பதுமனார்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 05:45, 29 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''பதுமனார்''' சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 6 எண் கொண்ட பாடல். ==பாடல் சொல்லும் செய்தி== நட்டநடு நிசியில் எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

பதுமனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 6 எண் கொண்ட பாடல்.

பாடல் சொல்லும் செய்தி

நட்டநடு நிசியில் எந்த அரவமும் இல்லை. எல்லாரும் நிம்மதியாக உறங்குகின்றனர். நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கிறேன்.

திருமண நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டதால், தலைவி துடிக்கிறாள். தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

பாடல்

நள் என்றன்றே யாமம் சொல் அவிந்து

இனிது அடங்கினரே மாக்கள், முனிவு இன்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓஒர் யான் மன்ற துஞ்சாதோனே.

"https://tamilar.wiki/w/index.php?title=பதுமனார்&oldid=96230" இலிருந்து மீள்விக்கப்பட்டது