உணர்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>Rasnaboy
 
வரிசை 1:
[[File:Animal diversity b.png|thumb|upright=1.4|விலங்குகளின் உணர்திறனை உறுதிப்படுத்துவது மிகக் கடினம் என்றாலும் அறிவியல் அறிஞர்கள் பொதுவாக அனைத்து [[முதுகெலும்பி]]களும் பெருவாரியான [[முதுகெலும்பிலி]]களும் உணர்திறன் கொண்டவை என்பதை ஏற்கின்றனர்.<ref>{{Cite news |last=Birch |first=Jonathan |date=2021-05-16 |title=Which animals should be considered sentient in the eyes of the law? |url=https://www.theguardian.com/commentisfree/2021/may/16/animals-feel-humans-evidence-sentient |access-date=2024-06-09 |work=The Guardian |language=en-GB |issn=0261-3077}}</ref><ref name="CDC2012" />]]
[[File:Expression of the Emotions Figure 10.png|thumb|மனதில் பாச உணர்வு கொண்ட ஒரு [[பூனை]] (1872-ல் T. W. வுட் வரைந்த ஓவியம்)]]
 
'''உணர்திறன்''' ({{lang-en|sentience}}) என்பது [[உணர்வு]]களை அனுபவிக்கும் திறன் ஆகும்.<ref>{{Cite web|url=https://www.merriam-webster.com/dictionary/sentience|title=Definition of sentience|publisher=Merriam-Webster Dictionary|language=en|access-date=2019-07-01}}</ref> [[மேற்கத்திய மெய்யியல்|மேற்கத்திய மெய்யியலில்]] "சென்ஷியன்ஸ்" என்றழைக்கப்படும் இச்சொல் "உணர்வு" என்று பொருட்படும் ''சென்டியன்டெம்'' என்ற [[இலத்தீன்]] மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.<ref>{{cite web |url=https://www.etymonline.com/word/sentient |title=Sentient |last=Harper |first=Douglas |date= |website=Etymology Online |publisher=Douglas Harper |access-date=31 January 2021}}</ref> இச்சொல் முதன்முதலில் 1630-களில் [[மெய்யியல்]] அறிஞர்களால் உணரும் திறனை [[அறிவுத்திறம்|அறிவுத்திறனி]]லிருந்து வேறுபடுத்த வேண்டி உருவாக்கப்பட்டது. நவீன [[மேற்கத்திய மெய்யியல்|மேற்கத்திய மெய்யியலில்]] இச்சொல் உணர்வுகளை உணரும் தன்மையைக் குறிக்கிறது. [[இந்திய மதங்கள்|ஆசிய மதங்களில்]] உணர்த்திறன் என்ற சொல் பல்வேறு கருத்துகளைப் பிரதிபலிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் புனைக்கதைகளில், உணர்த்திறன் என்ற சொல் சில சமயங்களில் "அறிதல்", "[[சுயவுணர்வு]]", "[[உணர்வு நிலை|உணர்வுநிலை]]" போன்ற சொற்களுடன் மாறி மாறிப் பயன்படுத்தப்படுகிறது.<ref name=Scerri2016>{{cite journal |last1=Scerri |first1=Mariella |last2=Grech |first2=Victor E. |date=2016 |title=Sentience in science fiction 101 |url=https://www.um.edu.mt/library/oar/handle/123456789/25749 |journal=SFRA Review |volume=315 |pages=14–18 |doi= |access-date=31 January 2021}}</ref>
 
சில எழுத்தாளர்கள்அறிஞர்கள் உணர்திறனை பிரத்தியேகமாக [[வலி]] அல்லது இன்பம் போன்ற மதிப்புமிக்க (நேர்மறை அல்லது எதிர்மறை) மன அனுபவங்களுக்கான (valenced mental experiences) திறன் என வரையறுக்கின்றனர்.<ref>{{Cite book |last=Birch |first=Jonathan |url=https://academic.oup.com/book/57949 |title=The Edge of Sentience: Risk and Precaution in Humans, Other Animals, and AI |date=2024-08-15 |publisher=Oxford University Press |isbn=978-0-19-196672-9 |edition=1 |page=1 |language=en |doi=10.1093/9780191966729.001.0001}}</ref> மேலும் சில அறிஞர்கள் வெறும் [[ஒளி]], [[வலி]] போன்ற உணர்வுகளை உணரும் திறனிலிருந்து [[காதல்]], [[துன்பம்]] போன்ற [[உணர்ச்சி]]களை உணரும் திறனை வேறுபடுத்திக் காட்ட இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய மெய்யியலில் சுயநினைவுள்ள ஒரு தனிநபரின் அகநிலை விழிப்புணர்வு அனுபவங்கள் [[தன்மையங்கள்]] (qualia) என அழைக்கப்படுகிறது.<ref name=Scerri2016/>
 
