சுபலன்

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 09:22, 12 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சுபலன் என்பவன் மகாபாரத இதிகாசத்தில் வரும் ஒரு கதை மாந்தராவார். சுபலன் காந்தார நாட்டின் மன்னன். (இந்நாடு தற்போது ஆப்கானிஸ்தானில் ஒரு முக்கிய நகராக உள்ளது.) இவரின் மகன் சகுனி. சிவபக்தையான காந்தாரி இவரது மகள். பீஷ்மர் சுபலனின் காந்தார தேசம் சென்று, இரு கண் பார்வையற்ற திருதராட்டிரனுக்கு மணமுடிக்க காந்தாரியை பெண் கேட்க, சுபலன் மறுத்த போதிலும், காந்தாரி தானே முன்வந்து கண்களில் துணியைக் கட்டிக் கொண்டு, திருதராட்டிரனை மணம் முடிக்க ஒப்புக் கொண்டாள்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சுபலன்&oldid=364973" இலிருந்து மீள்விக்கப்பட்டது