எழுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sasidev |
imported>Sasidev |
||
வரிசை 25:
இங்கே தான் மதுரை மீனாட்சி அம்மன் பிறந்ததாகக் கூறப்படும் மீனாட்சி பண்ணை உள்ளது .தெற்கே உள்ள சதுரகிரியில் சுந்தரமகாலிங்கமும் , சந்தன மகாலிங்கமும்,மேற்கே உள்ள மலையில் மாவூற்று வேலப்பரும் ( முருகன்) கோவில் கொண்டுள்ளனர்.
==கலாச்சாரம்
ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு மாதம் சிறப்பு.சித்திரை 01 மாவூற்று வேலப்பருக்கும், சித்தர பௌர்ணமி அழகர் வைகையாற்றில் எழுந்தருளல் அன்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமியும்,ஸ்ரீ திருவேங்கடநாத பெருமாள் சுவாமியும் எழுந்தருளல், வைகாசியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன்,ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் திருவிழாக்கள், ஆடி அமாவாசை சுந்தர மகாலிங்கம்,புரட்டாசி மாதம் வாசிமலையானுக்கு உகந்த மாதம் ஆதலால் எங்கள் ஊரில் புரட்டாசி மாதம் அசைவம் இருக்காது.முதல் சனிக்கிழமை தொடங்கி 5 சனிக்கிழமை விரதம் இருந்து சுமார் 2500 அடி உயர மலையேறி வருவோம் ...!சாயங்காலம் கோவிலில் தீபம் ஏற்றிய பிறகே விரதம் முடிப்போம் ...! புரட்டாசியில் ஸ்ரீ முத்தாலம்மன் திருவிழா பதினெட்டுபட்டி ஊர்மக்களும் கலந்துகொள்ளும் திருவிழாவாக அதிவிமர்சையாக கொண்டாடப்படும். திருக்கார்த்திகை திருநாள் அன்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில் திருவிழாவும், மார்கழி மாதம் அணைத்து கோவில்களிலும், பங்குனி மாதம் முழுவதும் ஸ்ரீ பொட்டல் காளியம்மன் , ஸ்ரீ காச்சகாரியாம்மன் கோவில் திருவிழாக்களும் கொண்டாடப்படும். இதன் சிறப்பாக தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
| |||