நந்தி மித்ர

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

நந்தி மித்ர காவன்தீசனின் பத்துத் தளபதிகளில் ஒருவனாவான்.இவன் உடல் வலிமையாலேயே முக்கியத்துவம் பெறுகின்றான்.

இளமைக்காலம்

அனுராதபுரத்தை ஆட்சி செய்த எல்லாளனின் கீழ் மித்ரன் என்ற சிங்கள சேனாதிபதி இருந்தான். இச்சேனாதிபதிக்கு சித்திர மலைக்கு அருகிலுள்ள கிழக்கு ஜில்லாவில் உள்ள நிர்வாகத்தில் ஒரு தங்கை இருந்தாள். அவனது தங்கையின் மகனே நந்தி மித்ரா ஆவான்.குழந்தைப் பருவத்தில் இவனை தோல் பட்டியால் திரிகைக் கல்லுடன் கட்டிவிட்டுச்செல்வர். இவன் அக்கல்லை இழுத்துக் கொண்டு அங்கும்இங்கும் தவழ்ந்து செல்வான். ஒரு நாள் வீட்டிற்கு அருகிலிருந்த மூங்கில் மரத்தில் கட்டப்பட்ட சந்தர்ப்பத்தில் அதையும் இவன் கழற்றிவிட்டான். 10 யானைகளின் பலம் இருந்ததாக மகாவம்சம் கூறுகிறது.

படிமம்:Nandimithra.jpg
நந்தி மித்திரன்

பெயர் வந்த காரணம்

இவனது மாமாவின் பெயரால் மித்ர என்று அறிமுகமானதுடன்,இடுப்பில் தோல் பட்டியால் கட்டப்பட்டதால் நந்திமித்ர எனப்பட்டான்.

சிறப்பு

அரசன் பலத்தை பரிசோதிக்க அனுப்பிய கண்டுல யானையையும் தந்தங்களைப் பிடித்து அடக்கினான். காமனி எல்லாள யுத்ததின் போது இதே யானையை பயன்படுத்தி கோட்டையின் இரும்புக்கதவுகளை பெயர்த்தெறிந்தான். இச்சம்பவத்தின் போது இரும்புக்கதவுகள் யானையின் மேல் விழுந்தன. ஆனால் இவன் அவைகளை தனது கரங்களால் பிடித்து யானையை காப்பாற்றினான்.

பணி

பிற்காலத்தில் இவன் காவன்தீசனின் படையில் சேர்க்கப்பட்டான்.துட்டகைமுனு, எல்லாளன் யுத்தத்தில் பெரும் பணியாற்றினான்.அரசன் பலத்தை பரிசோதிக்க அனுப்பிய யானையையும் தந்தங்களைப் பிடித்து அடக்கினான்.

மேற்கோள்கள்

[1]

[2][3]

  1. [://mahavamsa.org/mahavamsa/original-version/23-levying-warriors/ "மகாவம்சம்"]. {{cite web}}: Check |url= value (help)
  2. "Mahavamsam".
  3. "Sunday times".
"https://tamilar.wiki/w/index.php?title=நந்தி_மித்ர&oldid=410764" இலிருந்து மீள்விக்கப்பட்டது