யானை ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
 
No edit summary
 
வரிசை 4:
தெற்கு அராபியாவில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற ஆய்வுகளின்படி, யானை ஆண்டு கிபி 569 அல்லது 568 ஆக இருக்கலாம் எனப்படுகிறது. சசானியப் பேரரசு யெமனின் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] அரசை கிபி 570 இல் கைப்பற்றியது.<ref name="Watt">William Montgomery Watt (1974), p.7</ref> ஆனாலும், முகம்மது நபியின் பிறப்பிற்கு குறைந்தது 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நிகழ்வு இடம்பெற்றிருக்கலாம் என இன்றைய வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.<ref name="The Oxford Dictionary of Islam">Esposito (2003). ''The Oxford Dictionary of Islam'', {{ISBN|0-19-512558-4}}, Oxford University Press</ref>
 
===வரலாறு===
அன்றைய காலகட்டத்தில் [[ஏமன்]] பிரதேசம் [[அபிசீனியா]]வின் (எதியோப்பியா) ஆட்சியின் கீழ் இருந்தது. இப்பிரதேசத்தின் அதிகாரியாக இருந்தவர் அப்ரகா என்ற அபிசீனியராகும். முழு அரேபியாவினதும் யாத்திரைத் தலங்களில் உயரிடம் பெற்றிருந்த [[மெக்கா]]வின் மகோன்னத நிலையைத் தகர்க்கும் எண்ணத்துடன் அப்ரஹா, ஏமன் பிரதேசத்திலுள்ள சன்ஆ என்ற இடத்தில் மாபெரும் ஆலயமொன்றை நிறுவினார். அதில் ஷீபா அரசியின் கைவிடப்பட்டிருந்த மாளிகைகளிலிருந்து தங்கம், வெள்ளி போன்றவற்றாலான சிலுவைகள் மற்றும் அலங்காரப் பொருள்கள் ஆகியற்றைக் கொண்டுவந்து நிறுவி, அந்த ஆலயத்தை மிகவும் அழகானதாக நிர்மாணித்தார். பின்னர் தனது அரசனான 'நஜ்ஜாசி' க்கு ''"மன்னவனே! உலகத்திலேயே எங்குமில்லாதவாறான மிக அழகானதோர் ஆலயத்தை நான் உனக்காக இங்கு உருவாக்கியுள்ளேன். அரபிகளின் புனித யாத்திரிகர்களை இந்த ஆலயத்தை நோக்கித் திருப்பும் வரை நான் ஓயமாட்டேன்,'''' என்றொரு கடிதத்தை அனுப்பினார். இதைத் தெரிந்துகொண்ட அரேபியர்கள், அப்ரஹாவின் மீது பெரும் கோபம் கொண்டார்கள். முடிவில் அரேபியரில் ஒருவன் அப்ரஹா நிர்மாணித்த ஆலயத்தின் தூய்மையைக் கெடுக்கும் நோக்கத்தோடு அங்கு சென்று, இரவோடிரவாகத் தன்நோக்கத்தை நிறைவேற்றி பாதுகாப்பாகத் திரும்பிவிட்டான்.
 
"https://tamilar.wiki/w/யானை_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது