நந்தி தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 42:
சிவன் கற்பித்த [[ஆகமம்|அகமிக்]] மற்றும் [[தாந்திரீகம்|தாந்த்ரீக]] ஞானத்தின் தெய்வீக அறிவை [[பார்வதி]] தெய்வத்திடமிருந்து நந்தி பெற்றார். நந்திநாத சம்பிரதாயத்தின் முன்னோடிகளாக அடையாளம் காணப்பட்ட தனது எட்டு சீடர்களுக்கு அந்த தெய்வீக அறிவை அவர் கற்பித்தார். அவர்கள் [[சனகாதி முனிவர்கள்|சனகா, சனாதன, சனந்தனா]], [[சனகாதி முனிவர்கள்|சனத்குமாரா]], [[திருமூலர்]], [[புலிக்கால் முனிவர்|வியாக்ரபாதா]], [[பதஞ்சலி]], மற்றும் சிவயோக முனி போன்றோர் ஆவார்கள். இந்த அறிவைப் பரப்புவதற்காக இந்த எட்டு சீடர்களும் நந்தி தேவரால், உலகின் எட்டு வெவ்வேறு திசைகளுக்கு அனுப்பப்பட்டனர்.<ref name="sivay">{{Cite book|author=Satguru Sivaya Subramuniyaswami|date=2003|title=Dancing with Siva: Hinduism's Contemporary Catechism|publisher=Himalayan Academy Publications|isbn=978-0-945497-89-9}}</ref>
பிரதோஷ கால நேரங்களில், சிவபெருமான், நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். எனவே நந்திக்கு விசேட [[பூசை]]களும் [[திருமுழுக்கு வழிபாடு]]கள் நடைபெறும்.
நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. [[சிவன்]] ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில், அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.
கயிலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக, [[விஷ்ணு]], கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று விஷ்ணு சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய விஷ்ணு திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.
| |||