ஆள்கூறுகள்: 11°05′N 77°53′E / 11.08°N 77.88°E / 11.08; 77.88

கொடுமுடி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Siddaarth.s பயனரால் செய்யப்பட்ட 10:33, 10 சூலை 2009 அன்றிருந்தவாரான திருத்தம் (Translated from http://en.wikipedia.org/wiki/Kodumudi (revision: 284766777) using http://translate.google.com/toolkit.)
Jump to navigation Jump to search

இக்கட்டுரை, Kodumudi எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பதிப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.


Kodumudi
—  small city  —
Kodumudi
இருப்பிடம்: Kodumudi

, Tamil Nadu

அமைவிடம் 11°05′N 77°53′E / 11.08°N 77.88°E / 11.08; 77.88
நாடு  இந்தியா
மாநிலம் Tamil Nadu
மாவட்டம் Erode
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி Kodumudi
மக்கள் தொகை 12,669 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


144 மீட்டர்கள் (472 அடி)

குறியீடுகள்

கொடுமுடி , இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ளதொரு பேரூராட்சி ஆகும்.


புவியியல்

கொடுமுடி 11°05′N 77°53′E / 11.08°N 77.88°E / 11.08; 77.88[1]-இல் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து 144 மீட்டர் (472 அடி) ஆகும்.


கொடுமுடி கொங்கு நாட்டின் சிவத்தலங்களில் ஒன்றாகும். மேலும், இது கயிலாயத்தின் சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுந்தரர் இங்கு நமச்சிவாயப்பதிகத்தை இயற்றினார். பல இலக்கியங்கள் இக்கோயிலின் புகழைப் பாடுகின்றன. இக்கோவில் தமிழகத்தின் கொங்குநாட்டின் ஏழு தேவாரத் தலங்களில் ஆறாவதாகக் கருதப்படுகிறது.


புராணம்: இங்கு கோவில் கொண்டுள்ள பிரம்மனும், திருமாலும் ஈசனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இது திரிமுர்த்தி கோவில் எனப்படுகிறது. அகத்தியர் இங்கு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் இடையில் நடந்த சண்டையில், ஆதிசேடனின் தலையில் இருந்து ஐந்து ரத்தினங்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றில் சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும், மரகதம் ஈங்கோய்மலையிலும், நீலக்கல் பொதிகையிலும், மாணிக்கம் வாட்போக்கியிலும், வைரம் இங்கும் விழுந்தனவாம்.


அகத்தியர் புவியின் நிலை காக்கத் தென்னகம் வந்த புராணம் பாண்டிக்கொடுமுடியுடன் தொடர்புடையதாகும்; அவரது கமண்டல நீர், கீழ்த்திசை உழவோர் நலன்காக்க, இங்கிருந்து காவிரியாக ஓடியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள விநாயகர், காவிரி கண்ட விநாயகர் எனப்படுகிறார்.


கோவில்: இது கொடுமுடி நாதர், வடிவுடையம்மை, பெருமாள் மற்றும் தாயார் சந்நிதிகள் கொண்ட பரந்த கோவிலாகும்.இங்கு கொடுமுடி நாதர், அம்பாள் மற்றும் வீரநாராயணப்பெருமாள் சந்நிதிகளுக்குச் செல்ல மூன்று வாயில்கள் உள்ளன.இங்குள்ள குஞ்சிதபாத நடராஜர், தன் வலது காலைத் தூக்கி இருப்பதற்கு மாறாக, இரு கால்களையும் தரையில் வைத்துள்ளார். கதிரவனின் கிரணங்கள் (ஒளி) பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் நான்கு நாட்களுக்கு, சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளை ஒளிறச்செகிறது.


பாண்டிய மன்னர்களின் கொடையினால், இத்தலம் பாண்டிக்கொடுமுடி எனப்படுகிறது.இங்கு பல்வேறு மன்னர்களின் கொடைகள் பற்றிய பல கல்வெட்டுகள் உள்ளன.சிங்க முகத் தூண்கள் பல்லர்வர்களின் கொடைகளைப் பறைசாற்றுகின்றன.


