விதேகதேசம்
Jump to navigation
Jump to search

விதேகதேசம் இமயமலையில் கங்கை உற்பத்தியாகும் இடத்தில் தெற்கிலும், ஆரட்டதேசத்தைக் காட்டிலும் ஆழமான பூமியாகவும், கோசலதேசத்திற்கு நேர்கிழக்கிலும், அங்கதேசத்திற்கு வடக்கிலும், பரவி இருந்த தேசம்.[1]
இருப்பிடம்
இந்த தேசத்திற்கு மேற்கில் கண்டகீ நதிக்கு கிழக்கில் மலதம் என்றும், கரூசம் என்றும் இரு சிறு தேசங்கள் உண்டு. விதேகதேசம்|விதேகதேசமும் மலதம் கரூசம் ஆக இருதேசங்களும் சேர்ந்து ஒரு பெரிய அழகிய தேசமாக இருக்கும்.[2]
மலை, காடு, விலங்குகள்
இந்த தேசம் கோசலதேசத்திற்கு சமமாய் செழிப்பான தேசமாகும். இமயமலையை அடுத்து இருந்த போதும் பெரிய மலைகளோ, அடர்ந்த காடுகளோ, இல்லை. இத்தேசத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் உண்டு.
நதிகள்
இந்த ஆரட்டதேசத்தில் இமயமலையிலிருந்து உருவாகி தெற்கு நோக்கி ஓடுகிற நதி கண்டகீ இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.
கருவி நூல்
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009