பகலவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
No edit summary |
||
வரிசை 12:
==இலக்கியக் குறிப்புகள்==
பகலவர் இன மக்கள் குறித்து வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், மார்கண்டேய புராணம், மச்ச புராணம், வாமண புராணம் முதலியவைகளில் குறிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமேற்கு, மேற்கு [[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] [[கந்தகார்|காந்தாரரகள்]], [[காம்போஜர்கள்]], [[சீனர்|சீனர்கள்]], பரதவர்கள், பாஹ்லீகர்கள் போன்று பண்டைய அரச குலங்களில் ஒன்றாக பகவலர்கள் கருதப்பட்டனர். மர்கண்டேய புராணத்தின் 58-வது அத்தியாயத்தில் பகலவர்கள் வாழ்ந்த பகுதிகளாக [[சிந்து மாகாணம்|சிந்து]], [[சௌராட்டிர நாடு]], [[சௌவீரதேசம்]] குறிக்கப்பட்டுள்ளது.
வரிசை 19:
மச்ச புராணம் மற்றும் வாயு புராணத்தின் படி [[நடு ஆசியா]]வின் ''ஆமு தாரியா'' ஆறு பாயுமிடங்களில் பகலவரகள், [[சிதியர்கள்|சகர்கள்]] முதலிய இனக் குழுக்கள் வாழ்ந்ததாக கூறுகிறது.<ref>Vayu Purana I.58.78-83.</ref>
புராணங்களில் [[சத்திரியர்|சத்திரியர்களான]] பகலவர்களுடன் [[காம்போஜர்கள்]], [[சிதியர்கள்|சகர்கள்]], [[யவனர்]], பரதர்கள் எனும் ஐந்து இனக்குழுக்களைச் சேர்த்து ''பாஞ்ச கணங்கள்'' என்று குறிப்பிடுகிறது.
இந்த பாஞ்ச கண சத்திரியர்கள் [[யது குலம்|யது குல]] [[ஹேஹேய நாடு|ஹேஹேயர்களின்]] இராணுவக் கூட்டாளிகள் என்றும் குறிப்பிடுகிறது.
பாஞ்ச கண சத்திரியர்களின் உதவியுடன் [[ஹேஹேய நாடு|ஹேஹேயர்கள்]] [[கோசல நாடு|கோசல நாட்டின்]] மன்னர் பாகுவை வீழ்த்தியதாகவும், பின்னர் பாகுவின் மகன் ''சகரன்'' வலுப்பெற்று ஹேஹேயர்களையும், பாஞ்ச கண சத்திரியர்களையும் வென்று, பாஞ்ச கண சத்திரியர்களை சத்திரிய நிலையிலிருந்து [[மிலேச்சர்|மிலேச்ச]] நிலைக்கு சமூகத் தரம் தாழ்த்தினார் என புராணங்கள் கூறுகிறது.
பகலவர்கள், [[கிராதர்கள்]], [[மிலேச்சர்]], [[யவனர்]], [[காம்போஜர்கள்]] மற்றும் [[சிதியர்கள்|சகர்களை]], இராமாயணத்தின் பால காண்டத்தில், [[விஸ்வாமித்திரர்|விசுவாமித்திரருக்கு]] எதிரான போரில் ஈடுபட்ட [[வசிட்டர்|வசிஷ்டரின்]] படைக் குழுவினர் என கூறுகிறது.<ref>Ramayana, 55/2-3</ref>
[[பாண்டவர்]]களில் நான்காமவரான [[நகுலன்]] பரத கண்டத்தின் மேற்கில் படையெடுத்து சென்று பகலவர்களை வென்றதாகவும்; [[தருமன்|தருமர்]] செய்த இராஜசூய யாகத்தில் பகலவ மன்னர்கள் கலந்து கொண்டதாகவும் [[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] [[ஆதி பருவம்|ஆதி பருவத்தில்]] குறிப்புகள் உள்ளது.
வரிசை 35:
மேலும் பகலவர்களை [[சிதியர்கள்|சகர்கள்]], [[யவனர்|யவனர்கள்]], [[காம்போஜர்கள்]], [[கந்தகார்|காந்தாரர்கள்]], சபரர்கள், பார்பரர்கள் போன்று, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளின் பழங்குடி மக்கள் எனக் கூறுகிறது.
மகாபாரதத்தின் [[உத்யோக பருவம்|உத்யோக பருவத்தில்]] பகலவர்கள் மேற்கு இந்தியாவின் [[சௌராட்டிர நாடு|சௌராஷ்டிரா பகுதிகளில்]] வாழ்ந்தவர்கள் எனக் கூறுகிறது.
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] சகர்கள், [[கிராதர்கள்]], [[யவனர்]] முதலானர்களுடன் பகலவர்களும் [[கிருபர்|கிருபாச்சாரியருடன்]] இணைந்து போர்க்களத்தின் வடக்கில் [[பாண்டவர்]] படையணிகளுக்கு எதிராக போரிட்டனர். <ref>Mahabharata Bhishma Parva, Ch. 20.</ref><ref>Since the armies of the Sakas, Yavanas, Tukharas, Khasas, Daradas had fought under the supreme command of Sudakshin Kamboja (See ref: The Nations of India at the Battle Between the Pandavas and Kauravas, Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, 1908, pp 313, 331, Dr F. E. Pargiter, (Royal Asiatic Society of Great Britain and Ireland), it is highly likely that the Pahlavas too fought under Sudakshina Kamboj.</ref>
யவனர்கள், சகர்கள், காம்போஜர்கள் போன்று உயர்ந்த சத்திரிய நிலையிலிருந்த பகலவர்கள், பின்னர் சத்திரிய தருமத்திற்கு புறம்பாக செயல்பட்டதால், [[மிலேச்சர்|மிலேச்ச]] நிலைக்கு தள்ளப்பட்டனர் என [[மனுதரும சாத்திரம்]] குறிப்பிடுகிறது.<ref>Manu Samhita, X.43-44.</ref>
| |||