தர்மன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Wikiarish பயனரால் செய்யப்பட்ட 13:09, 2 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (சத்திரத்தான் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3785425 இல்லாது செய்யப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வழிமாற்றுப் பக்கம்
Jump to navigation Jump to search

1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டியார்  இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், இணுவில் என்ற ஊரைச் சேர்ந்தவர். இலங்கைத் தமிழரான தர்மன் சண்முகரத்தினம் லண்டனில் பொருளாதாரம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.சிங்கப்பூரின் புதிய பிரதமராக தர்மன் சண்முகரத்தினம் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். பொருளாதார நிபுணரான சண்முகரத்தினம் இதற்கு முன்பு சிங்கப்பூர் துணைப் பிரதமராக இருந்திருக்கிறார்.

சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு 01/09/2023 தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி சார்பாக அதிபர் பதவிக்கு முன்னாள் துணைப் பிரதமரும், பொருளாதார நிபுணருமான தர்மன் சண்முகரத்தினம் போட்டியிட்டார். 1959-ம் ஆண்டிலிருந்து நீண்டகாலம் ஆட்சியில் இருந்த மக்கள் செயல் கட்சி ஊழல் பிரச்னையில் சிக்கித்தவித்தது. அதிபர் பதவிக்கான தேர்தலில் தர்மன் சண்முகரத்தினத்தை எதிர்த்து மேலும் இரண்டு பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தல் நேற்று நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் உடனுக்குடன் எண்ணப்பட்டன.

Loaded: 10.96%

இந்தத் தேர்தலில் 66 வயதாகும் தர்மன் சண்முகரத்தினம், 70.4 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதைத் தேர்தல் அதிகாரி டான் மெங்க் முறைப்படி அறிவித்தார். சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்தினம் தேர்வுசெய்யப்பட்டு இருப்பதாக அவர் அறிவித்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக ஹலிமா யாக்கோப் அதிபராக இருந்துவருகிறார். அவரது பதவிக்காலம் வரும் 13-ம் தேதியோடு முடிவடைகிறது.

அவருக்கு பதில், இனி தர்மன் சண்முகரத்தினம் அதிபராக இருப்பார். தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்பாக தர்மன் சண்முகரத்தினம் அளித்த பேட்டியில், ``சிங்கப்பூரில் இது நம்பிக்கை வாக்கெடுப்பு என்று நான் நம்புகிறேன். இது நாம் ஒன்றாக முன்னேறக்கூடிய எதிர்காலத்துக்கான நம்பிக்கையின் வாக்கெடுப்பு” என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் இதுவரை சீனாவைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் அதிபர்களாகத் தேர்வுசெய்யப்பட்டுவந்தனர். இதற்கு முன்பு சிங்கப்பூரில் நிதியமைச்சர் உட்பட பல்வேறு துறை அமைச்சராக தர்மன் சண்முகரத்தினம் இருந்திருக்கிறார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில், ``சிங்கப்பூர் மக்கள் எனக்கு அளித்திருக்கும் ஆதரவுக்கு உண்மையிலேயே மதிப்பளித்து, அதைக் காப்பாற்றுவேன்.

எனக்கு அளிக்கப்பட்ட வாக்கு சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்ட வாக்காகும்” என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு சிங்கப்பூரில் செல்லப்பன் ராமநாதன் மற்றும் தேவன் நாயர் ஆகியோர் தமிழர் வம்சாவளி அதிபர்களாக இருந்திருக்கின்றனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=தர்மன்&oldid=391233" இலிருந்து மீள்விக்கப்பட்டது