கலத்தப்பம்
Jump to navigation
Jump to search
Kalathappam | |
| மாற்றுப் பெயர்கள் | Kalthappam |
|---|---|
| பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு |
| தொடங்கிய இடம் | இந்தியா |
| பகுதி | வட மலபார் |
| ஆக்கியோன் | உத்ர மலபார் |
| முக்கிய சேர்பொருட்கள் | அரிசி மாவு, தேங்காய், சின்ன வெங்காயம், வெல்லம், முந்திரி |
கலத்தப்பம் (Kalathappam) என்பது கேரளத்தில் வடக்கு மலபார் கடற்கரைப் பகுதிகளி, குறிப்பாக கண்ணூர் காசர்கோடு பகுதிகளில் வாழும் மக்களின் சிற்றுண்டி வகை ஆகும். மங்களூரில் பெர்ரி பகுதியில் வாழும் இசுலாம் சமூக மக்கள் இதனை கலத்தப்பா எனவும் அழைப்பர்.
தேவையான பொருள்கள்
சிவப்பு அரிசி, நீர், தேங்காய் எண்ணெய், வெல்லம், வதக்கிய பெரிய வெங்காயம் அல்லது சிறிய வெங்காயம், தேங்காய் துருவல்கள், கொத்துமல்லி இலை.
செய்முறை
பாரம்பரியமாக காசர்கோடில் கலத்தப்பத்தை சமைக்கும் முறையானது பிற இடங்களிலிருந்து சற்று வேறுபட்டது. அரிசி மாவு, தேங்காய் துருவல்கள், வறுத்த வெங்காயம், கொத்துமல்லி இலை ஆகியவை நீர் சேர்த்து நன்கு கலக்கப்படும். நன்கு காய்ந்த தேங்காய் எண்ணெயில் தோசை போல் வார்த்து, பொன்னிறமாக வெந்ததும் சூடாக பரிமாறப்படுகிறது.[1]