இலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''இலக்கணம்''' என்பது மொழியின் அமைப்பையும், பயன்படுத்தும் விதத்தையும் வரையறை செய்யும் விதிகளைச் சுட்டுகிறது. == சொற்பிறப்பியல் == {{முதன்மை|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 15:
#அணி இலக்கணம்
எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று இலக்கணத்திற்கும் உரிய இலக்கணங்களை தொல்காப்பியம்
வரிசை 21:
எழுத்துக்களின் எண், பெயர், பிறப்பு முதலிய தன்மைகளைக் கூறுவன எழுத்து இலக்கணம் ஆகும். மொழிக்கு முதற்காரணமாய் காதாற் கேட்கப்படும் ஒலி அணுத்திரனில் காரியமாய் இருப்பது எழுத்தாகும். இவ் எழுத்துக்கள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவின் எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே வரிவடிவம் அமைகின்றது.
எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை,
வரிசை 29:
#சார்பு எழுத்து
முதல் எழுத்து என்பன உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் ஆகும். உயிர் எழுத்துக்கள் 12, மற்றும் மெய் எழுத்தக்கள் 18 ம் சேர்ந்து 30 எழுத்துக்கள் தமிழில் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன. மொழிக்கும், பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இவை ஆதாரமாக அமைவதனால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.
வரிசை 40:
மெய் எழுத்துக்கள் அவை ஒலிக்கும் முறையினைக் கொண்டு வல்லினம் (க், ச், ட், த், ப், ற்), மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்), இடையினம் ( ய், ர், ல், வ், ழ், ள்) என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது வலிய ஓசை, மென்மையான ஓசை, இடைப்பட்ட ஓசை கொண்டவை என்பது அதன் பொருளாகும்.
தமிழ் எழுத்துக்களில் சில தாமே இயங்கும் இயல்பு அற்றவை; அவை முதல் எழுத்தக்களின் துணை கொண்டே இயங்குகின்றன. அவற்றைச் சார்பு எழுத்துக்கள் என்று கூறுவர். இவ் எழுத்துக்களை 1) உயிர்மெய் 2) ஆய்தம் 3) உயிரளபெடை 4) ஒற்றளபெடை 5) குற்றியலுகரம் 6) குற்றியலிகரம் 7) ஐகாரக்குறுக்கம் 8) ஔகாரக்குறுக்கம் 9) மகரக்குறுக்கம் 10) ஆய்தக்குறுக்கம் என 10 வகையாகப் பிரித்து கூறுவர்.
வரிசை 117:
கல் + தீது = கஃறீது
பொருள் தரக்கூடிய சொற்கள் தான் சொல் எனக் குறிப்பிடப்படுகின்றன. பொருள் தராத சொற்களை சொல் என்று அழைக்கமுடியாது.
வரிசை 146:
உணர்த்தும் பெயர் ஆகும். ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம்; ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம். உரிச்சொல், பெயர்ச்சொற்களோடும் வினைச் சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும். உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும். உரிச்சொல் இரண்டு பண்புகளை உணர்த்தும்: 1. குணப் பண்பு, 2. தொழிற் பண்பு.<ref>6. நன்னூல் நூற்பா எண் . 442</ref>
இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் பொருள் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது. தொல்காப்பியத்தில் உள்ள பொருள் அதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில், ஐந்து இயல்கள் பொருள் இலக்கணத்தைக் கூறுகின்றன. தொல்காப்பியத்தைத் தொடர்ந்து, இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை, களவியல் காரிகை, நம்பி அகப்பொருள் விளக்கம், மாறன் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்கள் பொருள் இலக்கணம் கூறும் நூல்கள் ஆகும். மேலும் ஐந்திலக்கணத்தையும் தெரிவிக்கும் நூல்களிலும் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது. பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்று எடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்புகாகக் கருதப்படுகிறது. பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக் கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம், போர், வெற்றி, கொடை, நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.
மரபு முறையில் செய்யுள் இயற்றுவதற்குரிய விதிகளையும், விதிவிலக்குகளையும் கூறுவது 'யாப்பிலக்கணம்' ஆகும். 'யாத்தல்' என்றால் 'கட்டுதல்' எனப் பொருள்படும். யாப்பு இலக்கணம் ஆறு வகைப்படும் . 1. எழுத்து, 2.அசை, 3. சீர், 4. தளை, 5. அடி, 6. தொடை இவை எல்லாமே அவைகளின் பண்பால், வினையால் அமைந்த காரணப் பெயர்கள். எழுதப் படுவதால் 'எழுத்து' என்ற பெயர் அமைந்தது. அது போன்றே மற்றவைகளும். எழுத்தினால் ஆனது அசை; அசைகளினால் ஆனது சீர்; சீர்களால் ஆனது அடி; அடிகளினால் ஆனது பா; சீரும், சீரும் சேரும் இணைப்பு தளை; எதுகை, மோனை போன்ற அழகியல் அமைப்புகள் தொடை ஆகும்.
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றன . அணிகளில் முக்கியமானது உவமை அணி ஆகும். மற்ற அணிகள் உவமையில் இருந்து கிளைத்தவையாகவே உள்ளன.
| |||