[[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்]] 7 ஜூலை 2012 அன்று பொதுவில் அறிவிக்கப்பட்ட "கேம்பிரிட்ஜ் உணர்வுநிலைப் பிரகடனத்தின்படிபிரகடனத்தின்" படி நனவு என்பது சிறப்பு [[நரம்பியல்]] கட்டமைப்புகளின்—முக்கியமாக நரம்பு-உடற்கூற்றியல், நரம்பு-வேதியியல், நரம்பு-உடலியங்கியல் போன்ற அடி மூலக்கூறுகளின்—செயற்பாட்டால் உருவாவது ஆகும். இது நன்கு பரிணமித்த உயிரினங்களில் [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்பு மண்டலமாக]] வெளிப்பட்டு நனவை உருவாக்குகிறது. அதன்படி, இந்த அடி மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும் உயிரினங்கள் மட்டுமே உணர்வுநிலை கொண்டவை ஆகும். இவ்வுயிரிணங்கள் அனைத்துமே [[விலங்கு]]த் [[திணை (உயிரியல்)|திணையில்]] உள்ளவை ஆகும். விலங்குத் திணையில் [[கடற்பாசி]]கள், பிளாக்கோசோவன்கள், மீசோசோவன்கள் ஆகிய மூன்று மட்டும் இதற்கு விதிவிலக்கு; இவை மூன்றும் எளிமையான உடலமைப்பைக் கொண்டவையாகவும் நரம்பு மண்டலம் இல்லாதவையாகவும் இருப்பதால் இவை விலங்குத் திணையைச் சேர்ந்த உயிரினங்களாக இருந்தாலும் உணர்வுநிலையில்லாத ஒரே விலங்குகளாகத் திகழ்கின்றன.<ref name="CDC2012">{{cite web | url = http://fcmconference.org/img/CambridgeDeclarationOnConsciousness.pdf | title = The Cambridge Declaration on Consciousness | last = Low | first = Philip | date = 7 July 2012 | website = FCM Conference | publisher = Cambridge University | access-date = 5 August 2020}}</ref>
 
== உணர்திறன் குறித்த மெய்யியல் ==
மெய்யியலில் அறிஞர்கள் பலரும் [[உணர்வு நிலை|உணர்வுநிலைக்கும்]] உணர்திறனுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பலவாறு வரையறுக்கிறார்கள். அன்டோனியோ டமாசியோவின் கூற்றுப்படி உணர்திறன் என்பது உணர்வுநிலையை (நனவை) வரையறுப்பதற்கான ஒரு குறைந்தபட்ச வழியாகும். இவ்வழியை விடுத்து வேறேதேனும் வழியில் உணர்வுநிலையை வரையறுக்க முற்படின் நனவு என்ற சொல் உணர்திறனைப் பொத்தாம்பொதுவாகவும் மனம், உணர்வுநிலை ஆகியவற்றின் அம்சங்களான படைப்பாற்றல், புத்திசாலித்தனம், அறிவாற்றல், சுயவிழிப்புணர்வு, உள்நோக்கம் (எண்ணங்களைக் கொண்டிருக்கும் திறன்) ஆகியவற்றோடு சேர்த்துக் கூட்டாகவும் சுட்டிவிடும் அபாயமுள்ளது. உணர்திறன் என்பது உணர்வுகளை உணரும் திறன் என்பதால் நனவு உணர்வின் இக்கூடுதல் அம்சங்கள் உணர்திறனுக்கு அவசியமானவையாக இருக்காது.<ref>{{Cite journal|last=Damasio|first=Antonio|date=October 2001|title=Fundamental feelings| journal=Nature| language=en| volume=413| issue=6858| pages=781| doi=10.1038/35101669| pmid=11677584| bibcode=2001Natur.413..781D| s2cid=226085| issn=1476-4687| doi-access=free}}</ref>
 
