபதி 1674 முதல் 1710 வரை ஆட்சி செய்தார், அவருக்குப் பின் அவரது சகோதரியின் மகன் [[முத்துவிஜயரகுநாத சேதுபதி]] ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு 1726இல் அவரது மருமகன் சுந்தரேசுவர ரெகுநாத சேதுபதி ஆட்சி செய்தார். ரெகுநாத சேதுபதியின் முறையற்ற மகன் பவானி சங்கரா தேவன், ராம்நாத் இராச்சியதை தாக்க தஞ்சை ராஜாவுடன் இணைந்தார். பவானி சங்கரா தேவன் வென்ற போதிலும், பேரரசின் சில பகுதிகளை தஞ்சை மன்னரிடம் கொடுப்பதாக சொல்லியிருந்த சில பகுதிகளை கொடுக்காமல் மறுத்துவிட்டார். பின்னர் [[சசிவர்ணத் தேவர் | பெரிய உடைய தேவருடன்]] சண்டையிட்டு அவரைத் தனது மாகாணத்திலிருந்து வெளியே அனுப்பினார். சுந்தரேசுவரனின் சகோதரரான சசிவர்ணா மற்றும் கட்டயா தேவர் இருவரும் தஞ்சையின் ராஜாவுடன் இணைந்தனர். அவர்கள் இருவரும் 1730 இல் பவானியை தஞ்சை படையின் உதவியுடன் தோற்கடித்தனர். கட்டயா தேவர் இராச்சியத்தை ஐந்து மாகாணங்களாகப் பிரித்து, சிவகங்கையின் முதல் மன்னரான [[சசிவர்ணத் தேவர்]]க்கு இரண்டு மாகாணங்களைக் கொடுத்தார். பின்னர் சசிவர்ணன் தெப்பக்குளத்தையும், கோட்டையையும் "சிவகங்கை"யைச் சுற்றிக் கட்டினார், அங்கு அவர் தனது ஆன்மீக குரு சதப்பியரை சந்தித்தார். மற்றொரு கூற்றின்படி, சசிவர்ணனை [[ஆற்காடு நவாப்]] ராஜாவாக நியமித்தார்.<ref>{{cite book|title=The Sivaganga Zemindary: Its Origin and Its Litigation 1730 to 1899, with a Genealogical Tree|url=https://books.google.com/books?id=_eZAAQAAMAAJ&pg=PA190&dq=sivaganga&hl=en&sa=X&ei=EoyUU5q7JZaaqAaCpILYAg&ved=0CCcQ6AEwAA#v=onepage&q=sivaganga&f=false|ref=Iyer|last=Iyer|first=K. Annasawmi|publisher=Hoe & Company, Printers|year=1899}}</ref> சசிவர்ணன் சுமார் 1750 இல் இறந்தார், அவரது மகன் [[முத்து வடுகநாதர்|முத்துவடுகநாத பெரிய உடைய தேவர்]] ஆட்சியை ஏற்றுக்கொண்டார். இவர் 1780 இல் நவாபின் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் விதவையான [[வேலு நாச்சியார்]] மற்றும் கைக்குழந்தையான [[வெள்ளச்சி]] ஆகியோர், இருமருது சகோதரர்களான [[மருது பாண்டியர்|பெரிய மருது]] மற்றும் [[மருது பாண்டியர்|சின்ன மருது]] ஆகியோரின் உதவியுடன் இப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் 1780 [[ஐப்பசி]]த் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை [[திண்டுக்கல்]]லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 [[குதிரை]] வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் [[கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில்]] என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற [[சின்னமருது]], [[பெரிய மருது]] மற்றும் [[குயிலி]] தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் [[குயிலி]], என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். வேலு நாச்சியார் 1790 வரை இப்பகுதியை ஆட்சி செய்தார். பின்னர் [[வெள்ளச்சி]] நாச்சியார் கி.பி 1790 முதல் 1793 வரை ஆட்சி செய்தார்.
== புவியியல் மற்றும் பெயர் காரணம் ==
}}
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 40,403 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். சிவகங்கை மக்களின் சராசரி கல்வியறிவு 92.77% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 96.27% மற்றும் பெண்களின் கல்வியறிவு 89.24% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. சிவகங்கை மக்கள் தொகையில் 9.60% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref name="census">{{cite web |accessdate=அக்டோபர் 09, 2019|url = https://www.census2011.co.in/data/town/803736-sivaganga-tamil-nadu.html|title=2011 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, சிவகங்கையில் [[இந்து]]க்கள்
பழனியப்பன் சிதம்பரம்
முத்துலிங்கம்
(கவிஞர்)
|