நல்லாதனார்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:30, 29 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{குறுங்கட்டுரை பொது}} {{Refimprove}} '''நல்லாதனார்''' என்பவர் திரிகடுகம் என்ற உயிர் மருத்துவ நூலை ஆக்கியவர். ஆதனார் என்பது இவரது இயற்பெயர். ‘நல்’ எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

நல்லாதனார் என்பவர் திரிகடுகம் என்ற உயிர் மருத்துவ நூலை ஆக்கியவர். ஆதனார் என்பது இவரது இயற்பெயர். ‘நல்’ என்பது அடைமொழி. காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும். கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ அல்லது இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம் என்று சொல்லப்பெறும். (பிங்கல நிகண்டு, 352)

"https://tamilar.wiki/w/index.php?title=நல்லாதனார்&oldid=96402" இலிருந்து மீள்விக்கப்பட்டது