சூர்ய மல்லர்
Jump to navigation
Jump to search
| சூர்ய மல்லர் | |
|---|---|
| காந்திபூரின் அரசன் | |
| ஆட்சிக்காலம் | 1520-1530 |
| முன்னையவர் | இரத்ன மல்லர் |
| பின்னையவர் | அமர மல்லன் |
| பிறப்பு | நேபாளம் |
| இறப்பு | 1530 நேபாளம் |
| அரசமரபு | மல்லர் வம்சம் |
| தந்தை | இரத்ன மல்லர் |
சூர்ய மல்லர்' (Surya Malla) மல்லர் வம்சத்தின் மன்னரான இவர் காந்திபூரின் இரண்டாவது மன்னராகவும் இருந்தார். இவர் தனது தந்தை இரத்ன மல்லருக்குப் பிறகு 1520 முதல் 1530 வரை ஆட்சி செய்தார்.[1]
ஆட்சி
நேபாளத்தின் வம்சாவளி மற்றும் பத்மகிரியின் வம்சாவளி ஆகியவற்றின் படி, இவர் காத்மாண்டு சமவெளியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு பழங்கால நெவார் நகரமான சங்குவைக் கைப்பற்றி அதைத் தனது தலைநகராக மாற்றினார்.[2] 1526இல், பால்ப இராச்சியத்தைச் சேர்ந்த முகுந்தா சென் காத்மாண்டு சமவெளி முழுவதையும் தாக்கினார். ஒரு காலத்தில் காந்திபூர் மற்றும் இலலித்பூர் இரண்டையும் சுற்றி வளைத்தார்.
சூர்ய மல்லர் 1530இல் இறந்தார். இவருக்குப் பிறகு இவரது மகன் அமர மல்லன் ஆட்சிக்கு வந்தார்.[3]
மேற்கோள்கள்
- ↑ Siddika, Shamima (1993). Muslims of Nepal. Kathmandu: Gazala Siddika.
- ↑ Shrestha, Bal Gopal (2012). The Sacred Town of Sankhu: The anthropology of Newar Ritual, Religion and Society in Nepal. Newcastle upon Tyne: Cambridge Scholars. p. 57. ISBN 9781443838252.
- ↑ Shaha, Rishikesh. Ancient and Medieval Nepal (PDF). University of Cambridge. p. 61.