ஆள்கூறுகள்: 10°55′0″N 76°18′0″E / 10.91667°N 76.30000°E / 10.91667; 76.30000

செத்தல்லூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
செத்தல்லூர்

சிற்றூர்
செத்தல்லூர் is located in கேரளம்
செத்தல்லூர்
செத்தல்லூர்
கேரளத்தில் அமைவிடம்
செத்தல்லூர் is located in இந்தியா
செத்தல்லூர்
செத்தல்லூர்
செத்தல்லூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°55′0″N 76°18′0″E / 10.91667°N 76.30000°E / 10.91667; 76.30000
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
பரப்பளவு
 • மொத்தம்7 km2 (3 sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
678609
வாகனப் பதிவுKL-

செத்தல்லூர் (Chethallur) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இந்த கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 5,000 ஆகும். முறியங்கண்ணி பாலம் கட்டப்பட்டதன் மூலம் இந்த கிராமம் ஊடக கவனத்தைப் பெற்றது.[1] இதனால் கோழிக்கோடு மற்றும் பாலக்காடு இடையே வாகனப் பயணத் தூரமானது சுமார் 10 கி.மீ. அல்லது 6.21 மைல்கள் குறைந்தது.

கோயில்களும் திருவிழாக்களும்

பனம்குருசிகாவு பகவதி கோயில் செத்தல்லூரில் அமைந்துள்ளது. பனம்குருச்சிக்காவு பூரம் என்பது செத்தல்லூரில் நடக்கும் திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும், பூரத்தின் இறுதி நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட யானைகள் "எழுந்நல்லிப்பில்" பங்கேற்கின்றன. பூரம் திருவிழா மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

அருகில் உள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது இந்த ஊரிலிருந்து (100 கி.மீ. அல்லது 62.1 மைல்) தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் அங்காடிப்புரத்தில் (20 கி.மீ. அல்லது 12.4 மைல்) உள்ளது.

நாராநாத் பிராந்தன் (நரநாமிகளின் பைத்தியக்காரன் என்றும் அழைக்கப்படுகிறார்) என்ற நாட்டுப்புறக் கதாப்பாத்திரம், செத்தல்லூரில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அவன் சிறுவனாக வளர்ந்தவுடன், ஒரு விசித்திரமான பொழுதுபோக்கை மேற்கொண்டான்-பெரிய கற்பாறைகளை தனது வீட்டிற்கு அருகிலுள்ள மலையிலிருந்து உருட்டினான் எனப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "CM inaugurates Muriyankanni Bridge". News18. Retrieved 2020-08-17.
"https://tamilar.wiki/w/index.php?title=செத்தல்லூர்&oldid=368734" இலிருந்து மீள்விக்கப்பட்டது