அன்னி

imported>TNSE arunbharathi DGL பயனரால் செய்யப்பட்ட 17:30, 2 செப்டெம்பர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இக்காலத்து அன்னியூர் என்னுமிடத்தில் இருந்துகொண்டு சங்ககாலத்தில் ஆண்ட மன்னன் அன்னி. இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது.

அன்னியின் காவல்மரமான புன்னை மரத்தை குறுக்கைப் பறந்தலைப் போரில் வென்ற திதியன் வெட்டிச் சாய்தபோது போர் வெற்றியை யாழ் மீட்டிப் பாடும் வயிரியர் ஆரவாரம் செய்தனர்.[1]

எவ்வி அரசன் நன்மொழி கூறி அடக்கிவைத்ததைப் பொருட்படுத்தாமல் திதியனோடு போரிட்டு அன்னி மாண்டான்.[2] [3]

அன்னி பெரியவன்தான். என்றாலும் இருபெரு வேந்தர் அவனினும் பெரியர். அதனால் போரில் வென்ற இருபெரு வேந்தர் அன்னியின் புன்னைமரத்தை வெட்டிச் சாய்த்துவிட்டனர். [4]

இருபெரு வேந்தர் என்று இங்குக் குறிப்பிடப்படுபவர்கள் சோழனும் பாண்டியனும் ஆவர்.

வரலாற்றுச் சான்று

  1. வெள்ளிவீதியார் - அகம் 45
  2. நக்கீரர் - அகம் 126,
  3. கயமனார் அகம் 145
  4. (புலவர் பெயர் இல்லை) நற்றிணை 180
"https://tamilar.wiki/w/index.php?title=அன்னி&oldid=247416" இலிருந்து மீள்விக்கப்பட்டது