கீழக்கரை
கீழக்கரை தென்தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கடற்கரை பட்டினமாகும் இது மன்னார் வளைகுடாவில் அமைந்து உள்ளது . இக்கடற்கரை பட்டினதிற்கு நேர் எதிராக அப்பா தீவும் , தென் மேற்கே பாலைய முனை தீவும் ,ஆணை தீவும் , நல்லதண்ணீர் தீவு, சுள்ளி தீவு ,உப்பு தண்ணீர் தீவுகளும் , தென் கிழக்கே,தளரி தீவும் , முல்லை தீவும் அமைந்துள்ளது .
கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரை உள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது .இப்பகுதியில் பார் களுக்குள்ளே ஒரு இடத்தில் மட்டும் சுமார் 150 பாகம்(fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிஃப் பாதை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும் .
அந்த இடை வெளிப் பாதையை காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள்(Beacons) அமைக்கபட்டு உள்ளன . கீழக்கரை துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவு வாயிலாக அமைந்து உள்ளது . கீழக்கரை துறைமுகதின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால். இங்கு வந்து நங்குர மீடும் கப்பல் கள் எல்லாம் பெருங்காற்றிற்கும் , பேரலை களுக்கும் இடையில் சிக்கி கொள்ளாமல் இருக்க இங்கு அமைத்து உள்ள தீவு களும் கடல் ஓரத்தில் அமைந்து உள்ள பார் களுமே இயற்கை அரணாக அமைந்து உள்ளன . என்பது குறிப்பிடதக்க விஷயம் ஆகும் .
இங்கு உள்ள பார்களில் சங்கு ,முத்துச்சிப்பி,வண்ணமீன்கள், போன்ற கடல் வாழ் ஜீவன்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற இயற்கை சூழல் அமைந்து உள்ளது து உள்ளது .
உப்பு தன்நீர் தித் தீவுக்கு அருகாமையிலும், நல்ல தன்நீர் தித் தீவுகவுக்கும் , ஆணை பார் தீவுக்கும் இடையிலே யும் முத்துச் சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்து உள்ளன
இத்தகய இயற்கை அமைப்பை யும் , கள் செல்வங்களையும் தன்னகத்தே கொண்டு உள்ளது .. .