அதங்கோடு

imported>Shriheeran பயனரால் செய்யப்பட்ட 04:17, 30 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (top: திருத்தம், removed: {{சான்றில்லை}} using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

அதங்கோடு (Athencode) குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் விளவங்கோடு வட்டத்தில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது.[3] தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் பிறந்தது இவ்வூர் ஆகும். இவ்வூரின் வடக்கே கருப்பட்டியாலுமூட்டி, தெற்கே முளமூட்டுக்கடவு, கிழக்கே மடிச்சல், மேற்கே மணக்காலை ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. இவ்வூரை ஒட்டி தாமிரபரணி ஆறு பாய்கிறது. இந்த ஆறு, அதங்கோட்டில் அஞ்சாலி கடவு முதல் ளமூட்டுக்கடவு , செங்கிலாகம் கடவு , நொத்தோலி கயம் (மண்ணடிக்கடவு), ஆலஞ்சாலி கடவு மற்றும் குந்திரிமூட்டுக்கயம் வரை வடக்கு தெற்காக பாய்கிறது. இங்குள்ள ஆனந்தநகரில் பழமை வாய்ந்த மாயா கிருசுணசாமி கோயில் அமைந்துள்ளது.

அதங்கோடு
அதங்கோடு
இருப்பிடம்: அதங்கோடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°18′N 77°10′E / 8.30°N 77.17°E / 8.30; 77.17
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "அதங்கோட்டின் அமைவிடம்".
"https://tamilar.wiki/w/index.php?title=அதங்கோடு&oldid=240496" இலிருந்து மீள்விக்கப்பட்டது