சங்க காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox archaeological culture |name = சங்க காலம் |map = South India in Sangam Period.jpg |mapcaption = தென்னிந்தியாவின் முனையில் அமைந்திருந்த தமிழகம் சங்க காலத்தில், சேரர், சோழர், ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi |
||
வரிசை 43:
மேலதிக தகவல்கள்: [[பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை]], [[பண்டைத் தமிழகத்தின் விவசாயம்]], [[பண்டைத் தமிழகத்தின் தொழிற்சாலைகள்]]
பெரும் இலக்கண நூலான [[தொல்காப்பியம்]], பத்து நூல்களின் திரட்டான [[பத்துப்பாட்டு]], எட்டு நூல்களை உள்ளடக்கிய [[எட்டுத்தொகை]] , [[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]] மற்றும் [[சீவக சிந்தாமணி]] போன்ற பதினெட்டு சிறு படைப்புகளையும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் உள்ளடக்கியுள்ளது. பண்டைய தமிழர்கள் நெருக்கமாக இயற்கை வழிபாட்டின் வேர்களை பின்பற்றிய செயல் [[வட இந்தியா]]வில் பின்பற்றப்பட்ட அதன் சமகால வேத இந்து மதத்திற்கு எதிரான புறமதத்தினன் போல இருந்தது. பண்டைய சங்க இலக்கியங்களில் [[சிவன்]] முழுமுதற் கடவுளாக கருதப்பட்டான். அதேவேளையில் [[முருகன்]] வழிபாடும் மக்களால் கொண்டாடப்பட்டது. தமிழ்ப்புலவர்கள் இரு கடவுளரையும் சங்கம் ஏறி பாடி முழங்கியுள்ளனர். தமிழ்கூறு நல்லுலகம் தங்கள் வாழ்வியலை அகவாழ்வு, புறவாழ்வு என்றும் வகை படுத்தி இருந்தனர். அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை இயற்கை அமைப்பிற்கு ஏற்றவாறு [[குறிஞ்சி]], [[முல்லை]], [[மருதம்]], [[நெய்தல்]], [[பாலை]] என ஐவகையாகப் பிரித்து அப்பகுதிகளின் சூழலை ஒட்டிய கடவுள்களையும் வழிபட்டனர். மலை சார்ந்த குறிஞ்சி நில மக்கள் செவ்வேள் எனப்படும் முருகனையும், காடு சார்ந்த முல்லைநில மக்கள் மாயோனையும், வயல் சார்ந்த மருதநில மக்கள் வேந்தனையும், கடல் சார்ந்த நெய்தல்நில மக்கள் கடலோன் என்ற தெய்வத்தையும் வழிபட்டனர். பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் கொற்றவை என்ற தாய் கடவுளைக் குறிப்பிட்டுள்ளது. இடைக்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் இந்துமதத்தின் ஆதிக்கம் தலைதூக்கியது. இதனால் சிவனை பின்பற்றுவோர் சைவர்கள் என்றும் விஷ்ணுவைப் பின்பற்றுவோர் வைனவர்கள் என்றும் இரு பிரிவுகள் தோன்றின.
| |||