விழாக்கள்: சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடைபெறுகின்றது. இது போக, ஆடிப்பெருக்கன்று ஏற்றிய விளக்குகளை ஆற்றில் விடல், ஐப்பசி பௌர்ணமி, தைப்பூசம், ஆருத்திரா தரிசனம் ஆகியவையும் நடைபெறுகின்றன.


கோவில் கதைகள்

தல புராணம் (செவிவழிக்கதை)


ஆதிசெடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போருடன் ஒரு கதை தொடங்குகிறது. இப்போரில் மேரு மலையின் உச்சி, ஐந்து துண்டுகளாக உடைந்து, அவை ஐந்து சுயம்புலிங்க சிவத்தலங்களாக மாறுகின்றன. இவ்வைந்து தலங்களும் ஐந்து ரத்தினங்களாகக் கருதப்படுகின்றன.


  • மரகதம் - திருவீங்கோய்மலை
  • சிவப்புக்கல் - திருவண்ணாமலை
  • நீலக்கல் - குற்றாலம்
  • மாணிக்கம் - சிவாயமலை
  • வைரம் - கொடுமுடி


இதனால் பக்தர்கள், இத்தலம் தங்களுக்கு ஒளி மிக்க எதிர்காலத்தை நல்குவதாகக் கொள்கின்றனர்.


கட்டிடக்கலை

கொடுமுடி காவிரியாற்றுடன் உள்ள ஒரு புனிதத் தலமாகும். எனவே இங்கு காவடி தீர்த்தம் எடுக்கப்படுகிறது. காவிரி நீருடன் வன்னி இலைகள் கொண்ட காவடியுடன் பழனிமலை செல்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். இப்பயணத்தில் உடுக்கை, தாரை, தப்பட்டை, பம்பை, நாதசுவரம், திருச்சின்னம், துத்தரி போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆட்டங்களும் ஆடப்படுகின்றன.


திருஞானசம்பந்தர் மகுடேசுவரர் மேல் பதினோரு பதிகங்கள் பாடியுள்ளார். அப்பர் ஐந்து பாடல்களையும், சுந்தரர் பத்துப் பாடல்களையும் (நமச்சிவாயப் பதிகம்) பாடியுள்ளனர்.மேலும், அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமான் மேல் திருப்புகழ் பாடியுள்ளார்.



தனிச் சிறப்பு

  • இங்குள்ள வன்னி மரம் பூக்காமலும், காய்க்காமலும் இருப்பது ஓர் அற்புதமாகும்.


  • ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதத்தின் கடைசி வாரமும், பங்குனி மாதத்தின் முதல் வாரமும், சிறப்பு தரிசன நாட்களாகும். இந்நாட்களில் ராஜகோபுரத்தின் துவாரத்தின் வாயிலாக நுழையும் சூரிய ஒளி, சுயம்புலிங்கத்தின் மேல் விழுகிறது. இது இருமுறை நடக்கிறது. அப்போது மகுடேசுவரர், சூரியனுக்கு ஆசி வழங்குகிறார்.


  • கொடுமுடி காவிரியாற்றங்கரையிளுள்ளதோர் நகரமாகும்.இங்கு காவிரித்தாய் தெற்கிலிருந்து, கிழக்கு நோக்கித் திரும்புகிறாள். காவிரித்தாய் இந்த தெய்வீகத் தன்மையுடன், பக்தியில் முழுமையும், வாழ்வில் நிறைவையும் அடைகிறாள். எனவே பக்தர்கள், இத்தலம் வந்து திரிமூர்த்திகளின் ஆசிகளும் ஆனந்தமும் பெறலாம்.


