எலிவை மலை

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 12:26, 4 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்

எலிவை மலை (ஆங்கிலம்: Elivai Malai, மலையாளம்: ഏലിവ മല) தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் 2088 மீட்டர் உயரமுள்ள ஒரு சிகரமாகும் [1]. இம்மலை இந்தியாவின் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கும், தமிழ்நாடு மாநிலம் கோயம்பத்தூர் மாவட்டத்திற்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. 1540 மீட்டர்கள் [2] நில முக்கியத்துவம் பெற்ற இம்மலை தெற்காசியாவின் மிகமுக்கிய சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாலக்காட்டு கணவாய்க்கு வடக்கில் மேற்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த புள்ளியாக உருவாகியுள்ளது.

எலிவை மலை
Eliva Malai
ഏലിവ മല
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
உயர்ந்த புள்ளி
உயரம்2,088 m (6,850 அடி)[1]
புடைப்பு1,540 m (5,050 அடி)[1]
பட்டியல்கள்அல்ட்ரா
புவியியல்
அமைவிடம்பாலக்காடு, கேரளா மற்றும் கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா
மூலத் தொடர்மேற்கு தொடர்ச்சி மலை

சிறுவாணி அணை மற்றும் நீர்தேக்கத்திற்கு அருகில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் எலிவை மலை இருக்கிறது. கோவையின் குற்றாலம் என்றழைக்கப்படும் சிறுவாணி நீர்வீழ்ச்சியும் ஆராளம் அட்லா நீர்வீழ்ச்சியும் இங்கு காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Elivai Malai, India". Peakbagger.com. Retrieved 28 November 2012.
  2. "Southern India Mountain Ultra-Prominence". Peaklist.org. Retrieved 28 November 2012.
"https://tamilar.wiki/w/index.php?title=எலிவை_மலை&oldid=299534" இலிருந்து மீள்விக்கப்பட்டது