அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''அந்தாதி''' ('''கடைமுதலி / ஈற்றுமுதலி''') என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sumathy1959
 
வரிசை 14: வரிசை 14:
* கலித்துறை அந்தாதி (கலித்துறை ஈற்றுமுதலி )
* கலித்துறை அந்தாதி (கலித்துறை ஈற்றுமுதலி )
* வெண்பா அந்தாதி (வெண்பா ஈற்றுமுதலி )
* வெண்பா அந்தாதி (வெண்பா ஈற்றுமுதலி )
* '''யமக அந்தாதி''' (யமக ஈற்றுமுதலி )<ref>[https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/Jun/12/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-3641655.html மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் யமக அந்தாதி]</ref>
* யமக அந்தாதி (யமக ஈற்றுமுதலி )
* சிலேடை அந்தாதி
* சிலேடை அந்தாதி
* திரிபு அந்தாதி
* திரிபு அந்தாதி
* நீரோட்ட யமக அந்தாதி
* நீரோட்ட யமக அந்தாதி

==சில அந்தாதி நூல்கள்==
==சில அந்தாதி நூல்கள்==
* [http://www.tamilvu.org/library/nationalized/pdf/89-vellaivaranar/arputhaththiruvanthathi.pdf அற்புதத்திருவந்தாதி] - காரைக்கால் அம்மையார்
* [http://www.tamilvu.org/library/nationalized/pdf/89-vellaivaranar/arputhaththiruvanthathi.pdf அற்புதத்திருவந்தாதி] - காரைக்கால் அம்மையார்

14:14, 5 மார்ச்சு 2025 இல் கடைசித் திருத்தம்

அந்தாதி (கடைமுதலி / ஈற்றுமுதலி) என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது, அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது, அது அந்தாதித் தொடை (கடைமுதலி/ஈற்றுமுதலித் தொடை) எனப்படும். அந்தாதி (கடைமுதலி / ஈற்றுமுதலி ) அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது.[1][2][3]

வரலாறு

சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தில் அந்தாதி அமைப்பு உண்டு. எனினும் அந்தாதி இலக்கியமாகத் தனியே அமைந்தவற்றில் இன்று கிடைக்கும் பழைய நூல் காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி ஆகும். தவிர பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் உள்ள நூல்களில் எட்டு அந்தாதி வடிவில் அமைந்துள்ளன.

மாணிக்கவாசகரின் திருவாசகம், திருமூலரின் திருமந்திரம், நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஆகியவற்றிலும் அந்தாதி வடிவில் அமைந்த பாடல்களைக் காண முடியும். இவை தவிர பிரபந்த வகையைச் சேர்ந்த நான்மணிமாலை, இரட்டைமணிமாலை, அட்டமங்கலம், நவமணிமாலை, ஒருபா ஒருபது, இருபா இருபது, மும்மணிக்கோவை, மும்மணிமாலை, கலம்பகம் என்பவை அந்தாதியாக அமைகின்றன.

வகைகள்

அந்தாதிகள் பல வகைகளாக உள்ளன; இவற்றுள் பின்வருவன அடங்கும்:

  • ஒலியந்தாதி (ஒலி ஈற்றுமுதலி )
  • பதிற்றந்தாதி (பதிற்ற ஈற்றுமுதலி )
  • நூற்றந்தாதி (பதிற்ற ஈற்றுமுதலி )
  • கலியந்தாதி (கலி ஈற்றுமுதலி )
  • கலித்துறை அந்தாதி (கலித்துறை ஈற்றுமுதலி )
  • வெண்பா அந்தாதி (வெண்பா ஈற்றுமுதலி )
  • யமக அந்தாதி (யமக ஈற்றுமுதலி )[4]
  • சிலேடை அந்தாதி
  • திரிபு அந்தாதி
  • நீரோட்ட யமக அந்தாதி

சில அந்தாதி நூல்கள்

மேற்கோள்கள்

  1. Carman, John; Carman, Research Fellow and Senior Lecturer John; Narayanan, Vasudha (1989-05-17). The Tamil Veda: Pillan's Interpretation of the Tiruvaymoli (in ஆங்கிலம்). University of Chicago Press. p. 60. ISBN 978-0-226-09305-5.
  2. "அற்புதத் திருவந்தாதி - விக்கிமூலம்". ta.wikisource.org. Wikisource.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2008-11-21. Retrieved 2012-08-31.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் யமக அந்தாதி
"https://tamilar.wiki/w/index.php?title=அந்தாதி&oldid=244995" இலிருந்து மீள்விக்கப்பட்டது