=== உணர்வுநிலை ===
[[File:Expression of the Emotions Figure 10.png|thumb|மனதில் பாச உணர்வு கொண்ட ஒரு [[பூனை]] (1872-ல் T. W. வுட் வரைந்த ஓவியம்)]]
{{See also|உணர்வு நிலை}}
தாமஸ் நாகல் தனது ''வாட் இஸ் இட் லைக் டு பீ எ பேட்?'' ("வௌவாலாக இருத்தல் என்பது எத்தகையது?") என்ற ஆய்வறிக்கையில் உணர்வுநிலை என்பது ஒரு பொருளின் அகநிலை புலனுணர்வு அனுபவங்களைப் பெறுவதற்கான திறனைக் குறிக்கும் என்கிறார். வேறுவிதமாகக் கூறினால், உணர்வுநிலை என்பது ஏதோ ஒன்றாக தான் இருப்பதை உணரக்கூடிய திறன் கொண்ட நிலையாகும் என்று சில மெய்யியல் அறிஞர்கள் விளக்கி அவ்வனுபவங்களை ''குவாலியா'' எனப்படும் "தன்மையங்கள்" என்று சொல் கொண்டு குறிப்பிடுகின்றனர்.<ref name=Nagel1974>{{cite journal | last1 = Nagel | first1 = Thomas | year = 1974 | title = What Is It Like to Be a Bat? | journal = The Philosophical Review | volume = 83 | issue = 4| pages = 435–450 | doi=10.2307/2183914 | jstor=2183914 |url={{google books |plainurl=y |id=fBGPBRX3JsQC|page=165}}}}</ref> நனவு உணர்நிலையை ஏற்படுத்தும் உடலின் செயல்முறைகள் ஒருபோதும் நம்மால் புரிந்து கொள்ளப்படாது என்று காலின் மெக்கின் போன்ற சில அறிஞர்கள் கருதுகிறார்கள். இதுவே அறிவியல் வட்டாரத்தில் "புதிய மர்மவாதம்" (new mysterianism) என்று அழைக்கப்படுகிறது. நனவின் மற்ற அம்சங்கள் ஆய்வுக்கு உட்பட்டு அறிவியலால் வரையறை செய்யப்படக்கூடியவை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், தன்மையங்கள் என்பதை ஒருபோதும் விளக்கமுடியாது என்று அவர்கள் வாதிடுகின்றனர். டேனியல் டென்னெட் போன்ற சில அறிஞர்கள் தன்மையங்கள் ஒரு அர்த்தமுள்ள கருத்து அல்ல என்று மறுக்கின்றனர்.<ref name="Ransey">{{cite encyclopedia | title=Eliminative Materialism | encyclopedia=The Stanford Encyclopedia of Philosophy | publisher=Stanford University | access-date=19 June 2014 | author=Ramsey, William | editor=Zalta, Edward N. | year=2013 | edition=Summer 2013 | url=http://plato.stanford.edu/archives/sum2013/entries/materialism-eliminative/}}</ref>
வரி 16 ⟶ 17:
2012-ம் ஆண்டு ஜூலை 7 அன்று [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்]] "கேம்பிரிட்ஜ் உணர்வுநிலைப் பிரகடனத்தில்" நனவு என்பது சிறப்பு [[நரம்பியல்]] கட்டமைப்புகளின்—முக்கியமாக நரம்பு-உடற்கூற்றியல், நரம்பு-வேதியியல், நரம்பு-உடலியங்கியல் போன்ற அடி மூலக்கூறுகளின்—செயற்பாட்டால் உருவாவது ஆகும் என்று அறிவியல் அறிஞர்களால் பொதுவில் பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நரம்பியல் கட்டமைப்புகள் நன்கு பரிணமித்த உயிரினங்களில் [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்பு மண்டலமாக]] வெளிப்பட்டு நனவை உருவாக்குகிறது. இதன் விளைவாக இந்த அடி மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும் உயிரினங்கள் மட்டுமே உணர்வுநிலை கொண்டவை ஆகும். இவையனைத்துமே [[விலங்கு]]த் [[திணை (உயிரியல்)|திணையில்]] உள்ள உயிரினங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.{{Ref label|A|a|none}} விலங்குத் திணையில் எளிமையான உடலமைப்பைக் கொண்டவையாகவும் நரம்பு மண்டலம் இல்லாதவையாகவும் இருக்கும் [[கடற்பாசி]]கள், பிளாக்கோசோவன்கள், மீசோசோவன்கள் ஆகிய மூன்று திணைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.<ref name="CDC2012"/>
 
