கற்பூர மரம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

கற்பூரம் (தாவர வகைப்பாட்டியல்: Cinnamomum camphora) நறுமணம் வீசும் வெண்மையான படிகம் போன்ற பொருள். ஜப்பானியர்களால் இது தெய்வீகமானது என்று கருதப்படுகிறது. இது கற்பூர மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது, செயற்கையாகவும் தயாரிக்கப்படுகின்றது. இதைக் கொண்டு செல்லுலோஸ், வெடி மருந்துப் பொருள், தொற்று தடை மருந்து, மெருகெண்ணெய் முதலியவற்றைத் தயாரிக்கின்றனர். பூச்சி அரிக்காமல் தடுக்கும் மருந்துப்பொருட்களிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள். கற்பூர மரத்தின் தாவரவியல் பெயர் சின்னமோமம் கம்போரா (cinnamomum camphora) என்பதாகும். இதன் தாயகம் சீனா. ஜப்பானில் பல தீவுகளில் காடுபோல் இவை வௗர்ந்திருக்கின்றன. முன்னர் கற்பூர மரத்தின் பட்டைகளிலிருந்து கற்பூரம் எடுத்தனர். இப்போது மரப்பட்டை, இலை, மரம் ஆகியவற்றிலிருந்து கற்பூரம் எடுக்கப்படுகிறது.[1]

சான்றுகள்

  1. புத்தகம்; தாவர உலகிலே 100, ஆசிரியர் என்.சீனிவாசன்,பக்கம்;184
"https://tamilar.wiki/w/index.php?title=கற்பூர_மரம்&oldid=318067" இலிருந்து மீள்விக்கப்பட்டது