நம்பிக்கைகளும் உண்மைகளும்

இங்கு பிரார்த்தனை செய்ய வருவோரில், பெரும்பான்மையோர் திருமணம் வேண்டியும், குழந்தை பிறக்க வேண்டியும் வருகின்றனர். மேலும், உடல் மற்றும் மன நோய்கள் தீர இங்கு வருவோரும் உண்டு. பக்தர்களின் நலனுக்காகத் திருக்கோவில், பல்வேறு பூஜைகளை நடத்துகிறது. பக்தர்கள் பலர் மகுடேசுவரர் மேல் கொண்ட நம்பிக்கையாலும், பிரார்த்தனைகளாலும், தத்தம் வாழ்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இத்தலம் நவக்கிரக சாந்தி ஓமங்களுக்கும் பூஜைகளுக்கும் பிரசித்தி பெற்றதாகும். பக்தர்கள், திருக்கோவிலுக்குக் காணிக்கைகளைச் செலுத்தித் தங்கள் நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.


தீர்த்தங்கள்

தீர்த்தம் - இது காவிரியையும், பாரத்வாஜ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், தேவ தீர்த்தம் ஆகிய கோவிலினுள் உள்ள மற்ற தீர்த்தங்களையும் குறிக்கும்.


தல விருட்சம்

வன்னி மரம் (3000 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வாழ்ந்து வரும் மரம்)


விழாக்கள்

சித்திரை


சித்திரைத் திருவிழா, அஸ்த நட்சத்திரத்தன்று கொடியேற்றம் மற்றும் தேரோட்டத்துடன் தொடங்கிச் சித்திரை நட்சத்திரத்தன்று ஆற்றில் நீராடல் மற்றும் கொடி இறக்கத்துடன் முடிவடைகிறது. இப்பத்து நாள் விழாவின்போது, உற்சவ மூர்த்திகளான சிவனும் திருமாலும், பல்வேறு வாகனங்களில் காட்சியருளுகின்றனர்.


ஆடி


தமிழ் மாதமான ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள், காவிரியில் புனித நீராடச் சிறந்த நாளாகும். அன்று, உற்சவமூர்த்தியை ஆற்றங்கரைக்கு எடுத்துச் செல்கின்றனர். அங்கு ஆறு மணியளவில் "தீபம்" என்ற நிகழ்ச்சி திருக்கோவில் நிர்வாகத்தினால் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையில், எல்லாக் கடவுள்களுக்கும், சந்தனத்தால் அலங்காரம் செய்யப்படுகிறது.


ஆவணி


தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் மூல நட்சத்திரத்தன்று, சிவ பெருமான் உயிர்களுக்கெல்லாம் ஆசி தரும் நிகழ்வு ஆற்றங்கரையில், பிட்டுத் திருவிழா எனக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் ரோகினி நட்சத்திரத்தன்று கண்ணபிரானின் பிறந்த நாள் "கிருஷ்ணா ஜெயந்தி" எனக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா கண்ணபிரானின் ஊர்வலத்துடன் இரண்டு நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.


ஐப்பசி


தமிழ் மாதமான ஐப்பசி மாதத்தின் அஸ்வினி நட்சத்திரத்தன்று, சிவ பெருமானுக்கு அன்னாபிசேகம் செய்யப்படுகிறது. சஷ்டித் திருவிழா ஆறு நாட்களுக்குக் கொண்டாடப்பட்டு, சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. ஏழாம் நாள் விழாவில், முருகப்பெருமானுக்கு வள்ளி, தேவசேனையுடன் மணம் நடக்கிறது.


கார்த்திகை


தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் கிருத்திகை நட்சத்திரத்தன்று "கார்த்திகை தீபம்" கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தின் கடைசி நாளில் "108 சங்காபிஷேகம்" செய்யப்படுகிறது.


மார்கழி


தமிழ் மாதமான மார்கழி மாதத்தின் திருவாதிரை நட்சத்திரத்தன்று, நடராஜ அபிஷேகம் எனும் சிறப்பு வழிபாடு ஆடும் சிவபெருமானுக்கு செய்யப்படுகிறது. ஊர்வலமாக, விழத் தெய்வங்கள் மக்களுக்குக் காட்சி வழங்குகின்றனர். ஏகாதசி நாள் வைகுண்டம் அடைவதற்கான நாளாகும். இவ்விழாவைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளின் ஊர்வலம் நடக்கிறது.


தை


தமிழ் மாதமான தை மாதத்தின் பூச நட்சத்திரத்தன்று "தீர்த்தத்திருவிழா" கொண்டாடப்படுகிறது.


மாசி


மகாசிவராத்திரி சிவா பெருமானின் ஆசிகளையும் ஆனந்தமும் பெறக் கொண்டாடப்படும் சைவத் திருவிழாவாகும்.


பங்குனி


தமிழ் மாதமான பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திரத்தன்று முருகனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது.


நலத் திட்டங்கள்

அன்னதானத் திட்டம்


அன்னதானத் திட்டம் இக்கோவிலில் 15.8.2002 அன்று தொடங்கப்பட்டது. தினமும் குறைந்தது 120 பக்தர்கள், மதியம் 12.15 மணியளவில், சுவையான உணவினை உண்ணுகின்றனர். விருப்பப்படுவோர், ரூ.15000 கட்டினால், அத்தொகையிலிருந்து வரும் வட்டியை வைத்து, ஆண்டுக்கு ஒரு நாள் அன்னதானம் செய்யப்படும். மேலும், ரூ.1250-க்கு ஒரு நாள் அன்னதானம் செய்யப்படுகிறது. விருப்பப்படுவோர், திருக்கோவில் நிர்வாக அதிகாரியை அணுகலாம். இந்த நன்கொடைகளுக்கு வருமானவரிச் சட்டத்தின் 80G பிரிவின் கீழ் வரிவிலக்கு உண்டு.


போக்குவரத்து வசதிகள்

இத்தலம் ஈரோடு - திருச்சி, மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் இங்கு வர புகைவண்டி வசதிகளும் உள்ளன. ஈரோட்டிலிருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் புகைவண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.கொடுமுடியை அடிய புகைவண்டி மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.


  • திருச்சி - கொடுமுடி இடையிலான தொலைவு 100 கி.மீ.
  • கோயம்புத்தூர் - கொடுமுடி இடையிலான தொலைவு 120 கி.மீ.
  • மாவட்டத் தலைநகரான ஈரோடு, கொடுமுடியிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • கரூர் 26 கி.மீ. தொலைவில் உள்ளது.


வான் வழிப் போக்குவரத்து

  • சென்னை - திருச்சி விமானநிலையம் - கரூர் - கொடுமுடி
  • சென்னை - கோயம்புத்தூர் விமானநிலையம் - ஈரோடு - கொடுமுடி


மக்கள் வாழ்க்கை கணக்கியல்

As of 2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி[2], கொடுமுடியின் மக்கள்தொகை 12,669 ஆகும். இங்குள்ள மக்களுள் 50 விழுக்காடு ஆண்களும், 50 விழுக்காடு பெண்களும் ஆவர். கொடுமுடியின் கல்வியறிவு விகிதம் 70 விழுக்காடாகும். இது நாட்டின் கல்வியறிவு விகிதமான 59.5 விழுக்காட்டினைவிட அதிகமாகும். ஆண்கள் கல்வியறிவு விகிதம் 77 விழுக்காடாகவும், பெண்கள் கல்வியறிவு விகிதம் 62 விழுக்காடாகவும் உள்ளன. கொடுமுடியில், எட்டு விழுக்காடு மக்கள் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.


கல்வி நிறுவனங்கள்


சுட்டுக்கள்

  1. Falling Rain Genomics, Inc - Kodumudi
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.


எஸ்.எஸ்.வி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, கொடுமுடி


வார்ப்புரு:Erode-geo-stub

"https://tamilar.wiki/w/index.php?title=கொடுமுடி&oldid=202123" இலிருந்து மீள்விக்கப்பட்டது