==== உடலார்ந்த உணர்வுநிலையும் பாதிப்பு உணர்வுநிலையும் ====
[[File:Gombe Stream NP Mutter und Kinder.jpg|thumb|விளையாட்டு மனநிலையில் உள்ள [[சிம்பன்சி]]கள்.]]
உணர்திறன் என்பது சில சமயங்களில் உடலார்ந்த உணர்வுநிலையைக் (phenomenal consciousness) குறிக்கும் குறியீடாகப் பயன்படுத்தப்படுகையில் வேறு சமயங்களில் பாதிப்பு உணர்வுநிலையை (affective consciousness) எனப்படும் மேலும் குறிகிய கருத்தைச் சுட்டப் பயன்படுத்தப்படுகிறது என்று டேவிட் சால்மர்ஸ் கூறுகிறார். இங்கு உடலார்ந்த உணர்வுநிலை என்பது எந்தவொரு அகநிலை அனுபவத்தையும் பெறுவதற்கான திறன் ஆகும். பாதிப்பு உணர்வுநிலை என்பது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ (எ.கா.: வலி, இன்பம்) பாதிப்பு இணைதிறனை (affective valence) கொண்ட அகநிலைகளை அனுபவிக்கும் திறன் ஆகும்.<ref name="chalmers">{{cite AV media |people=Massimo Pigliucci, David Chalmers |date=Dec 18, 2020 |title=Philosophy Day 2020: David Chalmers - Consciousness and moral status |medium=YouTube |language=English |url=https://www.youtube.com/watch?v=ZP3ReZHGn7E | archive-url=https://ghostarchive.org/varchive/youtube/20211031/ZP3ReZHGn7E| archive-date=2021-10-31 | url-status=live|access-date=Sep 12, 2021 |publisher=Figs in Winter }}{{cbignore}}</ref>
 
=== இனங்காண் முரண்பாடும் அறிவாற்றலுடனான தொடர்பும் ===
உணர்திறனும் அறிவாற்றலும் கொள்கையளவில் ஒன்றுக்கொன்று சார்பற்றவை என்று இதுவரை அனுமானிக்கப்பட்டு வந்தாலும், அந்த அனுமானத்திற்கு அறிஞர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. அத்தகைய ஒரு விமர்சனம் இனங்காண் முரண்பாடுகள் பற்றியதாகும். ஒரு சிலந்தியை சிலந்தி அல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாத ஒன்றிற்கு சிலந்தியைக் கண்டு அச்சமோ வெறுப்போ கொள்ள இயலாது என்பது இனங்காண் முரண்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு. பொதுவாகக் கூறின், இனம் காணமுடியாத தூண்டலுக்குத் உணர்வார்ந்த துலங்குதல் என்பது இருக்க வாய்ப்பில்லை என்பதால் உணர்வுகள் இனங்காணமுடிந்த [[அறிதிறன்|அறிதிறனுக்கு]] சார்பற்றதாக இருக்க முடியாது என்று அறியப்படுகிறது.<ref>A. D. Milner, M. D. Rugg (2013). "The Neuropsychology of Consciousness"</ref><ref>E T Mullin (2007). "The Creation of Sensation and the Evolution of Consciousness"</ref>
 
