சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>S. ArunachalamBot சி →பழங்குடித் தொடர்ச்சி: clean up, replaced: முக்கிய பங்கு → முக்கியப் பங்கு using AWB |
||
வரிசை 1:
{{சைவ சமயம்}}
'''சைவ சமயம்''', '''சிவநெறி''' (''Saivism'') என்றெல்லாம் அழைக்கப்படுவது, '''சிவம்''' என்ற சொல் பல நூற்றாண்டு திரிபு சொல்லாக மாறி ''சைவம்'' என்று மாறியதாகக் கூறப்படுகிறது. இச்சைவ நெறி [[பார்வதி|உமையோடு]] கூடிய [[சிவன்|சிவபெருமானை]] (அம்பாளுடன் கூடிய சுவாமியை) முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும்.<ref name="tamilvu.org">http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm</ref> சைவசமயத்தின் முதன்மையான குரு திரு நந்தி தேவர் ஆவார். இன்றைய [[இந்து சமயம்|இந்து மதத்தின்]]
== சைவ வரலாறு ==
* [[சிவபெருமான்]] அனைவருக்கும் உரிய இறைவனாகக் கருதப்படுகிறார். ஆயினும் உமாதேவியார் சிவனின் சக்தி ஆவார். அவர் இல்லாமல் சிவம் தனித்து இயங்காது என்பது சைவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. [[சிவபெருமான்|சிவபெருமானின்]]
* இந்தியாவின் ஆதி கிளைநெறிகளில் அமைந்து விளங்கும் சைவமும் வைணவமும் பின்நாட்களில் இந்து சமயத்தின் பெரும்பான்மையானோர் பின்பற்றும்
* இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று குறிப்பிடுகின்றது.<ref>{{cite book | title=Todd M. Johnson and Brian J. Grim. (2013) “The World’s Religions in Figures: An Introduction to International Religious Demography”, First Edition, John Wiley & Sons Ltd., pp. 1 – 27}}</ref>
* சைவ சமயத்தின் முழு முதற் கடவுளாகச் உமை(சக்தி)யோடு கூடிய சிவபெருமான் விளங்குகிறார்.
* [[கைலாயம்|திருக்கயிலையில்]] [[நந்தி தேவர்]] பணிவிடை செய்ய, [[பிள்ளையார்|விநாயகரும்]], [[முருகன்|முருகனும்]] அருகிருக்க [[பார்வதி]]
* இன்றைக்கும் [[தமிழ்நாடு]], [[இலங்கை]] ,[[கர்நாடகா]], [[மகாராட்டிரம்]], [[மத்தியப் பிரதேசம்]], [[உத்திரப் பிரதேசம்]], [[இமாசலப் பிரதேசம்]], [[அருணாசலப் பிரதேசம்]], [[காஷ்மீர்]], [[நேபாளம்
== சைவ முறை பெயர் ==
வரிசை 21:
[[File:Sivakempfort.jpg|thumb|சைவரின் முழுமுதல் இறைவன்]]
{{main|சைவ சமய வரலாறு}}
===பழங்குடித் தொடர்ச்சி===
[[இமய மலை]]ச் சாரலில் வாழ்ந்த மலைக்குடி வேடுவர்களின் நீத்தார் வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்திருக்கின்றது என்று நம்பப்படுகின்றது.<ref>{{cite book | title=Tiwari, S. K. (2002). Tribal roots of Hinduism. Sarup & Sons.}}</ref> '''சைவம் என்ற சொல்லின் சரியான தமிழ் வடிவம் சிவனியம் ஆகும்.''' இமயம் [[இமயமலை#நிலவியல்|காலத்தால் பிந்தியது]] என்பதால், தென்னகத்தே எழுந்த இன்னொரு மலைத்தெய்வ வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்து, மக்கள் குடிப்பெயர்ச்சியால் இமயம் வரை நகர்ந்திருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது.<ref>{{cite book | title=Sen, S. N. (1999). Ancient Indian history and civilization. New Age International.}}</ref> '''சிவனை உருவகிப்பதில் [[திருநீறு|சாம்பல் பூசுதல்]], புலித்தோலாடை தரித்தல், மானையும் மழுவையும் கையில் வைத்திருத்தல், பன்றிக்கொம்பு, எலும்புகளை அணிதல் போன்ற பழங்குடிகளின் கூறுகள்
