சீர்காழி

imported>விஜயஷண்முகம் பயனரால் செய்யப்பட்ட 05:01, 6 அக்டோபர் 2006 அன்றிருந்தவாரான திருத்தம்

சீர்காழி (Sirkazhi), தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் நதியும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள. அவற்றில் சில, புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீசுவரன்கோவில், திருக்கோலக்கா, திருவெண்காடு மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள். பல தலைமுறைகளாய் இங்கு கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=சீர்காழி&oldid=191515" இலிருந்து மீள்விக்கப்பட்டது