=== முறைபடுத்தப்பட்ட அனிச்சைச் செயலின் துல்லியம் குறித்த அனுபவத் தரவுகள் ===
முறைபடுத்தப்பட்ட [[அனிச்சைச் செயல்]]கள் [[நாய்]]களில் காணப்படுவதை விட [[மனிதன்|மனிதக்]] குழந்தைகளிடம் மிகவும் வகைப்பட்டுக் காணப்படுகின்றன என்று [[இவான் பாவ்லோவ்|இவான் பாவ்லோவின்]] ஆய்வுகள் நிறுவுகின்றன. மனிதக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படும் பொழுது மட்டுமே [[உமிழ்நீர்|நாவில் நீர்]] சுரக்கையில் நாய்களுக்கோ உணவை நினைவூட்டிய பொழுதிலேயே நீர் சுரக்கத் துவங்கிவிடுகிறது. இதனை ஊர்ஜிதப்படுத்த இவ்வாய்வுகள் சமீப காலங்களில் மேலும் பலதரப்பட்ட விலங்குகளிடம் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு துல்லியமாக வேறுபடுத்தத் தெரிந்த புலனுணர்வுக்கு [[மூளை]]யின் அளவு மட்டுமின்றி மூளையில் பரவலாக விரவிக்கிடக்கும் இணைப்புகளும் தேவை என்பது தெரியவந்துள்ளது. இம்முடிவுகள் உணர்வுக்கும் [[அறிதிறன்|அறிதிறனுக்கும்]] வெவ்வேறு செயற்பகுதிகள் தேவை என்ற சித்தாந்தத்தை முறியடித்து மூளையில் பரவலாக விரவிக்கிடக்கும் புலனுணர்வு சித்தாந்தத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன.<ref>[[A. Charles Catania|Catania, A.C.]] (June 7, 1994). "Query: Did Pavlov's research ring a bell?". Psycoloquy Newsletter</ref>
 
== இந்திய மதங்களில் உணர்திறன் ==
{{see also|இந்திய சமயங்களில் விலங்குரிமை}}
[[இந்து மதம்]], [[பௌத்தம்]], [[சீக்கியம்]], [[ஜைனம்]] உள்ளிட்ட கிழக்குலகஇந்திய மதங்கள் மனிதர்கள் அல்லாதமனிதரல்லா விலங்குகளையும் உணர்திறன் கொண்ட உயிர்களாக இனம் கண்டு அங்கீகரிக்கின்றன.<ref>{{cite journal | last = Shanta | first = Bhakti Niskama | title = Life and consciousness – The Vedāntic view | journal = Communicative & Integrative Biology | volume = 8 | issue = 5 | pages = e1085138 | date = September–October 2015 | doi = 10.1080/19420889.2015.1085138 | pmid = 27066168 | pmc = 4802748 | id = 27066168 | doi-access = free }}</ref> உணர்திறன் கொண்ட உயிர்கள் ''ஜந்து'', ''பஹு ஜனா'', ''ஜகத்'', ''சத்வா'' உள்ளிட்ட பல்வேறு [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதச்]] சொற்களால் குறிக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் வழக்கமாக "மாயை, துன்பம், மறுபிறப்பு (சம்சாரா) ஆகியவற்றிற்கு உட்பட்ட உயிரினங்களைக் குறிக்கின்றன".<ref name="Getz">Getz, Daniel A. (2004). "Sentient beings"; cited in Buswell, Robert E. (2004). ''Encyclopedia of Buddhism''. Volume 2. New York, USA: Macmillan Reference USA. {{ISBN|0-02-865720-9}} (Volume 2): pp.760</ref> பௌத்தத்தின் சில குழுக்களில் தாவரங்கள், கற்கள் மட்டுமன்றி பிற ஜடப் பொருட்கள் கூட "உணர்திறன்" அல்லது 'உணர்வு' உள்ளவையாகக் கருதப்படுகின்றன.<ref>Keiji, Nishitani (ed.)(1976). ''The Eastern Buddhist''. 9.2: p.72. Kyoto: Eastern Buddhist Society; cited in Dumoulin, Henrich (author); Heisig, James (translator); and Knitter, Paul (translator)(2005). ''Zen Buddhism: A History ~ Volume 2: Japan.'' With an Introduction by Victor Sogen Hori. Bloomington, Indiana, USA: World Wisdom, Inc. {{ISBN|978-0-941532-90-7}}</ref><ref>{{Cite book |last=Ray |first=Reginald A. |title=Indestructible Truth: The Living Spirituality of Tibetan Buddhism |url=https://books.google.com/books?id=2CEMAAAACAAJ |accessdate=2008-10-21 |series=The World of Tibetan Buddhism |volume=1 |year=2000 |publisher=Shambhala Publications, Inc. |location=Boston |isbn=1-57062-910-2 |pages=26–27 }}{{Dead link|date=பிப்ரவரி 2023 |bot=InternetArchiveBot }}</ref> ஜைன மத நம்பிக்கையின்படி பல விஷயங்களுக்கு ஜீவன் என்ற [[ஆன்மா]] உண்டு என்பதால் சில சமயம் ஜீவனுள்ள அனைத்துமே "உணர்திறன்" கொண்டதாக அச்சமயத்தினரால் கருதப்படுவதுண்டு.<ref>{{citation | last1=Nemicandra |first1=Acarya |last2=Balbir |first2=Nalini | title=Dravyasamgrha: Exposition of the Six Substances | publisher =[[Hindi Granth Karyalay]] | year=2010 | location=Mumbai | version=(in Prakrit and English) Pandit Nathuram Premi Research Series (vol-19) |pages=1 of Introduction | isbn=978-81-88769-30-8 }}</ref><ref>{{citation |last=Grimes |first=John |title=A Concise Dictionary of Indian Philosophy: Sanskrit Terms Defined in English |pages=118–119 |publisher=SUNY Press | year=1996 |location=New York |isbn=0-7914-3068-5 }}</ref> நாற்காலி, மேஜைக்கரண்டி போன்ற சில பொருட்களுக்கு ஆன்மா அல்லது ஜீவன் கிடையாது என்று கருதப்படுவதால் அவை "அஜீவா" அல்லது "அஜீவன்" என்று அழைக்கப்படுகின்றன.<ref name="Shah">{{citation |last=Shah |first=Natubhai |title=Jainism : The World of Conquerors |publisher=Sussex Academic Press |date=November 1998 |isbn=1-898723-30-3 |url=https://books.google.com/books?id=g120RG8GkHAC&pg=PA50 |page=50 }}</ref> புலன்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஜீவன்கள் பலவாறு தரவரிசைப் படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, [[நீர்|நீருக்கு]] தொடுதல் என்ற ஒரு புலன் மட்டுமே இருப்பதாகக் கருதப்படுவதால் அது முதல் வரிசை உணர்திறன் கொண்ட பொருளாகக் கருதப்படுகிறது.<ref>{{citation |editor-last=Doniger |editor-first=Wendy |editor-link=Wendy Doniger |title=Purana Perennis: Reciprocity and Transformation in Hindu and Jaina Texts |url=https://books.google.com/books?id=-kZFzHCuiFAC |year=1993 |publisher=[[State University of New York Press]] |isbn=0-7914-1381-0 }}</ref> சமண மதத்திலும் இந்து மதத்திலும், உணர்திறனானது [[அகிம்சை]] என்ற கோட்பாடோடு தொடர்புடையதாகும்.
 
பௌத்தத்தில் உணர்திறன் என்பது புலன்களைக் கொண்ட நிலை. பௌத்த தத்துவத்தைப் பொருத்தவரை ஆறு புலன்கள் உள்ளன என்று கருதப்படுகிறது. இதில் ஆறாவது புலன் என்பது மனதின் அகநிலை அனுபவம் ஆகும். உணர்திறன் என்பது ஸ்கந்தத்தின் எழுச்சிக்கு முந்தைய [[விழிப்புணர்வு]] நிலை. இதன் காரணமாகவே ஒவ்வொரு விலங்கும் உணர்திறனுள்ள உயிரினமாகத் தகுதி பெறுகிறது. பௌத்த தத்துவத்தின் படி வெறும் விழிப்புணர்வு மட்டுமே கொண்டு உணர்திறன் கொண்ட உயிரினமாக இருப்பது சாத்தியமே. [[ஜென்]] மற்றும் [[திபெத்திய பௌத்தம்|திபெத்திய புத்த மதத்தை]] உள்ளடக்கிய [[மஹாயான பௌத்தம்|மஹாயான பௌத்தத்தில்]] உணர்திறன் என்ற கருத்து பிறரது [[மோட்சம்|மோட்சத்தில்]] அக்கறை கொண்ட ஞானியான [[போதிசத்துவர்|போதிசத்துவருடன்]] தொடர்புடையது. ஒரு போதிசத்துவரின் முதல் சபதம் "உணர்திறன் உள்ள உயிர்கள் எண்ணற்றவைகள்; அவைகளை மோட்சமடையச் செய்ய நான் சபதம் மேற்கொள்கிறேன்" என்பதாம்.
 
== விலங்குரிமையும் உணர்திறனும் ==
[[File:Octopus shell.jpg|thumb|ஆக்டோபஸ் எனப்படும் [[பேய்க்கணவாய்]] ஒன்று தன் பாதுகாப்புக்காக கிளிஞ்சல்களைத் திரட்டிக்கொண்டு பயணிக்கும் காட்சி. 600 மில்லியன் ஆண்டுகளாக மனிதர்களோடு தொடர்பின்றி பரிணமித்த பின்னரும், பேய்க்கணவாய்கள் உணர்திறனை வெளிப்படுத்த வல்லவை.<ref>{{Cite web |last=Henriques |first=Martha |date=25 July 2022 |title=The mysterious inner life of the octopus |url=https://www.bbc.com/future/article/20220720-do-octopuses-feel-pain |access-date=2024-06-29 |website=BBC |language=en-GB}}</ref><ref>{{Cite journal |last1=Birch |first1=Jonathan |author-link=Jonathan Birch (philosopher) |last2=Burn |first2=Charlotte |last3=Schnell |first3=Alexandra |last4=Browning |first4=Heather |last5=Crump |first5=Andrew |date=November 2021 |title=Review of the Evidence of Sentience in Cephalopod Molluscs and Decapod Crustaceans |url=https://www.lse.ac.uk/News/News-Assets/PDFs/2021/Sentience-in-Cephalopod-Molluscs-and-Decapod-Crustaceans-Final-Report-November-2021.pdf |journal=The London School of Economics and Political Science}}</ref> [[தலைக்காலி]], [[பத்துக்காலிகள்]] உள்ளிட்ட இன்னபிற விலங்குகளோடு பேய்க்கணவாய்களின் உணர்திறன் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தால்]] 2023-ல் அங்கீகரிக்கப்பட்டது.<ref>{{Cite web |last=Ho Tran |first=Tony |date=2021-11-23 |title=United Kingdom Declares Octopuses, Squids Are Sentient Beings |url=https://futurism.com/the-byte/united-kingdom-octopus-sentient |access-date=2024-06-29 |website=Futurism}}</ref>]]
[[File:European honey bee extracts nectar.jpg|thumb|தேனீக்கள் நம்பிக்கையான மனநிலையைக் காட்டவல்லவை என்றும், விளையாட்டுத்தனமான நடத்தையில் ஈடுபடக்கூடியவை என்றும், மேலும் பயன் இருந்தாலேயன்றி மற்ற சமயங்களில் தேவையற்ற அச்சுறுத்தல்களையும் தீங்கு விளைவிக்கும் சூழல்களையும் தவிர்க்கக் கூடியவை என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.<ref name=":1">{{Cite web |last=Chittka |first=Lars |date=2023-07-01 |title=Do Insects Feel Joy and Pain? |url=https://www.scientificamerican.com/article/do-insects-feel-joy-and-pain/ |access-date=2024-06-08 |website=Scientific American |language=en}}</ref>]]
 
[[விலங்குரிமை]] இயக்கத்தில் உணர்திறன் ஒரு மையக் கருத்தாக இருந்து வருகிறது. இதனை [[ஜெரமி பெந்தாம்]]மின் ''ஆன் இன்ட்ரொடக்ஷன் டு தி பிரின்சிபல்ஸ் ஆஃப் மாரல்ஸ் அண்டு லெஜிஸ்லேஷன்'' என்ற படைப்பில் காணமுடியும்:
 
"https://tamilar.wiki/w/உணர்திறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது