எண்ணு வண்ணம்
Jump to navigation
Jump to search
வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
எண்ணு வண்ணம் என்பது செய்யுளின் தொடைவகையில் நிகழும் நடை. பாடலில் சில பொருள்களை அடுக்கி இத்தனை என எண்ணிக் காட்டும்.
- இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்படுகின்றன.
நிலம்நீர் வளிவிசும் பென்ற நான்கின்
அளப்பரியளயே
நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல்
ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை [1]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ பதிற்றுப்பத்து 14