அர்ச்சகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்
 
No edit summary
 
வரிசை 22:
== அனைத்து சாதியினரும் அர்ச்சகர் கோரிக்கை ==
இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் ஆகம விதிகளின்படி நடத்தப்படுகின்ற இந்துக் கோயில்களில் பெண்கள் மற்றும் [[பிராமணர்]] அல்லாத சாதியினர் பூசை செய்ய அனுமதி இல்லை. எனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை சமூக நீதியை வலியுறுத்துபவர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. [[அம்பேத்கர்]] தலைமையில் 1927இல் நடந்த மகத் போராட்ட மாநாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தினர் அனைத்து சாதியினரும் அர்சகராக வேண்டும் என்று கோரி வந்தனர். இதையடுத்து [[மு. கருணாநிதி]]யின் ஆட்சிக்காலத்தில் 1970 திசம்பர் இரண்டாம் நாளில் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றத்தில்]] இதற்கான சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தில் அர்ச்சகர் வாரிசு உரிமை ஒழிக்கப்படுவதாகவும், உரிய பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகராகலாம் என்றும் கூறப்பட்டிருந்த‍து. இதை எதிர்த்து [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்]] நடந்த வழக்கின் முடிவில் அர்ச்சகர் வாரிசு உரிமை ஒழிக்கப்படுவதை ஏற்பதாகவும், அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டப்பிரிவு செல்லாது என்று கூறியது.<ref>{{cite journal | title=அறநிலையத்துறை நியமித்த முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர் | author=செங்கதிர் | journal=சிந்தனையாளன் | year=2018 | month=அக்டோபர்}}</ref>
=== கேரளத்தில் நியமனம் ===
[[கேரளம்|கேரளத்தில்]] [[ஈழவர்]] சாதியைச் சேர்ந்த ஒருவர் 1993 இல் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தின்]] இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு அர்ச்சகராக நியமிக்கப்பட சாதியை ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது முதன்மையான கூறாக இருக்க வேண்டியதில்லை என்று கூறியது.
=== தமிழகத்தில் சட்டம் ===
மேற்கண்ட தீர்ப்பை அடிப்படையாக கொண்டு மீண்டும் [[மு. கருணாநிதி]]யின் ஆட்சிக்காலத்தில் 2006 மே 23 அன்று [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றத்தில்]] இந்துக்களில் உரிய பயிற்சியும், தகுதியும் உள்ள அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் அனைத்து சாதியைகளைய்ம் சேர்ந்த 206 பேருக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடு்க்கப்பட்டது. இந்த வழக்கில் 2015 திசம்பரில் வழங்கிய தீர்ப்பில் ஆகமப் பயிற்சி பெற்ற 206 பேரை அர்ச்சகராக நியமிக்கக் கூடாது என்று கூறவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட கோயிலில் [[ஆகமம்|ஆகம]] விதிப்படி எந்தப் பிரிவினர், கோத்திரத்தினர் காலங்காலமாக இருந்து வருகின்றார்களோ அவர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் தீர்ப்பு வழங்கியது.<ref>{{cite web | url=https://www.bbc.com/tamil/india-41597619 | title=தமிழ்நாட்டில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக தடைக்கல்லாக இருப்பது யார்? | publisher=bbc.com | work=கட்டுரை | date=12 அக்டோபர் 2017 | accessdate=13 அக்டோபர் 2018}}</ref>
=== கேரளத்தில் மீண்டும் நியமனம் ===
இந்திய உச்ச நீதிமன்றத்தின் குழப்பமான தீர்ப்புக்குப் பிறகு அர்ச்சகர் பணியில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு 32 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது என கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து கேரள அறநிலையத்துறை 2017 அக்டோபர் 6 அன்று 26 [[பிராமணர்]], 30 [[பிற்படுத்தப்பட்டோர்]], 6 [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதியினர்]] என மொத்தம் 62 பேருக்கு அர்ச்சகர் பணி நியமன ஆணையை வழங்கியது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/tamilnadu/article19813467.ece | title=கேரளாவைப் போல தமிழகமும் தலித்துகளை அர்ச்சர்கர்களாக நியமிக்க வேண்டும்: திருமாவளவன் | publisher=இந்து தமிழ் | work=செய்தி | date=6 அக்டோபர் 2017 | accessdate=13 அக்டோபர் 2018}}</ref>
 
=== தமிழ்நாட்டில் நியமனம் ===
இதன் பிறகு தமிழக அறநிலையத் துறையால் முதன் முதலாக பிற்படுத்தப்பட்ட சாதியினரான [[அகமுடையார்]] சாதியைச் சேர்ந்தவரும், தமிழக அறநிலையத் துறையால் அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவரான மாரிச்சாமி என்பவர் மதுரை தல்லாக்குளம் அய்யப்பன் கோயில் பூசாரியாக 2017 பெப்ரவரி மாதம் பணியில் அமர்த்தப்பட்டார்.<ref>{{cite web | url=http://temple.dinamalar.com/news_detail.php?id=82605 | title=மந்திரம் ஓதுகிறார் மதுரை மாரிச்சாமி | publisher=தினமலர் | work=செய்தி | accessdate=13 அக்டோபர் 2018}}</ref><ref>{{cite web | url=https://tamil.thehindu.com/opinion/reporter-page/article24580574.ece | title=தமிழகத்தில் முதன்முறையாக பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்: சமூக நீதிக்கான முக்கிய நகர்வு | publisher=இந்து தமிழ் | work=செய்திக் கட்டுரை | date=2 ஆகத்து 2018 | accessdate=13 அக்டோபர் 2018 | author=நந்தினி வெள்ளைச்சாமி}}</ref>
 
=== பெண் அர்ச்சகர்கள் ===
[[கர்நாடகா|கர்நாடகாவின்]] மங்களூருவில் கேரளாவின் ஆன்மீக சீர்திருத்தவாதியான நாராயண குருவால் அமைக்கப்பட்ட குத்ரோலி கோகர்நாதேஸ்வரா கோவிலில் லட்சுமி மற்றும் இந்திரா ஆகிய இரு விதவைப் பெண்கள் நவராத்திரியின் துவக்க தினத்தன்று அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர்.<ref>{{cite web | title = கர்நாடகாவில் விதவைகள் அர்ச்சகர்களாக நியமனம் | publisher = பிபிசி | date = 7 அக்டோபர் 2013 | url = http://www.bbc.co.uk/tamil/india/2013/10/131007_widowtopriests.shtml | accessdate = 12 அக்டோபர் 2013}}</ref>
 
"https://tamilar.wiki/w/அர்ச்சகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது