உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>S. ArunachalamBot |
'''புவியரசு''' (பி. 1930) ஒரு [[தமிழ்]]க் கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். [https://writterkasuve.blogspot.com/2020/07/2-88.html புகைப்படத்திற்கு நன்றி காசுவே] இவர் 2009ன் தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர். ▼
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = 1930
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}
▲'''புவியரசு''' (பி. 1930) ஒரு [[தமிழ்]]க் கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.[https://writterkasuve.blogspot.com/2020/07/2-88.html புகைப்படத்திற்கு நன்றி காசுவே] இவர் 2009ன் தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர்.
==வாழ்க்கைக் குறிப்பு==
புவியரசு [[உடுமலைப்பேட்டை]]க்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/literature/article24480476.ece | title=தஸ்தயேவ்ஸ்கி கொடுத்த ஞானம்!- கவிஞர் புவியரசு பேட்டி | publisher=இந்து தமிழ் | work=செவ்வி | date=21 சூலை 2018 | accessdate=27 சூலை 2018 | author=ஷங்கர்ராமசுப்ரமணியன்}}</ref> இவரது இயற்பெயர் சு. ஜெகநாதன். ஜெகநாதன் என்ற சமஸ்கிருத வார்த்தையின் தமிழாக்கம் தான் புவியரசாகும். இவரதுஇவரின் பெற்றோர் கிராமத்திலிருந்து குடிபெயர்ந்து கோயம்புத்தூரில் வசித்தனர். இவர் இடைநிலை பட்டத்தைக் [[கோயம்புத்தூர்]] அரசு கலைக் கல்லூரியிலும் தமிழ் வித்வான் பட்டத்தைப் [[பேரூர்]] தமிழ்க் கல்லூரியிலும் பெற்றார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரது படைப்புகள் 1952லிருந்து வெளிவர ஆரம்பித்தன. இவர் அரசியல்ரீதியாக ஒரு மார்க்சிசவாதி. திராவிடக் கட்சிகளுக்கு எதிரானவர். இவர் தமிழ்மொழியைத் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக்குவதற்கு நடந்த போராட்டங்களிலும் எல்லைப் போராட்டங்களிலும் ஈடுபட்டு சிறை சென்றவர். சிறிதுகாலம் மட்டும் இயங்கிய ''[[வானம்பாடி (இதழ்)|வானம்பாடி இலக்கிய இயக்கத்தைத்]]'' தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். தனது இலக்கியப் பயணத்தில் 80க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார். [[ஷேக்ஸ்பியர்]], [[கலில் கிப்ரான்]], [[உமர் கய்யாம்]], [[ஓஷோ]], [[ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி]] மற்றும் [[ரவீந்திரநாத் தாகூர்]] ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது சில [[கவிதை]]கள் [[ஆங்கிலம்]], [[ரஷ்ய மொழி|உருசிய]], [[ஹங்கேரி|அங்கேரி]] மற்றும் [[சிங்களம்|சிங்கள]] மொழிகளிலும் இந்திய மொழிகளான [[மலையாளம்]], [[கன்னடம்]] மற்றும் [[இந்தி]]யிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கவிதை ''புரட்சிக்காரன்'' 2007ல் [[மொழிபெயர்ப்பு]]க்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இக்கவிதை [[காஜி நஸ்ருல் இஸ்லாம்]] எழுதிய ''தி ரெவலூஷனரி'' என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இவரது கவிதைத் தொகுப்பான ''கையொப்பம்'' 2009ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. தமிழ் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளையானது, புவியரசு வளர்ச்சி மையம் என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. தற்சமயம் இவர் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.<ref name=sahitya>[http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil Tamil Sahitya Akademi Awards 1955-2007] {{Webarchive|url=https://web.archive.org/web/20100124032426/http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil |date=2010-01-24 }} [[சாகித்திய அகாதமி]] Official website.</ref><ref>{{cite news|title=Sahitya Akademi award for Puviarasu|url=http://www.hindu.com/2009/12/24/stories/2009122460580700.htm|accessdate=13 June 2010|newspaper=[[தி இந்து]]|date=24 December 2009|archivedate=27 டிசம்பர் 2009|archiveurl=https://web.archive.org/web/20091227234146/http://www.hindu.com/2009/12/24/stories/2009122460580700.htm|deadurl=dead}}</ref><ref>{{cite news|title=‘Younger generation has social consciousness but no pace’|url=http://www.hindu.com/2010/01/11/stories/2010011154380500.htm|accessdate=13 June 2010|newspaper=The Hindu|date=11 January 2010|archivedate=15 ஜனவரி 2010|archiveurl=https://web.archive.org/web/20100115164853/http://www.hindu.com/2010/01/11/stories/2010011154380500.htm|deadurl=dead}}</ref>
<h1>==எழுதிய நூல்கள்</h1>==
(முழுமையானதல்ல)
===மொழிபெயர்ப்புகள்===
*[[தி புக் ஆஃப் மிர்டாட்]] - மிகய்ல் நய்மா (ஓஷோவினால் பாராட்டப்பட்ட இப்புத்தகத்தை 'மிர்தாதின் புத்தகம்' என தமிழில் மொழி பெயர்த்தார்.) !<ref>மிர்தாதின் புத்தகம்- தமிழில் புவியரசு- கண்ணதாசன் பதிப்பகம்</ref>
*தி பிரதர்ஸ் கரமஸவ் (கரமசௌ சகோதரர்கள்) - ஃபியோடார் டாஸ்டோவ்ஸ்கி
*உமர் கய்யாமின் ருபாயத்
===நாடகங்கள்===
*மனிதன்
*மூன்றாம் பிறை
*சாகித்திய புரஸ்கார் விருது - கேரள பண்பாட்டு மையம்
===தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு===
இவர் எழுதிய ''"முக்கூடல்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2004|2004 ஆம் ஆண்டுக்கானஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:திருப்பூர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
|