===சிந்துவெளி நாகரிகச் சான்றுகள்===
[[File:Shiva Pashupati.jpg|thumb|சிந்துவெளியில் கிடைத்த "பசுபதி ஈசன்" முத்திரை]]
[[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 2500 முதல் 2000 வரை நிலவியதாகக் கருதப்படும்<ref name = flood>>{{cite book | title=Flood, Gavin (1996). An Introduction to Hinduism. Cambridge: Cambridge University Press. ப.20-28. {{ISBN|0-521-43878-0}}.}}</ref> சிந்துவெளி நாகரிகக் களவெளிகளில் கிடைத்த சில ஆதாரங்கள், அக்காலத்தே கூட, சிவ வழிபாடு நிலவியிருக்கக்கூடும் என்ற ஊகத்தை வலுப்படுத்துவனவாக இருக்கின்றன. [[மொகெஞ்சதாரோ]], [[ஹரப்பா]] பகுதிகளில் சிவலிங்கத்தை ஒத்த பல கற்கள் கிடைத்துள்ளன. இருகொம்புகளுடன் விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் மனித உருவ முத்திரை, ஈசனின் "பசுபதித்" தோற்றத்தைக் குறிக்கின்றது என்றும் அதுவே மிகப்பழைய முந்து-சிவன் சிற்பம் என்றும் சிந்துவெளி ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்திருந்தனர்.<ref>{{cite book | title=Michaels, Axel (2004). Hinduism: Past and Present. Princeton, New Jersey: Princeton University Press.ப.312 {{ISBN|0-691-08953-1}}.}}</ref> அதைக் கூர்ந்து ஆராய்ந்த பலர், அது சிவவடிவம் என உறுதியாகச் சொல்லமுடியாதென்றும், எனினும் அமர்ந்திருக்கும் நிலை, தெளிவற்றுத் தெரியும் மூன்று முகங்கள், பிறைநிலா எனக் கொள்ளக்கூடிய இரு கொம்புகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, இது சிவன் எனும் பெருந்தெய்வம் எழுவதற்கு முந்திய வடிவமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.<ref name = flood/>
===வேதக் காலச் சைவம்===
[[File:Mahakuta_Lakulisha.jpg|thumb|[[இலகுலீசர்]] - பாசுபதத்தைத் தோற்றுவித்தவர்]]
பொ.ஊ.மு. 1500-க்கும் 500-க்கும் இடைப்பட்ட வேதக்காலத்து நூல்களில் வருகின்ற [[உருத்திரன்]], [[இயமன்]] முதலான தெய்வங்களின் கலவையாகவே பின்னாளில் சிவன் எழுந்தான் என்பர். [[இருக்கு வேதம்|இருக்கு வேதத்தில்]], எவ்வித முகன்மையும் இல்லாமல், மிகச்சில பாடல்களிலேயே போற்றப்படும் உருத்திரன், [[யசுர் வேதம்|யசுர் வேதத்தின்]] திருவுருத்திரப் பகுதியில், இன்றைய சிவனாக வளர்ந்து நிற்பதைக் காணலாம். வேதங்களை அடுத்து உருவான [[உபநிடதங்கள்|உபநிடதங்களில்]] பல, சிவ வழிபாட்டைப் போற்றுவதிலிருந்து, வேதக்காலத்தின் பிற்பகுதியிலேயே சிவன் இன்றைய வழிபாட்டு முகாமையை அடைந்துவிட்டதை அறியமுடியும்.
===தென்னகச் சைவம்===
சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும் அவை கிறிஸ்துவுக்குப் பிந்தியவை என்பது பொதுவான கருத்தாகக் காணப்படுகின்றது. எனினும் தமிழக மற்றும் இலங்கையில் பொறிக்கப்பட்ட கிறிஸ்துவுக்கு முந்திய [[பிராமி]] ஆவணங்களிலும் நாணயங்களிலும் காணப்படும் "சிவ" என்ற பெயரும், நந்தி, திரிசூலம், பிறைநிலா முதலான சிவச்சின்னங்களும், தென்னகத்தில் பல்லாண்டுகளாகவே சைவம் நிலவிவந்ததற்குச் சான்று கூறும்.<ref>{{cite book | title=இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் | publisher=இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் | author=பத்மநாதன்.சி | year=2013 | pages=1 - 20}}</ref>
===சைவத்தின் எழுச்சி===
{{முதன்மை|ஆதிமார்க்கம்}}
தெளிவான அடையாளங்களுடன், சைவமானது முழுமையான ஒரு மதமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டது, பொ.ஊ.மு. 3 முதல் பொ.ஊ. 2-ம் நூற்றாண்டுகட்கு இடையில் என்று சொல்லப்படுகின்றது.<ref>{{cite book | title=Flood, Gavin (1996). An Introduction to Hinduism. Cambridge: Cambridge University Press. ப.204 - 205 {{ISBN|0-521-43878-0}}.}}</ref> பொ.ஊ.மு. 6–4-ம் நூற்றாண்டுகளுக்கு இடையே தொகுக்கப்பட்ட [[சுவேதாசுவதர உபநிடதம்|சுவேதாசுவதரமே]] மிகப்பழைமையான சைவ நூலாகக் கொள்ளப்ப்படுகின்றது.<ref>{{cite book | title=Chakravarti, Mahadev (1994), The Concept of Rudra-Śiva Through The Ages (Second Revised ed.), Delhi: Motilal Banarsidass, ப.9 {{ISBN|81-208-0053-2}}}}</ref> உலக இன்பங்களைத் துறந்து கடுநோன்புகள் புரிந்து [[தாந்திரீகம்|தாந்திரீக]] நெறியில் சிவனை வழிபடும் வழக்கம், கிறிஸ்து காலத்திலேயே தொடங்கிவிட்டது. இவர்கள் "[[பாசுபதம்|பாசுபதர்]]" என்று அறியப்பட்டனர். பாணினியின் [[அட்டாத்தியாயி|அஷ்டாத்யயி]] எனும் சங்கத இலக்கண நூலுக்கு [[பதஞ்சலி]] முனிவர் எழுதிய மாபாடிய உரையில் (பொ.ஊ.மு. 2-ம் நூற்றாண்டு), பாசுபதர் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகின்றது. பாசுபதரில் தலைசிறந்தவரான [[இலகுலீசர்]] இக்காலத்திலேயே (பொ.ஊ.மு. 2 முதல் பொ.ஊ. 2-ம் நூற்றாண்டு) தோன்றி, பாசுபத நெறியை வளப்படுத்தியதாகத் தெரிகின்றது.
வரிசை 41:
இலகுலீசருக்குப் பின் அவர் ஏற்படுத்திய புரட்சி, பாசுபதத்திலிருந்து, [[காளாமுகம்]], [[காபாலிகர்|காபாலிகம்]] எனும் இரு கிளைச்சைவங்களை அடுத்தடுத்து உருவாக்கியது. இவை மூன்றும் [[ஆதிமார்க்கம்]] என்றே அறியப்பட்டதுடன், துறவிகளுக்கு, குறிப்பாக [[அந்தணர்|அந்தணராகப்]] பிறந்து சைவத் துறவிகளாக மாறியோரால் மாத்திரமே கடைப்பிடிக்கப்பட்டது. வைணவம், புத்தம், சமணம் முதலான நெறிகளுடன் இவைகொண்ட உரையாடல்கள், சைவத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச்சென்றதுடன், பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்குப் பின் சைவம் மாபெரும் சமயமாக எழுச்சி பெறுவதற்கான உறுதியான கால்கோள்களாக விளங்கின.
===சைவத்தின் உன்னதக்காலம்===
பொ.ஊ. 600 முதல் 1200 வரையான காலம், சைவத்தின் பேரெழுச்சிக் காலமாக அறியப்படுகின்றது. ஆதிச் சமயத்துக்குப் பின் உருவான [[சைவ சித்தாந்தம்|சித்தாந்தமும்]], [[வாம சைவம்|வாமம்]], [[தட்சிண சைவம்|தட்சிணம்]] முதலான [[புறச்சித்தாந்த சைவம்|புறச்சித்தாந்த]] நெறிகளும் [[மந்திரமார்க்கம்]] எனும் பிரிவைச் சைவத்தில் தோற்றுவித்தன. இவை துறவிகளுக்கு மாத்திரமன்றி, இல்லறத்தாருக்கும் உலகியல் இன்பங்களுக்கும் உரிய முன்னுரிமை கொடுத்ததால், தீவிரமாக மக்கள் நடுவில் பரவலாயிற்று. சமணம், புத்தம் என்பவற்றுக்கு எதிராக, [[அப்பர்]], [[சம்பந்தர்]] முதலான [[நாயன்மார்]], பத்தி (பக்தி) இயக்கத்தை ஏற்படுத்தி, சமூக மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தனர். வடநாட்டில் இதே காலத்தில் உருவான [[புராணங்கள்]] மக்கள் நடுவில் சைவத்தை எடுத்துச்செல்லலாயின.
வரிசை 47:
இக்காலத்தில் சைவம், இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமன்றி, [[தென்கிழக்காசியா]] வரை கூட மிகச்சிறப்புடன் திகழ தொடங்கியது. [[பாதாமி]] [[சாளுக்கியர்|சாளுக்கிய மன்னன்]] விக்கிரமாதித்தன் (பொ.ஊ. 660), [[கீழைக் கங்கர்|கீழைக்கங்கன்]] தேவேந்திரவர்மன் (பொ.ஊ. 682/683), [[காஞ்சி]]யின் [[இரண்டாம் நரசிம்ம பல்லவன்]] (பொ.ஊ. 680–728) போன்றோர், சைவ மதத் தலைவர்களிடம் மகுடம் பெற்றே பட்டம்சூடிக்கொண்டதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. [[கம்போடியா]]வின் [[அங்கோர்]] வழிதோன்றலின் முதல் மன்னன் ஈசானவர்மனும் சைவத்துறவியிடமே அரச மணிமுடி பெற்றுக்கொண்டதும், சாவகத்து [[மயாபாகித்துப் பேரரசு]] மன்னன் விசயன், சைவ அரச மகுடம் பெற்று நாட்டை ஆண்டதும், தென்கிழக்காசிய வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite book | title=White, D. G. (2001). Tantra in practice (Vol. 8).p.133. Motilal Banarsidass Publ..}}</ref> இவ்வாறு, துறவிகளின் மதமாக இருந்த சைவம், அரச ஆதரவைப் பெற துவங்கியதுடன், அதற்கு முன் அரச ஆதரவைப் பெற்றிருந்த சமணம், பௌத்தம் என்பவற்றைத் தன் மெய்யியல் செழிப்பால் தோற்கடித்துத் தன்னை வலுப்படுத்திக்கொண்டது.
===பிற்காலம்===
[[காஷ்மீர்|காஷ்மீரில்]] பல்கிப்பெருகிய சைவநெறி, தொடர்ச்சியான முகலாயப் படையெடுப்பால் தென்னகம் நாடவேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே சைவம் செழித்திருந்த தென்னகம், சைவத்தை மேலும் வரவேற்றதுடன், காசுமீரில் தோன்றி வளர்ந்துகொண்டிருந்த சித்தாந்த மந்திரமார்க்கத்தை மேலும் வலுப்படுத்தி, [[இந்திய மெய்யியல்]] வரலாற்றிலேயே முதன்முறையாக, சமற்கிருதம் அல்லாத வேற்றுமொழியொன்றில் - தமிழில் - சைவ மெய்யியலொன்றைத் தோற்றுவித்து வரலாறு படைத்தது. அதேகாலத்தில் பிராமண எதிர்ப்புடன் கன்னடத் தேசத்தில் தோன்றிய [[வீர சைவம்]] சாதிமத வேறுபாடின்றி, அனைவரிடமும் சைவத்தைக் கொண்டு சேர்த்தது. இவ்வாறு, தமிழகம், காசுமீர், கன்னடம் ஆகிய மூன்று பகுதிகளும், சைவச் சமயத்தின் தவிர்க்கமுடியாத - இன்றியமையாத பாகங்களாக மாறிப்போயின.
| |||