ஏலகிரி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan No edit summary |
No edit summary |
||
வரிசை 38:
== சுற்றிப்பார்க்க ==
ஏலகிரி மலையின் மறுபுறத்தில் மலையின் கீழ்ப்பகுதில் சமவெளியிலிருந்து சற்று உயரத்தில் [[ஜலகம்பாறை அருவி|சலகம்பாறை அருவி]] உள்ளது. திருப்பத்துாரிலிருந்து பிச்சனூர் வழியே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏலகிரி மலையில் உருவாகும் அட்டாறு, சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவி சலகம்பாறை அருவி என்று அழைக்கப்படுகிறது. மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக ஆறு வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. ஏலகிரி மலையின் மேல்பகுதியில் உள்ள நிலாவூரில் இருந்து நேரடியாக 6 கி.மீ மலைத்தடம் வழயே கீழிறங்கினால் அருவியை அடையலாம் எனினும் இவ்வழி இப்போது மூடப்பட்டுள்ளது. சிவலிங்க வடிவத்தில் ஒரு முருகர் கோவில் அருவிக்கு அருகில் அமைந்துள்ளது.
பூங்கானூர் ஏரி கட்டப்பட்ட ஏரியாகும். 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ள இவ்வேரியின் தண்ணீர் கொள்ளளவு 4.88 மில்லியன் கன அடி ஆகும். ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைவழி அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய பூஞ்செடிகளும் விளையாட்டுக் கருவிகளும் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை ஆறுமணி வரை திறக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ரூ 5 நுழைவுக் கட்டணம் என்றும் பெரியவர்களுக்கு ரூ 15 நுழைவுக்கட்டணம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிட படகு சவாரிக்கு கட்டணமாக துடுப்பு படகிற்கு ரூ20, கால்மிதி படகிற்கு ரூ50 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* அரசு மூலிகைப்பண்ணை,பழப்பண்ணைக
| |||