இராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>KanagsBOT சி clean up using AWB |
||
வரிசை 16:
[[படிமம்:Rama and Hanuman fighting Ravana, an album painting on paper, c1820.jpg|thumb|300px|இராமன் அனுமனின் தோளில் இருந்தபடி இராவணனுடன் போர்புரியும் காட்சி.]]
{{இந்து புனிதநூல்கள்}}
'''இராமாயணம்''' (''Ramayanam''; {{audio|Ta-இராமாயணம்.ogg|ஒலிப்பு}}) [[வால்மீகி]] என்னும் முனிவரால் [[சமசுக்கிருதம்|சமசுக்கிருத]] மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும்.<ref>இதிகாசம் என்றால் மரபுவழி வரலாறு, கதை என்று பொருள் படும். பெரும்காவியம் என்றும் பொருள். வாமன் சிவராமன் ஆப்தேயின் ''த பிராக்டிக்கல் சமசுக்கிருத-இங்கிலீசு அகராதி'', திருத்திய, விரிவாக்கிய பதிப்பு (V. S. Apte's the Practical Sanskrit-English Dictionary ), பக்கம் 382: इतिहासः itihāsḥ इतिहासः [fr. इति-ह-आस (3rd. pers. sing. Perf. of अस् to be); so it has been] (1 History (legendary or traditional); धर्मार्थकाममोक्षाणामुपदेशसमन्वितम् .</ref> இது [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 5 ஆம் நூற்றாண்டுக்கும் [[பொது ஊழி|பொ.ஊ.]] 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளிலும்]], பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. [[கம்பர்]] என்னும் புலவர் புலவர்களுக்கே உண்டான பாணியில் பல கற்பனைகளை இனைத்து இதனைத் தமிழில் எழுதினார். இது [[கம்ப இராமாயணம்]] எனப்படுகின்றது. [[கெமர் மொழி]]யில் உள்ள ''ரீம்கெர்'', [[தாய் மொழி]]யில் உள்ள ''[[ராமகியென்|ராமகியெ]]'', லாவோ மொழியில் எழுதப்பட்ட ''ப்ரா லாக் ப்ரா லாம்'', [[மலாய் மொழி]]யின் ''இக்காயத் சேரி ராமா'' போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும். கோசல நாட்டின் தலை நகரமான அயோத்தியை சேர்ந்த [[ரகு வம்சம்|ரகு வம்ச]] இளவரசரான [[ராமர்]], அவர் மனைவி [[சீதை]] ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இதிகாசம், உறவுகளுக்கு இடையேயான கடமைகளை எடுத்துக் காட்டுகின்றது. சிறந்த வேலையாள், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்கவேண்டும் என்பது இதன் கதை மாந்தர்கள் மூலம் விளக்கப்படுகின்றது.<ref>[http://thehistoryofsrivaishnavam.weebly.com/2951299230062990-2949299729803006299229903021.html இராம அவதாரம்]</ref>
== சொற்பிறப்பியல் ==
வரிசை 24:
ஜோதிட கணக்கீடுகளின்படி, ''ராமாயணத்தின்'' விவரிப்பு பொ.ஊ.மு. 5301 இல் [[திரேதா யுகம்]] காலகட்டத்தில் நடந்தது.<ref>Absolute dating of Ramayana {https://books.google.lk/books/about/Absolute_Dating_of_Ramayana.html?id=XTXyDwAAQBAJ&redir_esc=y}</ref>
ராபர்ட் பி. கோல்ட்மேனின் கூற்றுப்படி ''ராமாயணத்தின்'' பழமையான பகுதிகள்
== இந்திய மொழிகளில் இராமாயணம் ==
தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர்.
===வடமொழி இராமாயண நூல்கள்===
#. யோக வசிஷ்ட (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (பொ.ஊ. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு)
#. [[அத்யாத்ம இராமாயணம்]] (பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)<ref>[http://www.exoticindiaart.com/book/details/adhyatma-ramayanam-tamil-NZJ296/ அத்யாத்ம இராமாயணம்]</ref>
வரிசை 49:
இந்த இராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளினதும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர்.
== வால்மீகி இராமாயணத்தின் கதைச் சுருக்கம்
=== பால காண்டம் ===
{{main|பால காண்டம்}}
வரி 56 ⟶ 57:
சிறிது காலத்திற்கு பின்பு நால்வரும் [[வசிட்டர்|வசிட்டரிடம்]] சீடர்களாக சேர்ந்து பல்வேறு கலைகளை கற்று கொள்ள ஆரம்பித்தனர். இந்நிலையில் [[விசுவாமித்திரர்|விசுவாமித்திர முனிவர்]], அயோத்தியை அடைந்து தசரதரிடம் தன் யாகங்களுக்கு சில ராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை அழிக்க இராமனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு இராமனையும், லட்சுமணனனையும் அவருடன் அனுப்பி வைத்தார். சகோதரர்கள் வந்த வேலையை செவ்வனே செய்த்தால், விசுவாமித்திரர் அவர்களுக்கு சில அஸ்திரங்களை அருளி ஆசிர்வதித்தார்.
=== அயோத்தி காண்டம் ===
[[File:Ravi Varma-Rama-breaking-bow.jpg|thumb|போட்டியில் மகாதேவரின் வில்லை முறித்த [[இராமன்]], (இராஜா ரவி வர்மாவின் ஓவியம்)]]
வரி 63 ⟶ 64:
இவருடன் சீதாவும் லட்சுமணனும் இணைந்து காடு செல்கின்றனர். அவரைப் பின்தொடர வேண்டாம் என்று அவர் சீதாவிடம் கூறும்போது, "நீங்கள் வசிக்கும் காடு எனக்கு அயோத்தி, நீங்கள் இல்லாமல் அயோத்தி என்பது எனக்கு ஒரு உண்மையான நரகமாகும்" என்று கூறுகிறாள். ராமர் வெளியேறிய பிறகு, தசரத மன்னர், துக்கத்தை தாங்க முடியாமல் காலமாகிறார். இதற்கிடையில், தனது நாட்டிற்குத் திரும்பிய பரதன், அயோத்தியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்கிறார். பரதன் தனது தாயின் பொல்லாத சூழ்ச்சியினால் அரியணை ஏற மறுத்து, காட்டில் ராமரை சந்திக்கிறான். பரதன் ராமரிடம் திரும்பி வந்து ஆட்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார். ஆனால் தனது தந்தையின் கட்டளைகளை நிறைவேற்ற தீர்மானித்த ராமர், நாடு திரும்ப மறுக்கிறார்.
=== ஆரண்ய காண்டம் ===
{{main|ஆரண்ய காண்டம்}}
சில காலத்தின் பின் தனது மூத்த மகனான இராமனுக்கு முடிசூட்டத் தசரதர் எண்ணினார். அரச குடும்பத்தினரும் மக்களும் இது குறித்து மிகவும் மகிழ்ந்தனர். ஆனால், கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தியான கூனி என்பாள் இராமன் மீது வெறுப்புற்றிருந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை. அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் வலையில் விழுந்துவிட்டாள். முன்னொருபோது தசரதனின் உயிரைக் கைகேயி காத்தமைக்காக இரண்டு [[வரம்|வரங்கள்]] தருவதாகத் தசரதன் வாக்களித்திருந்தான். அவ்விரு வரங்களையும் கேட்டு வாங்கும்படி கூனி கைகேயிக்கு ஆலோசனை கூறினாள். தனது மகனான பரதன் அரசனாக வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்னும் இரண்டு வரங்களைக் கைகேயி தசரதரிடம் கேட்டாள். மனதை மாற்றிக்கொள்ளும்படி தசரதர் வேண்டியும் கைகேயி பிடிவாதமாக மறுத்துவிட்டதனால், தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி அவளுடைய கோரிக்கைக்குத் தசரதன் இணங்க வேண்டியதாயிற்று. தசரதரின் முடிவைக் கேள்வியுற்ற இராமன் உடனடியாகவே காட்டுக்குக் கிளம்பினான். அவன் தடுத்தும் கேளாமல் சீதையும், இலட்சுமணனும் இராமனுடன் காட்டுக்குக் கிளம்பினர். இராமன் காட்டுக்குப் போய்விட்டான் என்பதைக் கேள்வியுற்ற தசரதர் கவலை தாங்காமல் உடனேயே இறந்துவிட்டார். அவ்வேளையில் பரதனும், சத்துருக்கனும் நாட்டுக்கு வெளியே இருந்தனர். தந்தையின் இறப்புச் செய்தி கேள்வியுற்ற அவர்கள் உடனடியாக நாடு திரும்பி நடந்ததை அறிந்து கொண்டனர்.
வரி 71 ⟶ 72:
இராமனும், சீதையும், இலட்சுமணனும் காட்டில் வாழ்ந்து வந்தபோது அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை என்பவள் இராமன் மீது ஆசை கொண்டாள். இலட்சுமணன் அவளது மூக்கை வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த அவள் தனது அண்ணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன் இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில், அசோகவனத்தில் சிறை வைத்தான். சீதையில் அழகில் மயங்கிய அவன், தன்னை மணந்து கொள்ளுமாறும் அவளை வற்புறுத்தினான்.
=== [[கிஷ்கிந்தா காண்டம்|கிஷ்கிந்தா]] / [[சுந்தர காண்டம்|சுந்தர]] / [[யுத்த காண்டம்|யுத்த]] காண்டங்கள் ===
சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான [[சுக்கிரீவன்|சுக்கிரீவனின்]] நட்புக் கிடைத்தது. சுக்கிரீவனின் அமைச்சனும், காற்றுக் கடவுளின் மகனுமான [[அனுமன்]] இராமனிடம் பெரும் பக்தி கொண்டிருந்தான். சுக்கிரீவனின் ஆணைப்படி வானரப் படைகள் பல திசைகளிலும் சென்று சீதையைத் தேடின. அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றான். அங்கே அசோக வனத்தில் சிறையிருந்த சீதையைக் கண்டான்.
வரி 87 ⟶ 88:
அனுமன் பின்னர் இலங்கையில் மரங்களையும் கட்டிடங்களையும் அழித்து இராவணனின் வீரர்களைக் கொல்வதன் மூலம் அழிவை ஏற்படுத்துகிறார். ராவணனின் வீரர்கள் தன்னைப் பிடித்து ராவணனிடம் அழைத்துச் செல்ல அனுமதிக்கிறார். சீதையை விடுவிக்க ராவணனுக்கு தைரியமான சொற்பொழிவு செய்கிறார். ராவணனால் அவரது வால் தீ வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர் பிணைப்புகளில் இருந்து தப்பித்து கூரையிலிருந்து கூரைக்குத் தாவுகிறார். ராவணனின் கோட்டைக்கு தீ வைத்து விட்டு தீவில் இருந்து பறந்து செல்கிறார். மகிழ்ச்சியான செய்திகளுடன் கிஷ்கிந்தாவுக்குத் திரும்புகிறார்.
===உத்தர காண்டம்===
[[File:2016 Singapur, Rochor, Świątynia Sri Krishnan (21).jpg|thumb|300x300px| இராமர் பட்டாபிசேகம்]]
[[File:Hermitage of Valmiki, Folio from the "Nadaun" Ramayana (Adventures of Rama) LACMA AC1999.127.45.jpg|thumb|250px|சீதையை [[வால்மீகி]] ஆசிரமத்தில் சேர்த்தல், [[லவன்]]-[[குசன்|குசர்கள்]] பிறப்பு மற்றும் வால்மீகி லவ-குசர்களுக்கு கல்வி மற்றும் போர் பயிற்சி கற்றுத் தருதல் மற்றும் இராமகாதையை எடுத்துரைத்தல்]]
வரி 106 ⟶ 108:
== தமிழ் இலக்கியங்களில் இராமாயணம் பற்றிய குறிப்பு ==
பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டில் [[கம்பர்]], [[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தை]] தமிழில் எழுதுவதற்கு முன்பே, இராமாயணக் கதையைப் பற்றிய பல பழங்கால குறிப்புகள் உள்ளன, இது பொது சகாப்தத்திற்கு முன்பே தமிழ் நிலங்களில் நன்கு அறியப்பட்ட கதை என்பதைக் குறிக்கிறது. இக்கதை பற்றிய குறிப்புகள் [[அகநானூறு]] (பொ.ஊ.மு. 1ஆம் நூற்றாண்டு)<ref>{{Cite web|url=https://adakshinamurthy.wordpress.com/2015/07/01/akananuru-neythal-poem-70/|title=Akananuru: Neytal – Poem 70|last=Dakshinamurthy|first=A|date=July 2015|website=Akananuru|access-date=22 July 2019}}</ref> மற்றும் [[புறநானூறு]] (பொ.ஊ.மு. 300 தேதியிட்டது),<ref name="
== இராமாயணமும் இலங்கையும் ==
வரி 155 ⟶ 157:
[[பகுப்பு:இந்திய தொன்மவியல்]]
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
[[பகுப்பு:பண்டைய
[[பகுப்பு:கிழக்கின் புனித நூல்கள்]]
[[பகுப்பு:இராமர்]]
| |||