ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/alangudi
|}}
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி வட்டத்தின் நகராட்சி]]<nowiki/>ஆகும்.
 
[[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] 1913ல் [[ஆலங்குடி சமஸ்தானம்|ஆலங்குடி சமஸ்தானத்தின்]] பகுதியைக் காட்டும் வரைபடம்
 
[[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுர மன்னர்]] '''இரகுநாத சேதுபதி''' என்ற '''கிழவன் சேதுபதி''', இரகுநாதராயத் தொண்டைமானின் தங்கையை மணந்துகொண்டதால், புதுக்கோட்டைப் பகுதியை, ''இரகுநாதராயத் தொண்டைமான்'' தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யுமாறு செய்தார்.
 
மன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் இங்கு ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் [[புதுக்கோட்டை]] என்ற பெயர் வழங்கப்பட்டது. இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து ''விஜயரகுநாதத் தொண்டைமான்'' (1730-1769). ''இராய ரகுநாதத் தொண்டைமான்'' (1769-1789), ''விஜயரகுநாதத் தொண்டைமான்'' (1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர்.
 
கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் திருச்சியைச் [[சந்தா சாகிப்|சந்தா சாகிப்பும்]], பிரெஞ்சுக்காரர்களும் முற்றுகையிட்ட பொழுதும், ஆங்கிலேயர்கள் [[ஐதர் அலி|ஐதர் அலியுடன்]] போர்புரிந்தபொழுதும் [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை மன்னர்]] ஆங்கிலேயக் [[கிழக்கிந்தியக் கம்பெனி|கிழக்கிந்தியக் கம்பெனிக்கு]] உதவியாக இருந்தார்.
 
[[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியின்]] வீழ்ச்சிக்குப் பிறகு (1799), அங்கிருந்து தப்பிவந்த [[கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்ட பொம்மனைப்]] பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானின் படைகள் உதவின.
 
பின்னர் மன்னரான ''விஜயரகுநாதராயத் தொண்டைமான்'' (1807-1825), தமது 10-வது வயதில் ஆட்சிக்கு வந்ததால் இவருக்கு ''பிளாக்பர்ன்'' என்ற ஆங்கில அரசியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். விஜயரகுநாதராயத் தொண்டைமானை அடுத்து இரகுநாதத் தொண்டைமானும் (1825-1839), இராமச்சந்திரத் தொண்டைமானும் (1839-1886) புதுக்கோட்டையின் மன்னராக வந்தனர். இராமச்சந்திரத் தொண்டைமான் சிறுவயதினராய் இருந்ததால் புதுக்கோட்டை நகரின் நிர்வாகத்தை ''சேஷய்ய சாஸ்திரி'' என்ற [[திவான் (அமைச்சர்)|திவான்]] கவனித்தார்.
 
இராமச்சந்திரத் தொண்டைமான் அடுத்து ''மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்'' புதுக்கோட்டையின் மன்னரானார் (1886). 1912ஆம் வருடம் [[புதுக்கோட்டை]] நகரத்தில் [[நகராட்சி]] மன்றம் நிறுவப்பட்டது. 1948இல் [[புதுக்கோட்டை சமஸ்தானம்]] இந்தியாவுடன் இணைந்தது. புதுக்கோட்டைப் பகுதிகள், திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுச் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] ஒரு பகுதியாக ஆயிற்று. புதுக்கோட்டையின் கடைசி மன்னராக இருந்தவர் இராஜ இராஜ கோபாலத் தொண்டைமான் ஆவார்.
 
==அமைவிடம்==
ஆலங்குடி பேரூராட்சி, [[புதுக்கோட்டை]]யிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] புதுக்கோட்டையில் உள்ளது.
"https://tamilar.wiki/w/ஆலங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது